Try GOLD - Free

பனிப் பாலைவனம்

Dinamani Virudhunagar

|

October 05, 2025

சஹாரா, தார் பாலைவனம் கேள்விப்பட்டிருக்கிறோம். பனிப் பாலைவனம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்தியாவில் அது எங்குள்ளது தெரியுமா?

- -சுதந்திரன்

ஒவ்வொரு பயணியின் வாழ்நாள் கனவாக இருக்கும் 'ஸ்பிட்டி' பள்ளத்தாக்குதான் இந்தியாவின் பனிப் பாலைவனம். 'ஸ்பிட்டி' என்பது திபெத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான நிலத்தைக் குறிக்கிறது. ஸ்பிட்டி பள்ளத்தாக்கு பழமை, தூய்மை மாறாத பனிச்சொர்க்கம். இமய மலையில் பதிக்கப்பட்டிருக்கும் வைரம்தான் ஸ்பிட்டி பள்ளத்தாக்கு. வளைந்து நெளிந்து செல்லும் மலைச்சாலைகளில் பயணிக்கும்போது, தரிசாக இருக்கும் மலைச் சிகரங்கள், செதுக்கப்பட்டது போல் தோற்றம் தரும் பாறைகளைக் காணலாம்.

ஹிமாச்சலப் பிரதேசத்தில் கடல் மட்டத்திலிருந்து 12,500 அடி உயரத்தில் ஸ்பிட்டி அமைந்துள்ளது. லாமாக்கள் வாழும் ஸ்பிட்டியின் கவர்ச்சிகரமான ஈர்ப்பு, அங்குள்ள புத்த மடாலயங்கள்தான்! அதன் சுவர்களை வண்ண வண்ண பளீர் ஓவியங்கள், தங்காக்கள் (மத ஓவியங்கள்) அலங்கரிக்கின்றன. கருஞ்சிவப்பு நிற அங்கி அணிந்த லாமாக்கள் புனித மந்திரங்களை முணுமுணுத்தாலும் அவை எதிரொலிக்கும் அளவுக்கு ஆழ்ந்த அமைதி ஸ்பிட்டியை ஆளுகிறது.

ஸ்பிட்டி ஆன்மிக நாட்டம் கொண்டவர்களைக் கவர்ந்திருப்பது போல், சாகசத்தைத் தேடுபவர்களுக்கான தீனியையும் வழங்குகிறது. வளைந்து நெளிந்து செல்லும் சாலைகளில் வாகனங்களில் பயணங்களே சாகசமாகத்தான் அமையும். மலையேற்றம், முகாம்களில் தங்குதல், ஸ்பிட்டி ஆற்றின் குறுக்கே நதி ராஃப்டிங் சாகச விரும்பிகளை வரவேற்கின்றன.

MORE STORIES FROM Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

சிறப்பு விசாரணைக் குழு ஏன்?

கரூர் சம்பவத்தில் உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

time to read

1 mins

October 11, 2025

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழிகள் பலியிடத் தடை

உயர்நீதிமன்றம் உத்தரவு

time to read

1 mins

October 11, 2025

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு

நிகழாண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவின் எதிர்க்கட்சியான வென்டே வெனிசுலாவின் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு (58) அறிவிக்கப்பட்டுள்ளது.

time to read

2 mins

October 11, 2025

Dinamani Virudhunagar

நேர் நிர்வாகம்-வாழ்வியல் மதிப்பு!

நம்மில் பலரும் அடிக்கடி கேட்கும் தத்துவம், நிகழ்காலத்தில் வாழுங்கள்; இது நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும், செயலுக்கும் அடித்தளமாக இருக்க வேண்டும். ஏனெனில், கடந்த காலத்தை மாற்றுதல் இயலாது; எதிர்காலம் என்பது உறுதியற்றது. எனவே, திறமையுடனும், விழிப்புணர்வுடனும் நாம் வாழக்கூடிய ஒரே பிரதேசம் 'இந்தக் கணம்' மட்டும்தான். அங்கு நிலவும் ஆழ்ந்த விழிப்புணர்வைத்தான், நாம் பொது வாழ்வில் நேரம் தவறாமை என்ற நாகரிகப் பண்பாகப் போற்றுகிறோம்.

time to read

2 mins

October 10, 2025

Dinamani Virudhunagar

மதுரையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம்: எம்.எஸ். தோனி திறந்து வைத்தார்

மதுரையில் வேலம்மாள் கல்விக் குழுமம் சார்பில் அமைக்கப்பட்ட சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி வியாழக்கிழமை திறந்து வைத்தார்.

time to read

1 min

October 10, 2025

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

பள்ளிகொண்டா ரங்கநாதர்!

தென்தமிழகத்தில் திருவரங்கம் போல, வடதமிழகத்தில் புகழ்பெற்று விளங்குகிறது, வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் திருக்கோயில்.

time to read

1 mins

October 10, 2025

Dinamani Virudhunagar

பாராகிளைடர் தாக்குதல்: மியான்மர் ராணுவம் ஒப்புதல்

மியான்மரில் பௌத்த திருவிழாவின்போது பாராகிளைடர் மூலம் தாக்குதல் நடத்தியதை மியான்மர் ராணுவம் ஒப்புக் கொண்டுள்ளது.

time to read

1 min

October 10, 2025

Dinamani Virudhunagar

பிகாரில் தொகுதிப் பங்கீடு பேச்சு தீவிரம்

முதல்வர் வேட்பாளர் நிதீஷ் குமார்: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் அறிவிப்பு

time to read

2 mins

October 09, 2025

Dinamani Virudhunagar

யுஜிசி நெட் தேர்வு: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

நிகழாண்டுக்கான இரண்டாம் கட்ட யுஜிசி நெட் தேர்வு டிசம்பரில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான விண்ணப்பப் பதிவு இணையதளத்தில் தொடங்கியுள்ளது.

time to read

1 min

October 09, 2025

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

கண்ணீர்க் கடலில் காஸா!

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவின் நிபந்தனைகளை ஹமாஸ் அமைப்பு ஏற்றுக் கொண்டிருக்கிறது. எனவே, விரைவில் காஸாவில் போர் நிறுத்தம் ஏற்படலாம் என்று நம்பிக்கை பிறந்திருக்கிறது. காஸாவில் அமைதி முயற்சியில் தீர்க்கமான முன்னேற்றத்தை அடைந்து வரும் நிலையில் பிணைக் கைதிகள் விடுதலைக்கான அறிகுறிகள் ஒரு குறிப்பிடத் தகுந்த முன்னேற்றத்தை எட்டியிருக்கின்றன. நீடித்த மற்றும் நியாயமான அமைதியை நோக்கிய அனைத்து முயற்சிகளையும் இந்தியா தொடர்ந்து வலுவாக ஆதரிக்கிறது. இஸ்ரேலியக் கைதிகளை படிப்படியாக விடுவிப்பது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.

time to read

2 mins

October 09, 2025

Translate

Share

-
+

Change font size