Try GOLD - Free

கால் நூற்றாண்டு கடந்தும் நினைவூட்டப்படும் அஷ்ரஃப்

Virakesari Daily

|

September 15, 2025

சுதந்திர இலங்கையின் வரலாற்றில் அரசியல், சமூக, பொருளாதார நெருக்கடிகள், மதவாத, இனவாதத்தின் கெடுபிடிகள் மற்றும் தாக்குதல்களை எதிர்கொண்டதொரு சமூகமாக இந்நாட்டு முஸ்லிம்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். முஸ்லிம்களின் இனத்துவ, தனித்துவ கலை, கலாசார, மத விவகாரங்கள், அடையாளங்கள் தொடர்பில் கடந்த காலங்களில் அதிகளவில் பேசப்பட்டு இருக்கிறது. தற்போதும் பேசப்பட்டு வருகிறது. முஸ்லிம்களின் தனித்துவ விவகாரங்கள் பலவற்றைச் சுட்டிக்காட்டி அவை குறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் அவ்வப்போது பொதுத்தளங்களில் வெளிப்படையாக முன்வைக்கப்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகிறது.

முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பில் அடிக்கடி பேசப்படுவதை இதற்கோர் உதாரணமாகக் குறிப்பிடலாம். இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம் அரசியல், சிவில் சமூக மற்றும் ஆன்மீகத் தலைமைகளினது தீர்மானங்கள், கருத்துகள், செயற்பாடுகள் சமூக ஆரோக்கியத்தை முன்னுரிமைப்படுத்துவதாக அமைய வேண்டும் என்பதும் முஸ்லிம் சமூகத்தின் நீண்டகாலக் கோரிக்கையாகும்.

2024இல் நடைபெற்ற ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள், கடந்த மே மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் என்பவற்றில் முஸ்லிம்களின் வாக்குப்பலம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்பது அறிந்தவைதான். தற்போது மாகாண சபைத் தேர்தல் பற்றி பேசப்பட்டு வருகிறது. நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் வாக்காளர்களின் வாக்குகள் எவ்வாறு பலம் மிக்கதாக அமையப்போகிறது என்பதை எதிர்காலமே தீர்மானிக்கும்.

இதேவேளை, கடந்த காலங்களில் கற்றுக்கொண்ட பாடல்கள் கசப்பான அனுபவங்களை கறுப்புப்பக்கங்களாக எழுத வைத்திருக்கிறது; எதிர்கால சமூக ஆரோக்கியத்துக்கான செயற்பாடுகளுக்கு ஆதாரங்களை வழங்கியிருக்கிறது. அவை முன்னுதாரணங்களாகக் கொள்ளப்படுவதுடன், வாழ்ந்து மறைந்த அரசியல் தலைமைகளின் சமூகம் சார்ந்த வழிகாட்டல்களையும், அவர்கள் முன்னெடுத்த அரசியல் நகர்வுகளையும் அவர்கள் பதிவிட்டுச் சென்ற வரலாறுகளையும் மறக்காது பின்னோக்கிப் பார்க்க வேண்டியுமுள்ளது.

நெருக்கடிமிக்க சுமைகளை முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிய கால கட்டங்களின் போது அவற்றுக்கெதிராக குரல் கொடுக்கவும், இந்நெருக்கடிகளிலிருந்து மக்களைப் பாதுகாக்கவும், அவர்களின் வாழ்வுரிமையை உறுதிப்படுத்துவதற்குமான நடவடிக்கைகளை முன்னெடுக்க முஸ்லிம்கள் மத்தியில் சிவில் அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும், காலத்துக்குக் காலம் உருவாகியிருக்கின்றன.

இருப்பினும், சில சிவில் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்குத் தலைமை வகித்துச் செயற்பட்ட தலைவர்களின் செயற்பாடுகள் மக்கள் விரும்பிய திசையில் செல்லாது திசைமாறியபோது, இவ்வமைப்புக்கள் மற்றும் கட்சிகள் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை வீணடிக்கப்பட்டன. அத்துடன் இவ்வமைப்புக்களினதும், கட்சிகளினதும் உருவாக்கம் எந்தப் புள்ளியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டதோ அப்புள்ளியிலேயே முடிவடைந்தமையை இலங்கை முஸ்லிம் அரசியல் வரலாற்றில் காண முடிகிறது.

தனித்துவக் கட்சி

MORE STORIES FROM Virakesari Daily

Virakesari Daily

கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

யார் இந்த துனித் வெல்லாலகே?

இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.

time to read

3 mins

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை

19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?

காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்

time to read

2 mins

September 22, 2025

Virakesari Daily

செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்

காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர

இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்

பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்

கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

time to read

1 min

September 22, 2025

Translate

Share

-
+

Change font size