Try GOLD - Free
காலத்தில் கரைந்துவிட்ட கம்பதாசன்
Dinamani Virudhunagar
|October 12, 2025
தாஸ் என்றாலும் தாசன் என்றாலும் பொருள் ஒன்றுதான். இலக்கியத்தில் நாம் முதன்முதல் அறியக்கூடிய தாஸ் வடமொழியில் பல காவியங்களை எழுதிய மகாகவி காளிதாஸ். இந்தியில் இராமாயணம் எழுதிய துளசிதாஸ், கன்னடத்தில் புரந்தரதாஸ், ஹிந்தியில் கபீர்தாஸ், என்று பலர் இருந்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் நாடக உலகின் தந்தையென்று போற்றப்படுகின்ற சங்கரதாஸ், திரைப்படத்துக்கு முதலில் பாடல் எழுதிய மதுர பாஸ்கரதாஸ், பி.யு.சின்னப்பா நடித்த ஆரிய மாலா, ஜெகதலப்பிரதாபன் போன்ற படங்களுக்குக் கதை வசனம் எழுதியவரும், எம்.ஜி.ஆர். நடித்த 'நாடோடி மன்னன்' படத்தில் ‘உழைப்பதிலா உழைப்பைப் பெறுவதிலா இன்பம் உண்டாவதெங்கே சொல் என் தோழா' என்ற பாடலை எழுதியவருமான கவி லட்சுமண தாஸ் என்று பலர் இருந்திருக்கிறார்கள். ‘கடலுக்குள் அரண் கட்டி கன்னி நீ வாழ்ந்தாலும் உடலுக்குள்ளே மாரன் உதயமாவது திண்ணம்' என்று அந்தக் கால பூலோக ரம்பை படத்தில் பாடல் எழுதிய புதுக்கம்பன் பூமிபால தாஸ்.
1951-இல் வெளிவந்த சிங்காரி என்ற படத்தில் ‘ஒருசாண் வயிறே இல்லாட்டா இந்த உலகத்தில் ஏது கலாட்டா?' என்று பாடல் எழுதிய தஞ்சை ராமையா தாஸ், உலகத்தில் எவரும் எழுதாத அளவில் 800 படங்களுக்கு மேல் வசனம் எழுதி கின்னஸ் சாதனை படைத்தவரும், ஒரே நேரத்தில் எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களுக்கு வசனம் எழுதியவரும், தான் வசனம் எழுதிய நூற்றுக்கணக்கான மொழிமாற்றுப் படங்களில் 55 படங்களுக்கு எல்லாப் பாடல்களையும் என்னையே எழுத வைத்தவருமான வசன கர்த்தா ஆரூர்தாஸ், ஆகியோரும் இருந்தார்கள்.
பின்னணிப் பாடகர் ஜேசுதாஸ், பக்திப் பாடகர் பித்துக்குளி முருகதாஸ், தொழில் அதிபர் வி.ஜி.பன்னீர்தாஸ், அரசியல் தலைவர்களில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் ஆகியோரும் பிரபலமானவர்கள்.
அதுபோல், தாசன் என்று பெயர் வைத்துக் கொண்டவர்களில் பாரதிதாசன், கண்ணதாசன், வாணிதாசன், கம்பதாசன், சுப்புரத்தின தாசன் என்று பெயர் வைத்துக் கொண்ட சுரதா ஆகியோர் புகழ்பெற்றவர்கள். இதில் சுரதா உவமைக் கவிஞர் என்று புகழ் பெற்றவர். அப்படிப்பட்டவரே புதிய உவமைகளில், புதிய சிந்தனைகளில், புதிய கற்பனைகளில் கம்பதாசன் முதலிடத்தில் இருக்கும் சிறப்புக்குரியவர் என்று பாராட்டியிருக்கிறார். அன்றைய காலத்தில் இந்தியா முழுதும் அறிந்த ஒரே தமிழ்க் கவிஞர் கம்பதாசன்தான் என்றும் சொல்லியிருக்கிறார். இதெல்லாம் கண்ணதாசன் சகாப்தம் தொடங்குவதற்கு முன்பிருந்த நிலை.
கிளியின் சிவந்த மூக்கிற்கு பச்சை மிளகாய்ப் பழத்தை பாரதிதாசன் உவமை சொல்லியிருப்பார். 'வெற்றிலை போடாமலே வாய்சிவந்த பச்சைப் பசுங்கிளிகள்' என்று பாகவதர் நடித்த அமரகவி படத்தில் எழுதியிருப்பார் சுரதா.
This story is from the October 12, 2025 edition of Dinamani Virudhunagar.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Virudhunagar
Dinamani Virudhunagar
மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்
நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், அது எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவர் மு. தம்பிதுரை வலியுறுத்தினார்.
1 min
December 01, 2025
Dinamani Virudhunagar
ஸ்பெயின், ஜப்பான், நமீபியா வெற்றி
இங்கிலாந்து கோல் மழை
1 mins
December 01, 2025
Dinamani Virudhunagar
கர்நாடகம்: இப்போதைக்கு ‘புயல்’ கரை கடந்தது!
தேவராஜ் அர்ஸ் காலத்தில் இருந்தே அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத மாநிலம் கர்நாடகம். காங்கிரஸ், ஜனதா, ஜனதாதளம், மஜத, பாஜக என எந்தக் கட்சி ஆட்சி நடந்தாலும் அதில் முதல்வர் பதவியில் யார் தொடர்வது என்ற குழப்பத்துக்கு என்றுமே குறைவில்லை. தேவராஜ் அர்ஸ், வீரேந்திர பாட்டீல், எஸ். பங்காரப்பா, வீரப்பமொய்லி எல்லோருமே தங்களது ஆட்சிக் காலத்தில் முதல்வர் பதவியைத் தக்கவைக்க படாதபாடு பட்டனர்.
2 mins
December 01, 2025
Dinamani Virudhunagar
கலைஞர் பல்கலை. மசோதா: குடியரசுத் தலைவரை சந்திப்போம்
கும்பகோணத்தில் அமைக்கப்படவுள்ள கலைஞர் பல்கலைக்கழக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி குடியரசுத் தலைவரைச் சந்தித்து வலியுறுத்துவோம் என மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்தார்.
1 min
December 01, 2025
Dinamani Virudhunagar
எச்ஐவி தொற்று இல்லாத நிலையை உருவாக்குவோம்
நிலையை உருவாக்க உறுதியேற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 mins
December 01, 2025
Dinamani Virudhunagar
அஸ்ஸாம் எம்எல்ஏ மீது தேசத் துரோக குற்றச்சாட்டு: ரத்து செய்தது உயர்நீதிமன்றம்
அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎஃப்) எம்எல்ஏ அமீனுல் இஸ்லாம் மீது பதியப்பட்டிருந்த தேசத் துரோக வழக்கை குவாஹாட்டி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
1 min
December 01, 2025
Dinamani Virudhunagar
காவல் துறை மீதான மக்களின் பார்வை மாற்றப்படுவது அவசியம்
பிரதமர் மோடி அறிவுறுத்தல்
1 min
December 01, 2025
Dinamani Virudhunagar
காசி - தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்று தமிழ் கற்றுக் கொள்வீர்!
மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
1 min
December 01, 2025
Dinamani Virudhunagar
சபரிமலை தங்க மோசடி வழக்கு: கோயிலில் தந்திரியிடம் மீண்டும் விசாரணை
சபரிமலையில் தங்கம் மாயமான வழக்கில், கோயில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனருவிடம் மீண்டும் விசாரணை நடத்தி, அவரின் வாக்கு மூலத்தை சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.
1 min
December 01, 2025
Dinamani Virudhunagar
நீதிபதிகள் மாறினாலும் தீர்ப்புகளை நிராகரிக்கக் கூடாது
உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா
1 mins
December 01, 2025
Translate
Change font size

