Try GOLD - Free
எதிர்பார்ப்பின் சாத்தியங்கள்
Tamil Mirror
|June 30, 2025
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நாயகம் வோல்கர் டர்க் கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்தார். வடக்கில் 6,000 ஏக்கர் நிலங்களைச் சுவீகரிக்கும் அரசாங்கத்தின் வர்த்தமானிக்கு இடைக்காலத் தடை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டு நேற்றைய தினம் அந்த வர்த்தமானி இரத்துச் செய்யப்படுவது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டிருக்கிறது. இவ்வாறு இலங்கையின் அரசியலில் சலசலப்பான விடயங்கள் பல கடந்த வாரத்தில் நடந்தேறின.
இதற்கிடையில், செம்மணி புதைகுழியருகில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘அணையா தீபம்' போராட்டத்தில் தாமும் பங்கெடுக்க, கலந்து கொள்ள முயன்ற அரச தரப்பு அமைச்சர் சந்திரசேகரன் துரத்தியடிக்கப்பட்டிருக்கிறார். அவர்களது பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், மற்றும் ஏனையோரும் தடுக்கப்பட்டிருக்கின்றனர். இது தமிழ் மக்கள் மத்தியில் அரசியல்வாதிகள் தொடர்பில் உருவாகியிருக்கின்ற எதிர்ப்பு மனோநிலையையே காண்பிக்கிறது.
மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நாயகம் வோல்கர் டர்க் அவர்களது விஜயம் குறித்து அவர், இனவாதத்தைத் தூண்டும் வகையில், செயற்படக் கூடாது. காசா, ஈரான் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போர் இடம்பெற்று வரும் நிலையில், அவர் எதற்காக இலங்கைக்கு விஜயம் செய்தார் போன்ற கேள்விகள் பேரினவாதிகளால் எழுப்பப்பட்டிருக்கின்றன. இது அவர்களுடைய இனவாதச் சிந்தனையின் வெளிப்பாடாகும். நாட்டுக்கு விஜயம் செய்யும் இராஜதந்திரிகள் தொடர்பிலான நடைமுறைகளைக் கையாண்டிருந்தாலும் அரசுக்கெதிராகவும் வசைபாடல்கள் நடைபெற்று வருகின்றன. நாட்டை முன்னேற்றுகிறோம் என்ற தோரணையில் அரசாங்கம் ஏதோ ஒரு வழியில் சென்று கொண்டிருந்தாலும் அதனைத் திசை திருப்பும் விதத்திலான செயற்பாடுகளும் நடைபெறுகின்றன என்பதற்கு இது நல்லதொரு உதாரணமாகும். அதற்காக முழுமையாக இதய சுத்தியுடன் தமிழ் மக்களின் விவகாரத்தில் நகர்கிறது என்ற பொருளல்ல.
மனித உரிமைகள் ஆணையாளர் யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழிப் பிரதேசத்திற்குச் சென்றமை சிங்கள மக்கள் மத்தியில் கவனத்திலெடுக்கப்படாதிருந்தாலும் அதனைப் பூதாகாரமாக்கும் செயற்பாட்டிற்கு ஏற்ப பேரினவாத அரசியல் சக்திகள் முயற்சித்திருக்கின்றன என்பது ஆணையாளரது விஜயம் மற்றும் அவர் வெளியிட்ட கருத்துகளுக்கெதிராக முன்வைக்கப்பட்டுவரும், வெளியிடப்படும் கருத்துக்களிலிருந்து தெரியவருகிறது. பெரும்பான்மைச் சிந்தனையுடைய பேரினவாத சக்திகளிடம் இருக்கின்ற தமிழ் மக்களின் புரையோடிப்போன இனப் பிரச்சினை தொடர்பாக இருக்கின்ற ஏற்றுக்கொள்ள முடியாத நிலைப்பாடானது இன்னமும் எத்தனை காலத்திற்கு அப்பிரச்சினையை இழுத்தடித்துச் செல்லவிருக்கிறது என்பது தெரியாத ஒன்றே.
This story is from the June 30, 2025 edition of Tamil Mirror.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Tamil Mirror
Tamil Mirror
தவறுகளைச் சரிசெய்து, எதிர்காலப் பாதையைத் தயாரிப்பது முக்கியம்
76 ஆண்டுகளாக இந்த நாட்டின் பாரம்பரிய அரசியல் அமைப்பைச் சுமந்து வந்த அதிகார அரசியலை முறியடித்து, மற்றொரு அரசியல் சக்திக்கு அதிகாரத்தை வழங்க மக்கள் தேர்தலில் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தினர். இது, இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் 21 திகதி அமைந்தது.
1 min
September 23, 2025
Tamil Mirror
ரோந்து நடவடிக்கையை அதிகரிக்குமாறு கடற்படையினருக்கு வலியுறுத்தல்
முல்லைத்தீவு கடல் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுப்பதற்காக ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு கடற்படையினரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
மன்னாரில் தீப்பந்த ஆர்ப்பாட்டம்
மன்னாரில் காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை(21) 50ஆவது நாளை எட்டிய நிலையில் இரவு தீப்பந்த ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
ஆசியக் கிண்ணத் தொடரில், டுபாயில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற பாகிஸ்தானுடனான சுப்பர்-4 சுற்றுப் போட்டியில் இந்தியா வென்றது.
1 min
September 23, 2025
Tamil Mirror
விபரீத முடிவால் மகள் பலி; தந்தை கவலைக்கிடம்
தன் உயிரை மாய்த்துக் கொண்ட 17 வயதான மகளின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத தந்தையொருவர் தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் ஒன்று கண்டி பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுல்கலை டியனில்ல தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
பதின்ம பருவத்தினரிடம் அதிகரிக்கும் மன அழுத்தம்
இன்றைய உலகத்தில், பதின்ம பருவ வயதினர்கள் எதிர்கொள்கிற மன அழுத்தம் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. சமீபத்திய ஆய்வுகளும், சமூக கருத்துகளும் இவர்கள் மனநலத்தில் ஏற்பட்டிருக்கும் தீவிர மாற்றங்களைச் சுட்டிக்காட்டுகின்றன.
2 mins
September 23, 2025
Tamil Mirror
புதையல் தோண்டிய பெண் கைது; கணவன் தப்பியோட்டம்
அத்திமலை, வாவி கெமுனுபுர பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, புதையல் தோண்டிக் கொண்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய கணவன் தப்பியோடியுள்ளர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
ஆபத்தான நிலைமையில் வடிவேல் வீதி
உள்ள வடிவேல் வீதி, மத்தியில் பாரிய ஓட்டையுடன் கூடிய வழிகான்களுடன் அபாய நிலையில் உள்ளது எனவும் காரைதீவு பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இவ் வீதி பலகாலமாகக் கவனிப்பாரற்று காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் படுகாயம்
தலவாக்கலை நகரில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் மூன்று பேர் காயமடைந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
‘ரகாசா’ சூறாவளி தாண்டவம்
‘ரகாசா’ சூறாவளி எதிரொலியாக ஹொங்கொங் விமான நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை (23) மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை (25) காலை 6 மணி வரை 36 மணி நேரம் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
1 min
September 23, 2025
Translate
Change font size
