Try GOLD - Free
மனமது செம்மையானால்...
Dinamani Tiruvallur
|May 13, 2025
டும்ப உறவுகளில் சுமுகத்தன்மை நிலவ குடும்ப உறுப்பினர்களிடையே விட்டுக் கொடுத்தல், சகிப்புத் தன்மை, உள் ஒன்று வைத்துப் புறமொன்று பேசாத வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடித்தல் போன்ற குணங்கள் அவசியமாகும்.
குடும்பநல நீதிமன்றங்களில் தொடுக்கப்படும் வழக்குகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. உடன் பிறந்தாருக்கே சொத்துரிமையை சற்றே விட்டுக் கொடுக்க மறுக்கும் மனநிலை காரணமாக ஒருவரையொருவர் அழிக்கவும் துணிகின்றனர். இவற்றுக்கு அப்பாற்பட்டு குடும்ப உறவுகளிடையே நல்லுறவைப் பராமரிப்பது நன்கு பக்குவப்பட்ட மனநிலை கொண்ட வர்களுக்கே சாத்தியமாகும்.
நம்மால் பேசப்படாத வார்த்தைகளுக்கு நாம் எஜமானர். நம்மால் பேசப்பட்ட வார்த்தைகள் நமக்கு எஜமானர் என்பதை உணர்ந்தாலே எதையும் பேசுவதற்கு ஒரு முறைக்கு இரு முறை பல முறை யோசிக்கத் தோன்றும். துரதிருஷ்டவசமாக, நம்மில் பலர் தெரிந்தே சாத்தியமில்லாத வாக்குறுதிகளை அள்ளிவீசுவதும் பின்னர் அதற்காக பெயரளவில் வருத்தம் தெரிவிப்பதும் மிகச் சாதாரணமாகி விட்டது.
மன மகிழ்ச்சியான குடும்பத்துக்கு, குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரின் மனநலனும் இன்றியமையாதது. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான அச்சு, மின்னணு ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் குடும்பங்களில் நிலவும் சச்சரவுகள், அதன் காரணமாக நடைபெறும் கொலைச் சம்பவங்களையே பிரதானமாகப் பார்க்க முடிகிறது. 'மனத்துக்கண் மாசிலன் ஆதல்; அனைத்தறன் ஆகுல நீர்' என்கிற திருக்குறள், மனதில் தீய எண்ணங்கள் இல்லாதிருத்தலே எல்லா அறங்களையும் பெற்றதற்கு நிகர் என்கிறது. ஆனால், மனதை மாசடையச் செய்யும் புறக்காரணிகள் நிறைந்த சூழலில் நாம் வாழும் நிலையில் உள்ளோம். இப்புறக் காரணிகளுள் தொடர் நாடகங்களை ஒளிபரப்பும் சில தனியார் தொலைக்காட்சி சேனல்களும் இருப்பதுதான் வேதனை.
This story is from the May 13, 2025 edition of Dinamani Tiruvallur.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tiruvallur
Dinamani Tiruvallur
பழந்தமிழரின் காலநிலை அறிவு!
நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம் ஆகிய ஐம்பெரும் பூதங்களின் இயக்கங்களால் உலகம் இயங்கி வருகிறது. அவற்றுள், நீரின்றி உலகில் எந்த உயிரும் இயங்க இயலாது. அதனால்தான் திருக்குறளில் கடவுள் வாழ்த்துக்கு அடுத்து, வான் சிறப்பு என்ற அதிகாரத்தை திருவள்ளுவர் படைத்துள்ளார்.
1 min
October 12, 2025
Dinamani Tiruvallur
சென்னை அரசு மருத்துவமனைகளில் தயார் நிலையில் தனி வார்டுகள்
அரசு மருத்துவமனைகளில் 71 படுக்கைகளுடன் டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
1 min
October 12, 2025

Dinamani Tiruvallur
காலம் பெற உய்யப் போமின்
'காலம் பெற' என்பது விடியற்காலை எனப் பொருள் உணர்த்தும் வழக்குச் சொல்லாகும். 'காலம்பெறப் புறப்பட்டால் தான் அந்த வேலையை முடித்து வீடுதிரும்பலாம்' என்னும் கருத்தில் இச்சொல்லாடல் இடம் பெறுவதை இன்றும் காணலாம்.
2 mins
October 12, 2025
Dinamani Tiruvallur
தீபாவளி ட்ரெய்லர்
வருடா வருடம், பெரிய பண்டிகைகள் அல்லது விடுமுறை நாள்களைக் குறிவைத்து வரிசையாகப் படங்கள் வெளியாவது வழக்கம். இந்த வருடத் தொடக்கத்திலேயே, பெரிய நடிகர்களின் படங்கள் சில வெளியாகி விட்டன. இருப்பினும், இந்த வருடத்தில் எதிர்பார்ப்புக்குரிய சில படங்கள் வெளியாக லைனில் ரெடியாக காத்து நிற்கின்றன. வரும் தீபாவளிக்கு எந்தெந்தப் படங்கள் வெளியாகும் என்பதை இங்கு பார்ப்போம்.
2 mins
October 12, 2025

Dinamani Tiruvallur
உலகம் முழுவதும் தமிழ்க் கலைகளைப் பரப்ப அரசு துணை நிற்கும்
முதல்வர் மு.க.ஸ்டாலின்
2 mins
October 12, 2025
Dinamani Tiruvallur
பாரம்பரியத்தைப் பறைசாற்ற பனை விதை நடவு!
காகிதம் கண்டுபிடிக்கும் முன்பாக பனை ஓலைகள்தான் தமிழர்களின் அறிவுக் களஞ்சியமாகத் திகழ்ந்தன. எழுத்தாணியைக் கொண்டு பனை ஓலை கிழியாமல் எழுதும் திறனைப் பெரும்புலவர்கள் பெற்றிருந்தனர். சங்க இலக்கியங்களைத் தேடிப் பதிப்பித்த தமிழ்த்தாத்தா உவே. சாமிநாதைய்யர், பனை ஓலைகளில் எழுதப்பட்ட நம்முடைய பாரம்பரியத்தை மீட்கவில்லை என்றால் தமிழின் பொக்கிஷங்கள் காணாமல்போய் இருக்கும். பனையின் ஒவ்வொரு பாகமும் மக்களின் பயன்பாட்டுக்கு உகந்தவை. செங்கல்சூளை, வீட்டின் கூரை, சாலை விரிவாக்கம், ரியல் எஸ்டேட் வளர்ச்சி போன்ற காரணங்களால் பனை மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. பனையின் பாரம்பரியத்தை உணர்ந்து பனை விதையை நடவு செய்து வருகிறார், புதுச்சேரி பூரணாங்குப்பத்தைச் சேர்ந்த பனை டி. ஆனந்தன். அவரிடம் பேசியதிலிருந்து:
2 mins
October 12, 2025

Dinamani Tiruvallur
பெண் கல்வியின் அவசியம்
சிவன் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் உருவாகி வரும் படம் 'பொம்மி அப்பா பேரு சிவன்'. கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இப்படத்தை இயக்கி தயாரிக்கிறார் சிவன் சுப்ரமணி. பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
1 min
October 12, 2025
Dinamani Tiruvallur
கோலிவுட் ஸ்டூடியோ!
நட்சத்திரங்களின் ரீயூனியன்!
1 min
October 12, 2025

Dinamani Tiruvallur
காலத்தில் கரைந்துவிட்ட கம்பதாசன்
தாஸ் என்றாலும் தாசன் என்றாலும் பொருள் ஒன்றுதான். இலக்கியத்தில் நாம் முதன்முதல் அறியக்கூடிய தாஸ் வடமொழியில் பல காவியங்களை எழுதிய மகாகவி காளிதாஸ். இந்தியில் இராமாயணம் எழுதிய துளசிதாஸ், கன்னடத்தில் புரந்தரதாஸ், ஹிந்தியில் கபீர்தாஸ், என்று பலர் இருந்திருக்கிறார்கள்.
3 mins
October 12, 2025
Dinamani Tiruvallur
அந்நியச் செலாவணி கையிருப்பு 69,996 கோடி டாலராக சரிவு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு அக்டோபர் 3-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 69,996 கோடி டாலராக சரிந்துள்ளது.
1 min
October 12, 2025
Translate
Change font size