Try GOLD - Free
துறவும் சமூக நீதியும்
Dinamani Tiruvannamalai
|May 29, 2025
அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும். அனைவரையும் சமமாகப் பார்க்க வேண்டும் என்பதே சமூக நீதி. இந்தக் கோட்பாட்டைத் தனது மனநிலையாகக் கொண்டவரே துறவி. அதனால்தான் சமுதாயத்தில் துறவி பெருமதிப்பு பெறுகிறார்.
பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க, அஷ்ட ஐஸ்வரியங்களோடும் நீடு வாழ்க என வாழ்த்துவது இந்திய மரபு. வளமான வாழ்க்கை உயர்ந்தது என்ற சிந்தனை இருப்பதாலேயே அப்படிப் பெரியோர்கள் ஆசி வழங்குகிறார்கள். செல்வச் செழிப்போடு வாழ்கிறவர்கள் சமுதாயத்தில் மதிப்புடன் நடத்தப்படுகிறார்கள்.
பட்டினத்தடிகள் வாழ்வில் ஒரு சம்பவம் உண்டு. பட்டினத்தடிகள் மன்னர்களுக்கே பொருளுதவி செய்யும் அளவிலான செல்வந்தர். செல்வத்தைச் சேர்ப்பதில் ஆர்வம் கொண்டவர். அவரது வளர்ப்புப் பிள்ளை, 'காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே' என்று சொன்னதைக் கேட்ட வினாடியில் அனைத்துச் செல்வங்களையும் விடுத்து துறவியாகிறார். கோயில் மண்டபங்களில் அமைதியாய் வாழ்கிறார். பிச்சையெடுத்து உண்கிறார்.
இதனை அறிந்த மன்னர் பட்டினத்தடிகளைத் தேடி வருகிறார். கோயில் மண்டபத்தில் அமர்ந்திருந்த அடிகளை வணங்குகிறார். மன்னரைக் கண்டு புன்னகைக்கிறார் அடிகள். மன்னர் கூப்பிய கைகளோடு 'ஐயா, தாங்கள் இப்படிச் செய்யலாமா?, இப்படி துறவுகொள்வதால் தங்களுக்கு என்ன கிடைத்தது?, எதை அடைந்தீர்கள்? என்று வினவுகிறார். மலர்ந்த முகத்துடன் அடிகள், 'நான் இருக்க நீர் நிற்க', என்று பதில் சொல்கிறார்.
அதாவது அரசனாக நாடாள்பவர் துறவிக்கு முன்னே பணிந்து நின்று வணங்குவது என்ற மரியாதை துறவின் தனிச்சிறப்பு. செல்வத்தோடு வாழ்வது சிறப்பு என்று ஆசி வழங்கும் தேசத்தில் எந்தச் செல்வமும் எனக்குத் தேவையில்லை என்று துறந்துவிட்ட ஒருவரை எல்லாவற்றினும் உயர்வான உன்னத நிலையில் வைக்கிறோம்.
துறவு மேற்கொள்பவர் தனது உறவுகளை, உறவுக்கான பொறுப்புகளைத் துறந்து வெளியேறுகிறார். என்றாலும் அவரை தேசம் கொண்டாடுகிறது ஏன்? எதனால் செல்வந்தர்களை, அரசாள்பவர்களைவிடத் துறவி உயர்ந்தவர்? எதன் அடிப்படையில் துறவி இத்தகைய மரியாதையைப் பெறுகிறார்?
துறவி எதனிடத்திலும் பற்றுக்கொள்ளாமல் புலன்களை அடக்கி மனநிறைவு கொண்டவராக மனிதர்கள் மட்டுமல்லாது, அனைத்து ஜீவன்களையும் சமமாகப் பார்க்கிறார். எல்லா உயிர்களையும் ஒன்றெனக் காணும் பார்வை அவருக்கு வாய்க்கப் பெறுகிறது.
This story is from the May 29, 2025 edition of Dinamani Tiruvannamalai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tiruvannamalai
Dinamani Tiruvannamalai
பிகார் 2-ஆம் கட்டத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடக்கம்
பிகார் இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (அக்.13) தொடங்கியது.
1 min
October 14, 2025
Dinamani Tiruvannamalai
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரம்: அரசுகள் பதிலளிக்க உத்தரவு
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற் கொள்ளக் கோரியும், அணையை செயலிழக் கச் செய்யக் கோரியும் தாக்கல் செய்யப்பட் டுள்ள மனு மீது பதிலளிக்க மத்திய அரசு, தமி ழகம் மற்றும் கேரள அரசுகளுக்கு உச்சநீதிமன் றம் திங்கள் கிழமை உத்தரவிட்டது.
1 min
October 14, 2025
Dinamani Tiruvannamalai
சர்வதேச சந்தைகள் பலவீனம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீன பொருள்களுக்கு வரும் நவம்பர் 1 முதல் கூடுதலாக 100 சதவீத வரி அறிவித்ததைத் தொடர்ந்து உலக சந்தைகளில் காணப்பட்ட பலவீனமான போக்கு காரணமாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் எஃப்எம்சிஜி பங்குகளில் விற்பனை அழுத்தம் ஏற்பட்டு இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை சரிவைக் கண்டன.
1 min
October 14, 2025
Dinamani Tiruvannamalai
வாய்ப்புகளைப் பயன்படுத்துங்கள்!
தென்காசி மாவட்டம், சங்கரன் கோவிலில் இளைஞரிடம் தங்க நகையைப் பறித்ததாக திருநங்கைகள் 2 பேரை போலீஸார் அண்மையில் கைது செய்தனர். சங்கரன்கோவில் தற்காலிக பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்தபோது, அந்த இளைஞரை தனியாக அழைத்துச் சென்று அவர் அணிந்திருந்த தங்க நகையைப் பறித்துள்ளனர் அந்தத் திருநங்கைகள்.
2 mins
October 14, 2025
Dinamani Tiruvannamalai
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி
தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
1 min
October 14, 2025
Dinamani Tiruvannamalai
கோகோ கெளஃப் சாம்பியன்
சீனாவில் நடைபெற்ற வூஹான் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில், அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் கோப்பை வென்றார்.
1 min
October 13, 2025

Dinamani Tiruvannamalai
பிகாரில் ஆட்சியைத் தீர்மானிக்கும் பெண் வாக்காளர்கள்!
எதிர்வரும் நவம்பர் 6 மற்றும் 11-இல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பெண் வாக்காளர்களின் பங்கு, அங்கு நிலவி வரும் ஜாதிய ஆதிக்கத்தைவிட மிக முக்கியமானதாக இருக்கப் போகிறது.
2 mins
October 13, 2025
Dinamani Tiruvannamalai
மேலும் இரண்டு ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் ராஜிநாமா
பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் மேலும் இரு எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
1 min
October 13, 2025
Dinamani Tiruvannamalai
மதிப்புக்கு உரிய மதிப்பு!
ஒரு பொருளின் மெய்யான மதிப்பு எப்போது முழுமையாகத் தெரியும்? 'இப்படி ஒரு கேள்வியை இலக்கியப் பயிலரங்கு ஒன்றில் பங்கேற்பாளர்களிடம் கேட்டேன். விலையைப் பொருத்தது' என்றார் ஒரு மாணவர்.
3 mins
October 13, 2025

Dinamani Tiruvannamalai
மேற்கிந்தியத் தீவுகள் ‘:பாலோ ஆன்’
குல்தீப், ஜடேஜா அபாரம்
1 min
October 13, 2025
Translate
Change font size