Try GOLD - Free
அனுபவத் தலைமையும் அவசியம்!
Dinamani Tirunelveli
|October 09, 2025
இந்திய அரசியல் சூழலில், இன்றைய இளைய தலைமுறையினர், தாங்கள் விரும்பும் முடிவுகளை விரைவாக அடைய வேண்டும் என்ற ஆர்வத்தில், பாரம் பரியமான அரசியல் குருநாதர்களையும், அனுபவமிக்க மூத்த தலைவர்களையும் புறக்கணிக்கும் போக்கு அதிகரித்து வரு கிறது. இது விரைவான வளர்ச்சிபோல் தோன்றினாலும், நாட்டின் எதிர்காலத் தைக் கேள்விக்குறியாக்கும் ஆபத்தான போக்காகவே அமையும்.
அரசியல் என்பது அதிகாரம் பெறுவது மட்டுமல்ல; அது சமூகத்தையும், தேசத் தின் மதிப்பையும், கோடிக்கணக்கான மக் களின் வாழ்வாதாரத்தையும் தீர்மானிக் கும் ஆழமான ஒரு பொறுப்பு. இவ்வளவு பொறுப்பும் மாண்பும்மிக்க இந்த அரசி யல் களத்தில், வழிகாட்டிகளும் அனுப வமிக்கவர்களும் இல்லாதபோது அது ஆபத்துக்கு வழிவகுக்கும்.
அரசியல் என்பது பாடப் புத்தகங் களில் படிக்க முடியாத ஓர் அனுபவப் பாடம். ஒரு மூத்த தலைவர் தனது வாழ் வில் சந்தித்த சவால்கள், அவர் எடுத்த தவ றான முடிவுகள், அதிலிருந்து கற்ற பாடங் கள் ஆகியவையே ஓர் இளைஞனுக்குக் கிடைக்கும் முதல் பால பாடம். இந்த வழி காட்டுதல் இல்லாதபோது, இளம் தலை வர்கள் முக்கியமான மற்றும் சிக்கலான நேரங்களில் முடிவுகளை எடுக்கும்போது, அதே பழைய தவறுகளைத் திரும்பச் செய் வதற்கு அதிக வாய்ப்புள்ளது.
குருவின் வழிகாட்டுதல் இல்லாத போது, உடனடிப் புகழ் மற்றும் வெற்றிக் காக மட்டுமே அதிகக் கவனம் செலுத்தப் படும். இதனால், தேசத்தின் தொலைநோக் குமிக்க வளர்ச்சி மற்றும் நிலைத் தன்மைக் குத் தேவையான, கடின மான ஆனால் சரியான முடிவுகளை எடுக்க அவர்கள் தயங்கு வார்கள்.
அனுபவம் மிக்கவர்கள் ஒரு சிக்க லின் சமூக, பொருளாதார, வரலாற்றுப் பின்னணி போன்ற எல்லாப் பரிமாணங்க ளையும் உற்றுக் கவனிப்பார்கள். ஆனால், வழிகாட்டுதல் இல்லாத இளைஞர்கள், பிரச்னையின் மேலோட்டமான அம் சங்களை மட்டுமே அணுகி, விரைவான மற்றும் திருப்தியற்ற தீர்வுகளை மட்டுமே வழங்குவார்கள்.
This story is from the October 09, 2025 edition of Dinamani Tirunelveli.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tirunelveli
Dinamani Tirunelveli
கத்தாரில் எரிவாயு ஆலை தீ விபத்து: தமிழகத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு
கத்தார் நாட்டில் உள்ள எரிவாயு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம் பணகுடி, பழவூரைச் சேர்ந்த 3 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
1 min
June 24, 2026
Dinamani Tirunelveli
ஐரோப்பாவை வாட்டும் வெப்ப அலை
ஐரோப்பிய நாடுகளில் தற்போது நிலவி வரும் அதிதீவிர வெப்ப அலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
1 min
June 24, 2026
Dinamani Tirunelveli
அயோத்தி கோயில் நன்கொடை முறைகேடு: எஸ்ஐடி முதல்கட்ட அறிக்கை சமர்ப்பிப்பு
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தி ராமர் கோயிலுக்கு பக்தர்கள் வழங்கிய நன்கொடையில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரித்துவரும் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி), தனது முதல்கட்ட அறிக்கையை மாநில அரசிடம் செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்தது.
1 min
June 24, 2026
Dinamani Tirunelveli
'கட்சி நிதி' என்றால் திமுக பயப்படுவது ஏன்?
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தனது உரையில், 'கட்சி நிதி (பார்ட்டி ஃபண்ட்)' என்று குறிப்பிட்டதற்கு திமுக பயப்படுவது ஏன் எனத் தெரியவில்லை என்று மின், சட்டத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கேள்வி எழுப்பினார்.
1 min
June 24, 2026
Dinamani Tirunelveli
இடதுசாரிகள் ஆதரவு அளிக்காதிருந்தால் தவெக அரசு பதவியேற்றிருக்காது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம் தகவல்
1 min
June 24, 2026
Dinamani Tirunelveli
சட்டப்பேரவையா? படப்பிடிப்புத் தளமா?
முதல்வர் உரையை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்
1 min
June 24, 2026
Dinamani Tirunelveli
தமிழகத்தைச் சேர்ந்த 10 பேருக்கு பத்ம விருதுகள்
தமிழகத்தைச் சேர்ந்த 10 பேருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செவ்வாய்க்கிழமை பத்ம விருதுகளை அளித்தார்.
1 min
June 24, 2026
Dinamani Tirunelveli
ஆர்ஜென்டீனா, பிரான்ஸ், நார்வே முன்னேற்றம்
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா, பிரான்ஸ், நார்வே அணிகள் நாக்அவுட் சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறின.
1 min
June 24, 2026
Dinamani Tirunelveli
100% தூய்மையான ஆட்சிதான் இலக்கு
'மக்கள் பணத்தை தொடமாட்டோம்; முன்பு தொட்டவர்களையும் விட மாட்டோம்; 100% தூய்மையான ஆட்சி என்பதையே இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்' என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் பேசினார்.
1 mins
June 24, 2026
Dinamani Tirunelveli
தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய துரைமுருகன் வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு
தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
June 24, 2026
Translate
Change font size
