Try GOLD - Free

அரசியல் ஆதாயத்துக்காக நாடாளுமன்றத்தை முடக்குவது நல்லதல்ல

Dinamani Tiruppur

|

August 25, 2025

தங்களின் குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக, நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முடக்குவது நல்லதல்ல என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

புது தில்லி, ஆக. 24:

அண்மையில் நிறைவடைந்த மழைக்கால கூட்டத்தொடரில், பிகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதம் கோரி, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. இடையூறுகள் மற்றும் ஒத்திவைப்புகளால், இரு அவைகளிலும் வழக்கமான அலுவல்கள் பெருமளவில் முடங்கிய நிலையில், அமித் ஷா மேற்கண்ட விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அகில இந்திய பேரவைத் தலைவர்கள் கருத்தரங்கில் அவர் பங்கேற்றுப் பேசியதாவது: நாடாளுமன்றமும் மாநிலப் பேரவைகளும் ஆக்கபூர்வ விவாதங்களுக்கான இடமாகும். ஜனநாயகத்தில் விவாதம் முக்கியமானது. நாடாளுமன்றத்திலோ, பேரவையிலோ விரிவான விவாதம் இல்லையெனில், அவை உயிர்ப்பில்லாத கட்டடங்களாகவே இருக்கும். தேசக் கட்டமைப்பில் அவற்றின் பங்களிப்பும் பாதிக்கப்படும். மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வுகாண கூட்டு விவாதமே சிறந்த வழிமுறை.

அதேநேரம், எதிர்க்கட்சி என்ற பெயரில், தங்களின் குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு அமர்விலும் அவை அலுவல்களை முடக்குவது நல்லதல்ல. எதிர்க்கட்சிகள் எப்போதுமே கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும். இந்த விஷயத்தில் தேசமும், மக்களும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் ஆழமாக சிந்திக்க வேண்டும்.

Dinamani Tiruppur

This story is from the August 25, 2025 edition of Dinamani Tiruppur.

Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 9,500+ magazines and newspapers.

Already a subscriber?

MORE STORIES FROM Dinamani Tiruppur

Dinamani Tiruppur

சீனப் பொருள்களை அதிகம் சார்ந்திருப்பது ஆபத்து

சீனப் பொருள்களை இந்தியா அதிகம் சார்ந்து இருப்பது, உள்நாட்டுத் தொழில்களுக்கு பெரும் ஆபத்தை உருவாக்கும் என்று சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruppur

வெள்ளக்கோவிலில் தக்காளி கிலோ ரூ.20-க்கு விற்பனை

வெள்ளக்கோவில் வாரச் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.20-க்கு ஞாயிற்றுக்கிழமை விற்பனையானது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruppur

சென்னையில் விடியவிடிய பலத்த மழை

அதிகபட்சமாக மணலியில் 270 மி.மீ. பதிவு

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruppur

திரிணமூல் பெண் எம்.பி. மீது எஃப்ஐஆர் பதிவு

ஊடுருவல்காரர்களைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலையைத் துண்டிக்க வேண்டும் என்று பேசிய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது சத்தீஸ்கர் மாநில காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்தனர்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruppur

வெடிகுண்டு மிரட்டல் விவகாரம்: ரஷிய சர்வரில் இருந்து வந்த மின்னஞ்சல்

திருப்பூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் அண்மையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruppur

சாலை விபத்து: சமையலர் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த சமையலர் உயிரிழந்தார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruppur

சின்னர் முன்னேற்றம்; ஸ்வெரெவ் அதிர்ச்சித் தோல்வி

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் யானிக் சின்னர், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். முன்னணி வீரரான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ், 3-ஆவது சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

time to read

1 mins

September 01, 2025

Dinamani Tiruppur

15.வேலம்பாளையத்தில் செப்டம்பர் 3-இல் மின்தடை

15.வேலம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை (செப்டம்பர் 3) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruppur

எம்.பி. சீட் விவகாரத்தில் இபிஎஸ் ஏமாற்றிவிட்டார்

பிரேமலதா குற்றச்சாட்டு

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruppur

வீட்டில் தீ விபத்து: மாற்றுத்திறனாளி உயிரிழப்பு

குன்னூர் அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மாற்றுத்திறனாளி நபர் உடல் கருகி உயிரிழந்தார்.

time to read

1 min

September 01, 2025

Translate

Share

-
+

Change font size