Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year
The Perfect Holiday Gift Gift Now

இரத்த நிலவு சந்திரகிரகணம்

Tamil Mirror

|

September 10, 2025

வானில் அவ்வப்போது நிகழும் அதிசய நிகழ்வுகளில் ஒன்றுதான் சந்திர கிரகணம். வானில் சூரியனை பூமி சுற்றி வரும், பூமியை சந்திரன் சுற்றி வரும். வருடத்தில் ஓரிருமுறை மட்டும் இந்த மூன்றும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும். சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, பூமியின் நிழல் சந்திரன் மீது விழுந்து, அதன் ஒளியைத் தற்காலிகமாக மறைக்கும் நிகழ்வு சந்திர கிரகணம் ஏற்படும். இதன் போது சந்திரனின் பாதி பகுதியோ அல்லது சிறிய அளவு அல்லது முழு பகுதியும் மறைக்கப்படலாம்.

- மு.நிமியா, ஊடகக் கற்கைகள் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

நேற்று ஏற்பட்ட 'இரத்த நிலவு' (டீடழழன ஆழழா) முழு நிலவு சந்திர கிரகணமாகும் . சந்திர கிரகணத்தின்போது சந்திரன் சிவப்பு நிறத்தில் தோன்றியதால் 'இரத்த நிலவு' (டீடழழன ஆழழா) என்று அழைக்கப்படுகிறது. செப்டம்பர் 7, 2025 நேற்றைய தினம் ஆரம்பித்த முழு சந்திர கிரகணம், இந்த ஆண்டின் கடைசி மற்றும் அரிதான இரத்த நிலவு நிகழ்வாகும். இந்த அரிய நிகழ்வு, அறிவியல் ரீதியாக எவ்வாறு விளக்கப்படுகிறது, ஆன்மீக மற்றும் கலாசார ரீதியாக பார்க்கப்படுகிறது.

அறிவியல் கண்ணோட்டம்: இரத்த நிலவு ஏன் சிவப்பு நிறத்தில் தெரிகிறது?

இரத்த நிலவு என்பது ஒரு முழு சந்திர கிரகணத்தின் போது நிகழ்ந்த ஒரு இயற்கையான வானியல் நிகழ்வு. கிரகணத்தின் போது, சந்திரன் முழுவதுமாக பூமியின் நிழலுக்குள் நுழைகிறது. அப்போது சூரிய ஒளியின் நேரடிப் பார்வை சந்திரனுக்குக் கிடைப்பதில்லை. அதனை புவி மறைத்துவிடும். எனினும், சூரியனில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள் முழுமையாகத் தடுக்கப்படுவதில்லை. பூமியின் வளிமண்டலம் ஒரு பெரிய வில்லை (டநளெ) போலச் செயல்பட்டு, ஒளியைக் குவித்து, அதை சந்திரனின் மீது செலுத்துகிறது.

இந்த ஒளியானது பூமியின் வளிமண்டலத்தின் வழியே பயணிக்கும்போது, ஒரு குறிப்பிட்ட செயல்முறை நிகழ்கிறது. ஒளியில் உள்ள பல்வேறு வண்ண அலைநீளங்களில், நீல நிற ஒளி அலைநீளங்கள் ரெய்லே சிதறல் (Rayleigh Scattering) என்ற நிகழ்வு காரணமாக வளிமண்டலத்தில் அதிக அளவில் சிதறடிக்கப்படுகின்றன. வானம் நீல நிறத்தில் தெரிவதற்குக் காரணமும் இதுவே. ஆனால், சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிற அலைநீளங்கள் குறைவான சிதறல் அடைவதால், அவை வளிமண்டலத்தைத் தாண்டிச் சென்று பூமியின் நிழல் வழியாகப் பயணித்து சந்திரனின் மீது விழுகின்றன. இதன் விளைவாக, நிலவு பழுப்பு, செம்பு அல்லது அடர் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. இந்த நிகழ்வுதான் 'இரத்த நிலவு' என அறிவியல் பூர்வமாக அழைக்கப்படுகிறது.

இந்த ஒளியின் நிறமும் அதன் அடர்த்தியும் பூமியின் வளிமண்டலத்தில் உள்ள தூசி, மேகங்கள் மற்றும் பிற துகள்களின் அளவைப் பொறுத்து மாறுபடும்.

MORE STORIES FROM Tamil Mirror

Tamil Mirror

தவறுகளைச் சரிசெய்து, எதிர்காலப் பாதையைத் தயாரிப்பது முக்கியம்

76 ஆண்டுகளாக இந்த நாட்டின் பாரம்பரிய அரசியல் அமைப்பைச் சுமந்து வந்த அதிகார அரசியலை முறியடித்து, மற்றொரு அரசியல் சக்திக்கு அதிகாரத்தை வழங்க மக்கள் தேர்தலில் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தினர். இது, இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் 21 திகதி அமைந்தது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

ரோந்து நடவடிக்கையை அதிகரிக்குமாறு கடற்படையினருக்கு வலியுறுத்தல்

முல்லைத்தீவு கடல் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுப்பதற்காக ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு கடற்படையினரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

மன்னாரில் தீப்பந்த ஆர்ப்பாட்டம்

மன்னாரில் காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை(21) 50ஆவது நாளை எட்டிய நிலையில் இரவு தீப்பந்த ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

Tamil Mirror

பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

ஆசியக் கிண்ணத் தொடரில், டுபாயில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற பாகிஸ்தானுடனான சுப்பர்-4 சுற்றுப் போட்டியில் இந்தியா வென்றது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

விபரீத முடிவால் மகள் பலி; தந்தை கவலைக்கிடம்

தன் உயிரை மாய்த்துக் கொண்ட 17 வயதான மகளின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத தந்தையொருவர் தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் ஒன்று கண்டி பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுல்கலை டியனில்ல தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

Tamil Mirror

பதின்ம பருவத்தினரிடம் அதிகரிக்கும் மன அழுத்தம்

இன்றைய உலகத்தில், பதின்ம பருவ வயதினர்கள் எதிர்கொள்கிற மன அழுத்தம் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. சமீபத்திய ஆய்வுகளும், சமூக கருத்துகளும் இவர்கள் மனநலத்தில் ஏற்பட்டிருக்கும் தீவிர மாற்றங்களைச் சுட்டிக்காட்டுகின்றன.

time to read

2 mins

September 23, 2025

Tamil Mirror

புதையல் தோண்டிய பெண் கைது; கணவன் தப்பியோட்டம்

அத்திமலை, வாவி கெமுனுபுர பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, புதையல் தோண்டிக் கொண்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய கணவன் தப்பியோடியுள்ளர்.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

ஆபத்தான நிலைமையில் வடிவேல் வீதி

உள்ள வடிவேல் வீதி, மத்தியில் பாரிய ஓட்டையுடன் கூடிய வழிகான்களுடன் அபாய நிலையில் உள்ளது எனவும் காரைதீவு பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இவ் வீதி பலகாலமாகக் கவனிப்பாரற்று காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் படுகாயம்

தலவாக்கலை நகரில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் மூன்று பேர் காயமடைந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

Tamil Mirror

‘ரகாசா’ சூறாவளி தாண்டவம்

‘ரகாசா’ சூறாவளி எதிரொலியாக ஹொங்கொங் விமான நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை (23) மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை (25) காலை 6 மணி வரை 36 மணி நேரம் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

time to read

1 min

September 23, 2025

Translate

Share

-
+

Change font size

Holiday offer front
Holiday offer back