Try GOLD - Free
சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினம்
Tamil Mirror
|June 12, 2025
ஒவ்வொரு சிறுவர் தொழிலாளி உருவாகும் போதும் நாட்டின் சாதனையாளர் ஒருவர் இழக்கப்படுகின்றார். நாட்டின் எதிர்காலம் இருண்ட நிலைக்குத் தள்ளப்படுகின்றது. புத்தகப் பையை சுமக்க வேண்டிய வயதில் குடும்ப வறுமை காரணமாக சிறுவர் தொழிலாளியாக மாறும் சிறுவர்களின் வாழ்வு சுருண்டு போகின்றதுக் குப்பைப் பையில். இதனைத் தடுக்கவே ILO எனப்படும் பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினத்தை ஆண்டுதோறும் ஜூன் 12 அன்று கொண்டாட வலியுறுத்துகின்றது.
-
ஐக்கிய நாடுகள் சபையால் நிறுவப்பட்ட இந்த நாள் உலகெங்கிலும் உள்ள சிறுவர் தொழிலாளர்களின் அவலநிலையை முடிவிற்குக் கொண்டுவரவும், அனைத்து வகையான சிறுவர் தொழிலாளர்களைப் பாதுகாக்கவும் முயற்சி செய்கின்றது. 2002ஆம் ஆண்டு முதல், ILO எனப்படும் பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு, சிறுவர் தொழிலாளர்களைப் பயன்படுத்தும் முறையை ஒழிப்பதற்கும், தடை செய்வதற்கும் உடனடி மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க உலக சமூகத்தை வலியுறுத்தியது. 2025ஆம் ஆண்டிற்குள் சிறுவர் தொழிலாளர்கள் இல்லாத உலகை உருவாக்கும் இலக்கை அடைய, அதிகமான செயல்களைச் செய்து கொண்டிருக்கின்றது.
1919ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வெர்சாய்ஸ் உடன்படிக்கை முதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது. இந்த உடன்படிக்கை சமூக நீதியின் வழியாக மட்டுமே நிலையான அமைதியை அடைய முடியும் என்ற கொள்கையின் அடிப்படையில் அமைந்தது. இதன் விளைவாக, 2002ஆம் ஆண்டில், சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான உலக நாள் அரசு, சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தனி நபர்களுக்கு சிறுவர் தொழிலாளர் பிரச்சினையை வலியுறுத்தியுள்ளது. இப்பிரச்சினையை ஒரு விரிவான மற்றும் ஒருங்கிணைந்த முறையில் தீர்க்கவும், சாத்தியமான தீர்வுகளைக் கண்டறிந்து மதிப்பீடு செய்யவும் ஒரு தளத்தை வழங்குவதற்காக நிறுவப்பட்டது இந்நாள். பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு, “சிறுவர்களின் குழந்தைப் பருவம், திறன், மாண்பு, உடல் மற்றும் மன வளர்ச்சிக்குத் தீங்கு விளைவிக்கும் வேலை” என்று சிறுவர் தொழிலாளர்களின் வேலையை வரையறுக்கிறது. இந்த வரையறையானது, சிறுவர் ஒருவர் ஆரோக்கியமான நபராக வளர உதவும் செயல்பாடுகளைப் புறநிலையாக அடையாளம் கண்டுபிடிப்பதற்கு ஒரு வழியாக உள்ளது.
This story is from the June 12, 2025 edition of Tamil Mirror.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Tamil Mirror
Tamil Mirror
தவறுகளைச் சரிசெய்து, எதிர்காலப் பாதையைத் தயாரிப்பது முக்கியம்
76 ஆண்டுகளாக இந்த நாட்டின் பாரம்பரிய அரசியல் அமைப்பைச் சுமந்து வந்த அதிகார அரசியலை முறியடித்து, மற்றொரு அரசியல் சக்திக்கு அதிகாரத்தை வழங்க மக்கள் தேர்தலில் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தினர். இது, இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் 21 திகதி அமைந்தது.
1 min
September 23, 2025
Tamil Mirror
ரோந்து நடவடிக்கையை அதிகரிக்குமாறு கடற்படையினருக்கு வலியுறுத்தல்
முல்லைத்தீவு கடல் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுப்பதற்காக ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு கடற்படையினரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
மன்னாரில் தீப்பந்த ஆர்ப்பாட்டம்
மன்னாரில் காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை(21) 50ஆவது நாளை எட்டிய நிலையில் இரவு தீப்பந்த ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
ஆசியக் கிண்ணத் தொடரில், டுபாயில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற பாகிஸ்தானுடனான சுப்பர்-4 சுற்றுப் போட்டியில் இந்தியா வென்றது.
1 min
September 23, 2025
Tamil Mirror
விபரீத முடிவால் மகள் பலி; தந்தை கவலைக்கிடம்
தன் உயிரை மாய்த்துக் கொண்ட 17 வயதான மகளின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத தந்தையொருவர் தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் ஒன்று கண்டி பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுல்கலை டியனில்ல தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
பதின்ம பருவத்தினரிடம் அதிகரிக்கும் மன அழுத்தம்
இன்றைய உலகத்தில், பதின்ம பருவ வயதினர்கள் எதிர்கொள்கிற மன அழுத்தம் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. சமீபத்திய ஆய்வுகளும், சமூக கருத்துகளும் இவர்கள் மனநலத்தில் ஏற்பட்டிருக்கும் தீவிர மாற்றங்களைச் சுட்டிக்காட்டுகின்றன.
2 mins
September 23, 2025
Tamil Mirror
புதையல் தோண்டிய பெண் கைது; கணவன் தப்பியோட்டம்
அத்திமலை, வாவி கெமுனுபுர பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, புதையல் தோண்டிக் கொண்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய கணவன் தப்பியோடியுள்ளர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
ஆபத்தான நிலைமையில் வடிவேல் வீதி
உள்ள வடிவேல் வீதி, மத்தியில் பாரிய ஓட்டையுடன் கூடிய வழிகான்களுடன் அபாய நிலையில் உள்ளது எனவும் காரைதீவு பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இவ் வீதி பலகாலமாகக் கவனிப்பாரற்று காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் படுகாயம்
தலவாக்கலை நகரில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் மூன்று பேர் காயமடைந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
‘ரகாசா’ சூறாவளி தாண்டவம்
‘ரகாசா’ சூறாவளி எதிரொலியாக ஹொங்கொங் விமான நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை (23) மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை (25) காலை 6 மணி வரை 36 மணி நேரம் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
1 min
September 23, 2025
Translate
Change font size

