Try GOLD - Free

பெருகும் மக்கள்தொகை-வரமா, சாபமா?

Dinamani Virudhunagar

|

June 23, 2025

இந்தியாவின் முன்னுள்ள முக்கிய சவால், மக்கள்தொகை எண்ணிக்கையை அதிகரிப்பதல்ல; அறிவார்ந்த, திறன்மிக்க பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். திறன் மேம்படுத்தப்பட்டால்தான் மனிதத் திறன் வளம்மிக்க நாடாக இந்தியா மாறும். தரமான கல்வி, இளைஞர்களின் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றைத் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டிய தருணமிது.

- பாறப்புறத் இராதாகிருஷ்ணன்

இந்தியாவில் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம். மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது, ஒரு நாட்டிலுள்ள மக்களின் பாலினம், வயது, கல்வி, வேலைவாய்ப்பு, சொத்து விவரங்கள் ஆகியவற்றை அவர்களிடமிருந்தே பெற்று அரசால் பகுப்பாய்வு செய்வதற்காக நடத்தப்படுகிறது. இது, மத்திய, மாநில அரசுகள் கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் போன்ற மக்கள் நலன்சார்ந்த துறைகளுக்குத் தேவையான திட்டங்களை வகுத்து, சமுதாய பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து, அனைத்து மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உரிய திட்டமிடலுக்கு உதவுகிறது.

சுதந்திர இந்தியாவில் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு 1951-ஆம் ஆண்டு நடத்தப்பட்டது; அப்போதைய மக்கள்தொகை சுமார் 36 கோடியே 10 லட்சம் ஆகும். கடைசியாக, இந்தியாவின் 15-ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011-இல் நடத்தப்பட்டது; அப்போதைய மக்கள்தொகை சுமார் 121 கோடியே 8 லட்சம் ஆகும். பின்னர், 2021-இல் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த ஆயத்தப் பணிகள் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டன. எனினும், நாட்டில் கரோனா தீநுண்மி பரவல் காரணமாக மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்வதில் சுணக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில், 16 ஆண்டுகளுக்குப் பிறகு, 2027-ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு, பதினாறாவது தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன், வெளிப்படையான ஜாதி வாரி கணக்கெடுப்புப் பணியும் துவங்கும் என மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிக்கை கடந்த ஜூன் 16-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

பனிப்பொழிவால் பாதிக்கப்படும் ஜம்மு-காஷ்மீர், ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட், லடாக் மாநிலங்களில் முதல்கட்டமாக அடுத்தாண்டு அக்டோபர் 1-ஆம் தேதி கணக்கெடுப்புப் பணி தொடங்கும். இது இந்தியாவில் முதல் எண்ம மக்கள்தொகை கணக்கெடுப்பு. அதாவது, இந்த முறை மக்கள்தொகை தொடர்பான தரவுகள் எண்ம முறையில் இருக்கும்.

MORE STORIES FROM Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

திவ்யா தேஷ்முக் வெளியேறினார் 2-ஆவது சுற்றில் பிரணவ், கார்த்திக்

ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் நடப்பு மகளிர் உலகக் கோப்பை சாம்பியனான இந்தியாவின் திவ்யா தேஷ்முக், முதல் சுற்று தோல்வியுடன் வெளியேறினார்.

time to read

1 min

November 03, 2025

Dinamani Virudhunagar

வாரிசுகளின் கடமை

அரசு ஊழியர்கள் பெற்றோரைப் பொறுப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும்; அவ்வாறு சரிவரக் கவனிக்காமல் புறக்கணித்தால் அந்த அரசு ஊழியரின் ஊதியத்திலிருந்து 10 முதல் 15 சதவீத ஊதியம் பிடித்தம் செய்யப்படும்; அவ்வாறு பிடித்தம் செய்யப்படும் தொகை பெற்றோரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் வகையில் விரைவில் சட்டம் நிறைவேற்றப்படும் என தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

time to read

2 mins

November 03, 2025

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

சமன்செய்து சீர்தூக்கும் கோல்!

தமிழர்களின் பண்பாட்டையும் தொன்மையையும் விளக்கும் எத்தனையோ விதமான பொருள்கள் இன்றும் பயன்பாட்டில் இருக்கின்றன. அவற்றுள் சில மறைந்து போயின; பல நமக்கு மறந்து போயின. அவ்வாறு மறந்து விட்டாலும் அல்லது இழந்து விட்டாலும் நம் நெஞ்சை விட்டு அவை இன்னும் அகலவில்லை.

time to read

3 mins

November 03, 2025

Dinamani Virudhunagar

அதிக வலிமையுடன் அணுசக்தி மையங்கள் மறுகட்டமைப்பு: ஈரான் அதிபர் உறுதி

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சேதம் டைந்த அணுசக்தி மையங்களை முன் பைவிட அதிக வலிமையுடன் மறு கட்டமைக்கவுள்ளதாக ஈரான் ஞாயிற் றுக்கிழமை தெரிவித்தது.

time to read

1 min

November 03, 2025

Dinamani Virudhunagar

அன்புள்ள ஆசிரியருக்கு...

காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணி எல்லா ஆட்சி காலத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ('தேவை அவசர அறிவிப்பு!'-ஆசிரியர் உரை, 28.10.25). இம்முறை மேட்டூர் அணை உரிய நாளில் திறந்து விடப்பட்டு பருவ மழை சாதகமாக இருந்த காரணத்தால் குறுவை சாகுபடியும் அதிக பரப்பளவில் நடந்தது. நெல் கொள்முதலும் எதிர்பார்த்தபடி அதிக அளவில் இருக்கும் எனத் தெரியவந்தது. ஆனால், இயற்கை செய்த சதி டெல்டா மாவட்டங்களில் தீபாவளிக்கு முன் மூன்று நாள்கள் பெய்த பெருமழைதான். தொடர் தீபாவளி விடுமுறை, தீபாவளியின்போது பெய்த மழை, நெல் கொள்முதலில் ஏற்பட்ட சுணக்கம் விவசாயிகளைப் பழிவாங்கி விட்டது. இனியாவது அசிரத்தைக்கொள்ளாமல், நெல் கொள்முதலில் உரிய நடவடிக்கை மேற்கொண்டால் விவசாயம் செழிக்கும்.

time to read

1 min

November 03, 2025

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

முதல் பெண்ணாக ஆசை

காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Virudhunagar

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.

time to read

1 min

November 02, 2025

Dinamani Virudhunagar

தங்கம் பவுனுக்கு ரூ.80 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.90,480-க்கு விற்பனையானது.

time to read

1 min

November 02, 2025

Dinamani Virudhunagar

நடமாடும் உயிர்க்காவலர்

எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

கடல் கடந்தும் தமிழ்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.

time to read

1 mins

November 02, 2025

Translate

Share

-
+

Change font size