Try GOLD - Free
ஜனாதிபதிகளின் தனிப்பட்ட வாழ்க்கையும் உத்தியோகபூர்வ வாழ்க்கையும் ஒன்றா?
Tamil Mirror
|August 27, 2025
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2023 ஆம் ஆண்டு ஜீ 77 உச்சி மாநாட்டுக்காக கியூபாவுக்குச் விஜயம் செய்து வரும் வழியில், இங்கிலாந்தில் வுல்வர்ஹம்ப்டன் பல்கலைகழகத்தில் தமது மனைவியின் பட்டமளிப்பு விழாவொன்றுக்காகவும் சென்றுள்ளார். அந்த விழாவுக்கு சென்றமை அவரது தனிப்பட்ட விஜயம் என்றும் அதற்காக அவர் இலங்கைப் பணத்தில் ஒரு கோடியே 62 இலட்சம் ரூபாய் அரச பணத்தை செலவிட்டுள்ளார் என்றும் குற்றஞ்சாட்டியே அவர் கடந்த வெள்ளிக்கிழமை (22) இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
அன்றே அவர் கொழும்பு பிரதம நீதவான் நிலுப்புலி லங்காபுர முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார்.
வழமைக்கு மாறாக, பல மணி நேரம் சட்டமா அதிபர் திணைக்களத்தினதும் ரணிலினதும் சட்டத்தரணிகளின் வாதப் பரதிவாதங்களை கேட்டு இறுதியில் நீதிவான ஓகஸ்ட் 26ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி தனிப்பட்ட பயணமொன்றுக்காக அரச பணத்தை செலவழித்தார் என்பது உண்மையாக இருந்தால், அதற்காக அவர் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். அவர் முன்னாள் ஜனாதிபதி என்பதற்காகவோ, நோயாளர் என்பதற்காகவோ, அவரை விட்டுவிடவோ, மன்னிக்கவோ சட்டத்தில் இடமில்லை.
அந்த குற்றச்சாட்டு தொடர்பாக அரச தலைவர் ஒருவரோ, அரச அதிகாரி ஒருவரோ, சாதாரண பிரஜை ஒருவரோ, பொலிஸிலோ இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிலோ முறைப்பாடு செய்வதை அரசியல் பழிவாங்கல் என்று கூற முடியாது.
அந்த முறைப்பாட்டின் பிரகாரம், பொலிஸார் அவரை கைது செய்வதையும் நீதி மன்றத்தில் ஆஜர் செய்வதையும் பழிவாங்கல் என்று கூற முடியாது. அதன் பிரகாரம், நீதிமன்றம் அவரை விளக்க மறியலில் வைப்பதையும் பழிவாங்கல் என்று கூற முடியாது. அவ்வாறு கூறுவது நீதிமன்ற அவதூறாகலாம். சட்டத்தின் முன் சகலரும் சமம் என்பதே நியதியாகும்.
இவ்விடயம் தொடர்பான வழக்கு விசாரணையின் இறுதியில் அவர் நிராபராதி என்று தீர்ப்பளிக்கப்பட்டால் மட்டுமே அவருக்கு எதிரான முறைப்பாடு பழிவாங்கல் என்று கூறலாம். சட்டமா அதிபர் திணைக்களத்தை வழிநடத்தும் அதிகாரம் நீதி அமைச்சருக்கு இருப்பதால் அவரை கைது செய்ததையும் சிலவேளை பழிவாங்கலாக கருதலாம். ஆனால், அதற்கு அப்பால் நீதிமன்றத்தின் செயற்பாடுகளை விமர்சிக்க முடியாது. அதேவேளை, நீதிமன்றத்தால் நிரபராதி என்று தீர்ப்பளிக்கப்படும் சகலரும் பழிவாங்கலுக்கு உள்ளானவர்களுமல்ல.
லண்டனிலிருந்து வொல்வர்ஹமப்டன் வரையிலான ரணிலின் பயணம் தனிப்பட்ட பயணம் என்பதால் அதற்காக அரச பணத்தை செலவிட்டதற்காகவே பொலிஸார் ரணிலை கைது செய்தனர். இதற்கு பதிலளித்த ரணில் ஜனாதிபதி ஒருவருக்கு தனிப்பட்ட வாழ்க்கை என்றும் பொது வாழ்க்கை என்றும் இரண்டு வாழ்க்கை இல்லை என்று இரகசிய பொலிஸாரிடம் கூறியுள்ளார். ஒரு ஜனாதிபதிக்கு குறிப்பிட்ட கடமை நேரம் இல்லை என்ற அர்த்தத்தில் அதனை ஏற்றுக்கொள்ளலாம்.
This story is from the August 27, 2025 edition of Tamil Mirror.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Tamil Mirror
Tamil Mirror
தவறுகளைச் சரிசெய்து, எதிர்காலப் பாதையைத் தயாரிப்பது முக்கியம்
76 ஆண்டுகளாக இந்த நாட்டின் பாரம்பரிய அரசியல் அமைப்பைச் சுமந்து வந்த அதிகார அரசியலை முறியடித்து, மற்றொரு அரசியல் சக்திக்கு அதிகாரத்தை வழங்க மக்கள் தேர்தலில் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தினர். இது, இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் 21 திகதி அமைந்தது.
1 min
September 23, 2025
Tamil Mirror
ரோந்து நடவடிக்கையை அதிகரிக்குமாறு கடற்படையினருக்கு வலியுறுத்தல்
முல்லைத்தீவு கடல் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுப்பதற்காக ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு கடற்படையினரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
மன்னாரில் தீப்பந்த ஆர்ப்பாட்டம்
மன்னாரில் காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை(21) 50ஆவது நாளை எட்டிய நிலையில் இரவு தீப்பந்த ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
ஆசியக் கிண்ணத் தொடரில், டுபாயில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற பாகிஸ்தானுடனான சுப்பர்-4 சுற்றுப் போட்டியில் இந்தியா வென்றது.
1 min
September 23, 2025
Tamil Mirror
விபரீத முடிவால் மகள் பலி; தந்தை கவலைக்கிடம்
தன் உயிரை மாய்த்துக் கொண்ட 17 வயதான மகளின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத தந்தையொருவர் தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் ஒன்று கண்டி பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுல்கலை டியனில்ல தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
பதின்ம பருவத்தினரிடம் அதிகரிக்கும் மன அழுத்தம்
இன்றைய உலகத்தில், பதின்ம பருவ வயதினர்கள் எதிர்கொள்கிற மன அழுத்தம் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. சமீபத்திய ஆய்வுகளும், சமூக கருத்துகளும் இவர்கள் மனநலத்தில் ஏற்பட்டிருக்கும் தீவிர மாற்றங்களைச் சுட்டிக்காட்டுகின்றன.
2 mins
September 23, 2025
Tamil Mirror
புதையல் தோண்டிய பெண் கைது; கணவன் தப்பியோட்டம்
அத்திமலை, வாவி கெமுனுபுர பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, புதையல் தோண்டிக் கொண்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய கணவன் தப்பியோடியுள்ளர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
ஆபத்தான நிலைமையில் வடிவேல் வீதி
உள்ள வடிவேல் வீதி, மத்தியில் பாரிய ஓட்டையுடன் கூடிய வழிகான்களுடன் அபாய நிலையில் உள்ளது எனவும் காரைதீவு பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இவ் வீதி பலகாலமாகக் கவனிப்பாரற்று காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் படுகாயம்
தலவாக்கலை நகரில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் மூன்று பேர் காயமடைந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
‘ரகாசா’ சூறாவளி தாண்டவம்
‘ரகாசா’ சூறாவளி எதிரொலியாக ஹொங்கொங் விமான நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை (23) மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை (25) காலை 6 மணி வரை 36 மணி நேரம் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
1 min
September 23, 2025
Translate
Change font size
