Try GOLD - Free
அரிசித் தவிடு எண்ணெய் உடலுக்கு ஏற்றதா?
Dinamani Vellore
|August 24, 2025
சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய் வகைகள் பலவாக இருந்தாலும், தற்போது பிரபலமாக இருப்பது அரிசித் தவிடு எண்ணெய்தான். குறைவான கொழுப்பு இருக்கிறது. நீரிழிவு, இதயநோய் உள்ளவர்கள் பயன்படுத்தலாம். ஆன்ட்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது” என்கிறார் காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியின் ஊட்டச்சத்து, உணவியல் பேராசிரியர் ப.வண்டார்குழலி.
அவரிடம் பேசியபோது: “அரிசித் தவிடு எண்ணெய்யை உடலுக்கு நன்மை தரும் எண்ணெயாகும். உடலுக்குத் தேவையான நுண் ணூட்டங்களான கால்சியம், இரும்புச் சத்து, வைட்ட மின் ஏ, பி குரூப் வைட்டமின்கள் போன்ற வையும், புரதச் சத்தும் மிகுந்துள்ளன.
சமையல் எண்ணெய் பொருத்தவரையில், மணிலா எண்ணெய், கடுகு எண்ணெய் (3:1), நல்லெண்ணெய், மணிலா எண்ணெய் (1:1) என்ற விகிதத்தில் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு எண்ணெய்யில் இருக்கும் நன்மைகள் கிடைப்பதுடன் சில தீமைகளும் தவிர்க்கப்படும்.
அரிசி, அதன் மேலிருக்கும் உமி, அதற்குப் பிறகு இருக்கும் தவிடு, அதற்கடுத்து இருக்கும் விதையின் பிரதான பாகம், அதனுள் இருக்கும் உள்கரு என்று நான்கு முக்கிய பாகங் களைக் கொண்டது 'அரிசித் தவிடு'. வெளிப்புறத்தில் இருக்கும் கடினமான, சாப்பிட முடியாத பாகம் தான் உமி. அதை நீக்கியவுடன் விதைப் பகுதியுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் தவிடு என்னும் மெல்லிய உறையும் நவீன அரிசி ஆலைகளில் நீக்கப்படுகிறது. இந்தத் தவிடில்தான் அரிசித் தவிடு எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது.
அரிசியைப் புழுங்க வைக்கும்போது, நிறம் மாறி, மணம், சுவை இழந்து மென்மையாகிவிடுவதால், பிரட், நொறுக்குகள், குக்கீஸ், பிஸ்கட் போன்றவை செய்வதற்கும் இந்தத் தவிடு பயன்படுத்தப்படுகிறது. நார்ச்சத்து இருப்பதால், இந்த வகையான நொறுக்குத் தின்பண்டங்கள் நீரிழிவு, உடல் எடை குறைப்பு, இதய நோயாளிகளுக்கு பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகிறது.
This story is from the August 24, 2025 edition of Dinamani Vellore.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 9,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Vellore
Dinamani Vellore
தமிழகத்தில் 38 சுங்கச்சாவடிகளில் இன்றுமுதல் கட்டணம் உயர்வு
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 38 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்வு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
1 min
September 01, 2025
Dinamani Vellore
இலங்கையில் தமிழக மீனவர்களின் 60 விசைப்படகுகள் உடைத்து அகற்றம்
இலங்கை மயிலிட்டி துறைமுகத்தில் அரசுடைமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 60 விசைப்படகுகளை உடைத்து அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
1 min
September 01, 2025
Dinamani Vellore
சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றது இந்தியா
ஜப்பானை வீழ்த்தி 2-ஆவது வெற்றி கண்டது
1 min
September 01, 2025
Dinamani Vellore
விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?
திமுகவை தொடங்கிய முன்னாள் முதல்வர் அண்ணா, 1935-லிருந்து நீதிக்கட்சியில் செயல்பட்டவர்.
2 mins
September 01, 2025
Dinamani Vellore
பரமக்குடி அருகே கார் - சரக்கு வாகனம் மோதல்: 4 பேர் உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நென்மேனி நான்கு வழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் காரும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.
1 min
September 01, 2025
Dinamani Vellore
அமெரிக்க கூடுதல் வரி விதிப்பால் திரும்பும் கடல் உணவுகள்
அமெரிக்கா விதித்த 50 சதவீத இறக்குமதி வரி விதிப்பு காரணமாக, அங்கு அனுப்பப்பட்ட கடல் உணவுகள் திருப்பியனுப்பப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால், தொழிலாளர்களும் ஏற்றுமதியாளர்களும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
1 mins
September 01, 2025
Dinamani Vellore
நாட்டிலேயே முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாகத் திகழ்கிறது கேரளம்
நாட்டிலேயே முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாகக் கேரளம் திகழ்கிறது என்று விஐடி வேந்தர் கோ. விசுவநாதன் தெரிவித்தார்.
1 min
September 01, 2025
Dinamani Vellore
பிகாரில் அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய அட்டை
தேர்தல் ஆணையம் திட்டம்
1 min
September 01, 2025
Dinamani Vellore
வர்த்தகம், முதலீடு விரிவாக்கம்: இந்தியா-சீனா முடிவு
உலகளாவிய வர்த்தகத்தை ஸ்திரமாக்கும் நோக்கில், இந்தியா-சீனா இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை விரிவாக்கவும், வர்த்தகப் பற்றாக்குறையை குறைக்கவும் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஞாயிற்றுக்கிழமை தீர்மானித்தனர்.
1 mins
September 01, 2025
Dinamani Vellore
பின்னலாடை பாதிப்புக்கு மாநில அரசு நடவடிக்கை தேவை
அமெரிக்க வரிவிதிப்பால் கோவை, திருப்பூரில் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைகள் தொழிற்சாலைகள் பாதிக்கப்படாத வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
1 min
September 01, 2025
Translate
Change font size