Try GOLD - Free
தமிழ்ப் பெருந்தொண்டர் மங்கலங்கிழார் கொண்டாடப்படுவது ஏன்?
Penmani
|August 2024
சொல்லிலும் செயலிலும் 'தமிழ்' 'தமிழ்' என்று வாழ்ந்தார் மங்கலங்கிழார்.

வட எல்லை மீட்புப் போராட்டங்களில் ஈடு பட்டார். ஊர் ஊராகப் போய் தமிழ் வளர்த்தார். இந்த தமிழ் மாமுனிவரை தமிழ் இளைய சமுதாயம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
அரக்கோணம் அருகே புளியமங்கலம் கிராமத்தில் அய்யாசாமி- பொன்னுரங்கம்மாள் தம்பதியினருக்கு 1895 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் பிறந்தார் மங்கலங்கிழார். இவருடைய இயற்பெயர் குப்பன் ஆகும்.
உள்ளூரில் ஐந்தாம் வகுப்பு மட்டுமே படித்தார் குப்பன். மேல் வகுப்பில் சேர்ப்பதற்காக இவரைத் தம்முடன் சென்னைக்கு அழைத்துச் சென்றார்தமக்கை. பச்சையப்பன் பள்ளியில் சேர்க்கப்பட்டார் குப்பன்.

தமிழ் மீது கொண்டிருந்த அதிகப்பற்றின் காரணமாக, தமிழறிஞர் சேஷாசலம் ஐயர் நடத்தி வந்த இரவு பள்ளியில் சேர்ந்தார். தொடர்ந்து, இலக்கணப் புலி கோவிந்தராசு முதலியாரிடம்தமிழ் இலக்கணம் பயின்றார். தேசப் பெரும் தியாகியும் தமிழறிஞருமான வ.வு.சி.யுடன் நட்பு கொண்டு திருக்குறளின் சிறப்புகளை முழுவதுமாக பயின்றார்.
இவருக்கு தமிழ் மீது இருந்த ஆர்வத்தை கண்ட கோவிந்தராசு முதலியார், கலவை கண்ணன் செட்டியார் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் பணியில் இவரை சேர்த்து விட்டார். 15 ஆண்டுகள் இப்பணியை மனதார நேசித்து செய்தார்.
ஊர் மணியக்காரர் ஆக இருந்த தந்தையார் மறைந்து விடவே, இவர் மீது கொண்டிருந்த மரியாதையின்காரணமாக ஊர்மக்கள் இவரை ஊர் மணியக்காரராக பொறுப்பேற்கும்படி கூறினர். இவரை மங்கலங் கிழார் என்று அழைத்தனர்.
This story is from the August 2024 edition of Penmani.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 9,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Penmani

Penmani
ஆதி காலம் முதல் நவீன காலம் வரை பூட்டு சாவிகளுக்கான கண்காட்சி!
பாதுகாப்பு தொடர்பான எண்ணம் மனிதனின் மனதில் தோன்றிய நாளிலிருந்து பூட்டுக்கான தேவையும் தொடங்கிவிட்டது.
1 min
August 2025

Penmani
விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டைகள்!
ஆங்கில மாதமான ஆகஸ்ட் மாதம் பிறந்துவிட்டாலே ஆடி ஆவணி மாதங்களில் அனைத்து பண்டிகைளும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து நம்மை இன்பத்தில் ஆழ்த்தும்.
4 mins
August 2025
Penmani
வாழ்வை சீர்படுத்துவது எண்ணங்களே!
பிறந்ததன் பயனை வாழ்வு சொல்ல வேண்டுமெனில், வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என தீர்மானிப்பது நம் எண்ணங்கள் தான்.
1 min
August 2025

Penmani
எங்கள் வீட்டில் ஒருவராக வாழும் இசை!
சங்கீதத்தை மூச்சாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்தவரும், பிரபல நடனக்கலைஞர்களுடன் இணைந்து செயல்பட்டுக்கொண்டிருப்பவரும், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தி வருபவரும், Finance Management- ல் மேற்படிப்பு படித்தவரும், சங்கீதத்துடன் வயலினையும் கற்று, இரண்டையும் திறமையாக கையாண்டு வருபவருமாகிய இசைக் கலைஞர் திருமதி அம்ரிதா முரளி பெண்மணிக்காக அளித்த பேட்டி:
4 mins
August 2025

Penmani
அரபிக் கடலின் ராணி கொச்சி!
கடவுளின் தேசம் என்று அழைக்கப்படுகிற கேரள நாட்டிற்கு எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் போய் வரலாம் என்று நினைக்கிற எத்தனையோ ஆயிரம் பேர்களில் ஒருத்தி நான். இன்னும் கூட இவர்கள் சாதிகளை தங்கள் பெயருக்கு பின்னால் சுமந்து கொண்டிருக்கிறார்கள் தான் என்றாலும் இயற்கை அள்ளிக் கொடுத்திருக்கிற பேரழகை இன்னும் கட்டி காத்து வருகிறார்கள் என்பதால் அந்த வகையில் பாராட்டுக்குரியவர்கள் தான்.
3 mins
August 2025

Penmani
குழந்தைகளின் எதிர்காலம் பெற்றோரின் கையில்...
மனித வாழ்வின் மிக ஆரோக்கியமான வயதான பதின் பருவத்தில் இருப்பவர்கள் பல காரணங்களால் விபரீதமான முடிவுகளை நாடுகிறார்கள். சிறிய தோல்வியும் அவர்களை நிலைகுலைய வைக்கிறது.
1 mins
August 2025

Penmani
கருணை நிறைந்த கிழங்கு!
கருணை கிழங்கில் நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி, மாங்கனிஸ், பொட்டாசியம், இரும்புச் சத்து, ரைபோபிளவின் போன்ற சத்துகள் உள்ளன.
1 mins
August 2025

Penmani
சம்யுக்கையின் வேம்புலி.!
கூந்தலை கொண்டையாய் போட்டுக் கொண்டே 'அம்மா காபி' என்று குரல் கொடுத்த சம்யுக்தாவின் கவனம் வாசற்புறச் சந்தடியில் சென்றது.
4 mins
August 2025

Penmani
தமிழ் இலக்கிய உலகில் தனித்துவமான எழுத்தாளர் நகுலன்!
தமிழ் இலக்கியப் பெருங்கடலில் நீந்தி இன்பம் தோய்க்க விரும்புவோர் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய எழுத்தாளர் நகுலன்.
2 mins
August 2025

Penmani
விநாயகருக்கான லட்டு ரூ. 30 லட்சத்துக்கு ஏலம்!
தெலங்கானா மாநிலத்தின் தலைநகரம் ஐதராபாதில் ஒவ்வொரு ஆண்டும் பிள்ளையார் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யும் உற்சவம் பதினோரு நாட்கள் விமரிசையாக நடைபெறுகிறது.
2 mins
August 2025
Translate
Change font size