Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 9,500+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

தமிழ் மக்களுக்குக் கிடைத்துள்ள அதிகாரங்களை கையிலெடுத்தாலே வட -கிழக்கை பாதுகாக்க முடியும்

Thinakkural Daily

|

July 16, 2025

கடந்த அரசாங்கங்களைப் போலவே தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் தமிழ் மக்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ள விருப்பமற்றதாகவே இருக்கின்ற சூழலில் நாம் எமது நீண்ட போராட்டத்தின் விளைவாக எமக்குக் கிடைத்த மாகாணசபையைக் கையகப்படுத்தி அதன் அதிகாரங்கள் போதாது என்பதை சகலருக்கும் தெரிவித்து எமது இலக்கை நோக்கி நகர்வதே புத்திசாதுர்யமான செயற்பாடாகுமென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ். க. பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தற்போது ஆட்சியில் இருக்கும் அரசு பல்வேறுபட்ட உறுதிமொழிகளை வழங்கி ஆட்சி அதிகாரத்திற்கு வந்தது. அதில் மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படும், புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்படும், பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் முக்கியமான உறுதிமொழிகள். ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் இந்த உறுதிமொழிகள் எதுவும் நடைமுறைப்படுத்துவதற்கான ஆரம்பகட்ட முயற்சிகளோ நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் நாங்கள் மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவோம், புதிய யாப்பைக் கொண்டுவருவோம், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவோம் என்று தொடர்ச்சியாகக் கூறி வருகின்றனர்.

தற்போது முதல்முறையாக எல்லை நிர்ணய பிரச்சினைக்குத் தீர்வு கண்டபின்னரே மாகாணசபைத் தேர்தல்களை நடத்த முடியுமென்று மாகாணசபைகள் அமைச்சர் சந்தன அபேரத்தன தெரிவித்திருக்கின்றார். ஏற்கனவே அமைக்கப்பட்ட ஆணைக்குழுவினால் எல்லை மீள்நிர்ணயம் செய்த போதும் கூட அது மலையகத் தமிழ் மக்களினதும் இஸ்லாமிய மக்களினதும் பிரதிநிதித்துவத்தைக் கணிசமான அளவில் குறைக்கின்றது என்ற அடிப்படையில் எல்லை நிர்ணய சபையினால் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட எல்லை நிர்ணய முடிவுகள் கைவிடப்பட்டன.

MORE STORIES FROM Thinakkural Daily

Thinakkural Daily

தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு

தியாக தீபம் திலீபனின் 38 வது ஆண்டு நினைவு தினம் வவுனியாவில் உள்ள வாடி வீட்டில் இடம்பெற்றது.

time to read

1 min

September 23, 2025

Thinakkural Daily

'எச்1பி' விசாவுக்கு போட்டியாக 'கே' விசாவை அறிமுகம் செய்கிறது சீனா

'எச்பி' விசா பெறுவதற்கு அமெரிக்கா கடும் நிபந்தனைகளை விதித்துள்ள நிலையில், பிற நாடுகளில் இருந்து விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களை ஈர்ப்பதற்காக கே விசாவை அறிமுகப்படுத்துகிறது சீனா.

time to read

1 min

September 23, 2025

Thinakkural Daily

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க கோரி பெண் தொழிலாளி மனு தாக்கல்

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை தற்போதைய வாழ்வாதாரத்திற்கு அமைவாக அதிகரிக்குமாறு கோரி, உயர் நீதிமன்றத்தில் பெண் தொழிலாளி ஒருவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.

time to read

1 min

September 23, 2025

Thinakkural Daily

வட்டுவாகலில் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்

வட்டுவாகல் பகுதியில் இனந்தெரியாதோரால் நேற்று திங்கட்கிழமை அதிகாலை வீடு ஒன்றுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Thinakkural Daily

காற்றாலை கனிய மணல் அகழ்வுக்கு எதிராக மன்னார் போராட்டத்தின் 50 ஆவது நாள்; தீப்பந்தம் ஏந்தி மக்கள் கடும் எதிர்ப்பு

மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் போராட்டம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை 50 ஆவது நாளை எட்டிய நிலையில் அன்று இரவு தீப்பந்த போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

time to read

1 min

September 23, 2025

Thinakkural Daily

ஜனாதிபதி அநுரகுமார ஜப்பானுக்கு விஜயம்

ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

time to read

1 min

September 23, 2025

Thinakkural Daily

நாகர்கோவில் ம.வி.படுகொலையின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

21 மாணவர்கள் உட்பட 39 பேருக்கும் அஞ்சலி

time to read

1 min

September 23, 2025

Thinakkural Daily

எமக்காக தனது உயிரைக் கொடுத்த திலீபனுக்காக உதிரம் கொடுப்போம்

நல்லூரில் இரத்ததான முகாம்

time to read

1 min

September 23, 2025

Thinakkural Daily

கண்டி நகருக்கு சுற்றுலா வந்த 5 மாணவர்கள் திடீர் மயக்கம்

கண்டி நகருக்கு சுற்றுலா வந்த ஐந்து மாணவர்கள் உணவு ஒவ் வாமை காரணமாக, மயக்கமுற்ற சம்பவம் இடம் பெற்றுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Thinakkural Daily

நல்லூர் மந்திரிமனையைப் பாதுகாக்குமாறு வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம்

மன்னர் சொத்தை அடாத்தாகப் பிடிபோருக்கும் எச்சரிக்கை

time to read

1 min

September 23, 2025

Translate

Share

-
+

Change font size