Prøve GULL - Gratis

துறவும் சமூக நீதியும்

Dinamani Tiruvannamalai

|

May 29, 2025

அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும். அனைவரையும் சமமாகப் பார்க்க வேண்டும் என்பதே சமூக நீதி. இந்தக் கோட்பாட்டைத் தனது மனநிலையாகக் கொண்டவரே துறவி. அதனால்தான் சமுதாயத்தில் துறவி பெருமதிப்பு பெறுகிறார்.

- கோதை ஜோதிலட்சுமி

பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க, அஷ்ட ஐஸ்வரியங்களோடும் நீடு வாழ்க என வாழ்த்துவது இந்திய மரபு. வளமான வாழ்க்கை உயர்ந்தது என்ற சிந்தனை இருப்பதாலேயே அப்படிப் பெரியோர்கள் ஆசி வழங்குகிறார்கள். செல்வச் செழிப்போடு வாழ்கிறவர்கள் சமுதாயத்தில் மதிப்புடன் நடத்தப்படுகிறார்கள்.

பட்டினத்தடிகள் வாழ்வில் ஒரு சம்பவம் உண்டு. பட்டினத்தடிகள் மன்னர்களுக்கே பொருளுதவி செய்யும் அளவிலான செல்வந்தர். செல்வத்தைச் சேர்ப்பதில் ஆர்வம் கொண்டவர். அவரது வளர்ப்புப் பிள்ளை, 'காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே' என்று சொன்னதைக் கேட்ட வினாடியில் அனைத்துச் செல்வங்களையும் விடுத்து துறவியாகிறார். கோயில் மண்டபங்களில் அமைதியாய் வாழ்கிறார். பிச்சையெடுத்து உண்கிறார்.

இதனை அறிந்த மன்னர் பட்டினத்தடிகளைத் தேடி வருகிறார். கோயில் மண்டபத்தில் அமர்ந்திருந்த அடிகளை வணங்குகிறார். மன்னரைக் கண்டு புன்னகைக்கிறார் அடிகள். மன்னர் கூப்பிய கைகளோடு 'ஐயா, தாங்கள் இப்படிச் செய்யலாமா?, இப்படி துறவுகொள்வதால் தங்களுக்கு என்ன கிடைத்தது?, எதை அடைந்தீர்கள்? என்று வினவுகிறார். மலர்ந்த முகத்துடன் அடிகள், 'நான் இருக்க நீர் நிற்க', என்று பதில் சொல்கிறார்.

அதாவது அரசனாக நாடாள்பவர் துறவிக்கு முன்னே பணிந்து நின்று வணங்குவது என்ற மரியாதை துறவின் தனிச்சிறப்பு. செல்வத்தோடு வாழ்வது சிறப்பு என்று ஆசி வழங்கும் தேசத்தில் எந்தச் செல்வமும் எனக்குத் தேவையில்லை என்று துறந்துவிட்ட ஒருவரை எல்லாவற்றினும் உயர்வான உன்னத நிலையில் வைக்கிறோம்.

துறவு மேற்கொள்பவர் தனது உறவுகளை, உறவுக்கான பொறுப்புகளைத் துறந்து வெளியேறுகிறார். என்றாலும் அவரை தேசம் கொண்டாடுகிறது ஏன்? எதனால் செல்வந்தர்களை, அரசாள்பவர்களைவிடத் துறவி உயர்ந்தவர்? எதன் அடிப்படையில் துறவி இத்தகைய மரியாதையைப் பெறுகிறார்?

துறவி எதனிடத்திலும் பற்றுக்கொள்ளாமல் புலன்களை அடக்கி மனநிறைவு கொண்டவராக மனிதர்கள் மட்டுமல்லாது, அனைத்து ஜீவன்களையும் சமமாகப் பார்க்கிறார். எல்லா உயிர்களையும் ஒன்றெனக் காணும் பார்வை அவருக்கு வாய்க்கப் பெறுகிறது.

FLERE HISTORIER FRA Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

கோகோ கெளஃப் சாம்பியன்

சீனாவில் நடைபெற்ற வூஹான் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில், அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் கோப்பை வென்றார்.

time to read

1 min

October 13, 2025

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

பிகாரில் ஆட்சியைத் தீர்மானிக்கும் பெண் வாக்காளர்கள்!

எதிர்வரும் நவம்பர் 6 மற்றும் 11-இல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பெண் வாக்காளர்களின் பங்கு, அங்கு நிலவி வரும் ஜாதிய ஆதிக்கத்தைவிட மிக முக்கியமானதாக இருக்கப் போகிறது.

time to read

2 mins

October 13, 2025

Dinamani Tiruvannamalai

மேலும் இரண்டு ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் ராஜிநாமா

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் மேலும் இரு எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

time to read

1 min

October 13, 2025

Dinamani Tiruvannamalai

மதிப்புக்கு உரிய மதிப்பு!

ஒரு பொருளின் மெய்யான மதிப்பு எப்போது முழுமையாகத் தெரியும்? 'இப்படி ஒரு கேள்வியை இலக்கியப் பயிலரங்கு ஒன்றில் பங்கேற்பாளர்களிடம் கேட்டேன். விலையைப் பொருத்தது' என்றார் ஒரு மாணவர்.

time to read

3 mins

October 13, 2025

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

மேற்கிந்தியத் தீவுகள் ‘:பாலோ ஆன்’

குல்தீப், ஜடேஜா அபாரம்

time to read

1 min

October 13, 2025

Dinamani Tiruvannamalai

வரலாறு படைத்தார் வசெராட்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டியில், மொனாகோ வீரர் வாலெண்டின் வசெராட் சாம்பியன் கோப்பை வென்று வரலாறு படைத்தார்.

time to read

1 min

October 13, 2025

Dinamani Tiruvannamalai

முதலிடத்தில் புணே

புது தில்லி, அக். 12: புரோ கபடி லீக் போட்டியின் 79-ஆவது ஆட்டத் தில், புணேரி பல்டன் 'சூப்பர் ரெய்ட்’ வாய்ப்பில் தபங் டெல்லி கே.சி.யை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

time to read

1 min

October 13, 2025

Dinamani Tiruvannamalai

அலிசா ஹீலி அதிரடி: ஆஸ்திரேலியா வெற்றி

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 13-ஆவது ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

time to read

1 min

October 13, 2025

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

பெண் கல்வியின் அவசியம்

சிவன் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் உருவாகி வரும் படம் 'பொம்மி அப்பா பேரு சிவன்'. கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இப்படத்தை இயக்கி தயாரிக்கிறார் சிவன் சுப்ரமணி. பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

October 12, 2025

Dinamani Tiruvannamalai

சென்னை அரசு மருத்துவமனைகளில் தயார் நிலையில் தனி வார்டுகள்

அரசு மருத்துவமனைகளில் 71 படுக்கைகளுடன் டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

time to read

1 min

October 12, 2025

Translate

Share

-
+

Change font size