Try GOLD - Free
தமிழில் மட்டுமே பேசுவோம்!
Dinamani Tiruchy
|October 28, 2025
மாணவர்களிடையே ‘மாபெரும் தமிழ் கனவு' என்ற தலைப்பில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. பேசியபோது ஒரு செய்தியை வலியுறுத்திக் கூறினேன். அது ‘தமிழ் தெரிந்தவர்களிடம் தமிழிலேயே பேசுங்கள்' என்பதுதான்.
கூடுதலாக, ‘தமிழை பிற சொற்கள் கலப்பின்றி பேசுங்கள் என்பதையும், தமிழில் எழுதிப் பழகுங்கள், படியுங்கள்' என்பதையும் சொன்னேன். அந்த வேண்டுகோளுக்கு மாணவர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது.
தற்போதைய இராக், சிரியா, துருக்கி தேசங்களின் சில பகுதிகளுக்கு முந்தைய பெயர், மெசபடோமியா. மிகத் தொன்மையான நாகரிகம் பிறந்த இடம். அந்த மக்கள் அப்போது பேசிய மொழி, சுமேரியா. இப்போது அந்த மொழி வழக்கில் இல்லை.
ரோமாபுரி பெரும் பேரரசு; அதுவும் மிகத் தொன்மையான நாகரிகம் கொண்டது. அந்த மக்கள் பேசியது, லத்தீன் மொழி. தற்காலத்தில் சில லத்தீன் சொற்கள் அறிவியலில் பயன்படுத்தப்படுகிறது. வேர்ச் சொற்களாக இருக்கிறது. சில மத நிகழ்ச்சிகளில் உச்சரிக்கப்படுகிறது. மற்றபடி லத்தீன் மொழியும் பேச ஆளில்லாமல் தற்போது பேச்சு வழக்கில் இல்லை.
அதேபோல தொன்மையான பல கிரேக்க மொழிகள் வழக்கொழிந்து விட்டன. சீனாவில் ஒரு காலத்தில் பலராலும் பேசப்பட்ட மன்சு மொழி பேசுபவர்கள் இப்போது மிகக் குறைவு. ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனிய தீவில் புழக்கத்தில் இருந்த அனைத்து மொழிகளும் ஆங்கிலேயர் காலனி ஆட்சி செய்த போது அழிந்துவிட்டன.
யுனெஸ்கோவின் கணக்குப்படி தற்போது உலகின் பல பகுதிகளில் மொத்தம் 7,000 மொழிகள் பேசப்படுகின்றன. அதே யுனெஸ்கோவின் கணிப்புப்படி இவற்றில் 40% அதாவது, 2,800 மொழிகள் விரைவில் அழிந்து விடும் நிலையில் இருக்கின்றன. பேசுபவர்கள் இல்லாமல் போக, அந்த மொழிகள் காணாமல் போய்விட்டன.
அந்த 40 சதவீதத்தில் தமிழ் வராமல் இருக்க வேண்டும். இது என்ன அதிசயம்! நாம் தமிழில் பேசிக் கொண்டு தானே இருக்கிறோம்? என்று சிலர் யோசிக்கலாம். ‘நான் சொல்வது ரைட்டு தானே? நீங்க அக்ரி பண்ணலையா? சம் பீப்பிள் வில் நாட் அக்ரி. தட் இஸ் ஓகே' என்பது போலத்தான் தற்போது தமிழில் பலரும் பேசுகிறார்கள்.
அவர்கள் பேசுவது தமிழ் இல்லை; ஆனால், ‘கஞ்சி குடிப்பதற்கு இலார். அதன் காரணங்களும் இன்னதென்று அறியார்' என்று பாரதியார் பாடியதைப் போல, தாங்கள் பேசுவது தமிழ் இல்லை என்பதுகூட அவர்களுக்குத் தெரியாது. மற்ற மொழிச் சொற்கள் கலவாமல் அவர்களால் தமிழ் பேசவே முடியாது. மற்ற மொழிகளில் முதன்மையானது மட்டும்தான் ஆங்கிலம். எனவே, ஆங்கிலம் தவிர சம்ஸ்கிருதம், ஹிந்தி மட்டுமல்ல; இன்னும் சில பிற மொழிச் சொற்களும் தாராளமாக தமிழ் பேசுபவர்களிடம் கலந்திருக்கின்றன.
This story is from the October 28, 2025 edition of Dinamani Tiruchy.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tiruchy
Dinamani Tiruchy
தெலங்கானா அமைச்சராகிறார் அசாருதீன்
தெலங்கானா மாநில அமைச்சராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் வெள்ளிக்கிழமை பதவியேற்கவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min
October 31, 2025
Dinamani Tiruchy
கடன் பிரச்னை தீர்க்கும் தலம்!
பொதுவாக சிவாலயங்களை தரிசிப்பவர்கள் சிவலோகம் போல இருக்கிறது என்று மகிழ்வுடன் கூறுவது இயல்பு. உண்மையிலேயே அப்படிப்பட்ட சிவலோகத்தை தரிசித்து புண்ணியம் பெற வேண்டுபவர்கள் அவசியம் செல்லவேண்டிய தலம், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருமால்குடி. திருக்கடையூர் ஆயுள்நலன் பிரார்த்தனைக்காகச் செல்பவர்கள் அருகிலேயே உள்ள இந்த சிவலோகநாதரை தரிசிக்கக் கூடுதல் பலன் கிடைத்திடும் என்பது பலரும் அறிந்திராத ஒன்று.
1 mins
October 31, 2025
Dinamani Tiruchy
அன்புள்ள ஆசிரியருக்கு...
நடுத்தர மக்களின் வளர்ச்சி
1 min
October 31, 2025
Dinamani Tiruchy
சீன பொருள்களுக்கு 10% வரி குறைப்பு
ஷி ஜின்பிங்கை சந்தித்த பிறகு டிரம்ப் அறிவிப்பு
1 mins
October 31, 2025
Dinamani Tiruchy
இரட்டைப் பெருமை!
பஹ்ரைனில் நடைபெற்ற மூன்றாவது ஆசிய இளையோர் போட்டிகளில், கபடியில் ஆடவர் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளிலுமே தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறது இந்தியா. ஆசிய இளையோர் போட்டியில் முதல் முறையாக நிகழாண்டுதான் கபடிப் போட்டி சேர்க்கப்பட்டது. ஆடவர், மகளிர் இரு பிரிவுகளிலுமே இறுதிச் சுற்றில் இந்தியா சந்தித்த எதிரணி ஈரான் என்பது இப்போட்டியின் மற்றொரு சுவாரசியம்.
2 mins
October 31, 2025
Dinamani Tiruchy
உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி சூர்ய காந்த்
உச்சநீதிமன்றத்தின் 53-ஆவது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார். அவர் வரும் நவம்பர் 24-ஆம் தேதி பதவி ஏற்பார்.
1 min
October 31, 2025
Dinamani Tiruchy
செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்கத் தயக்கம் இல்லை
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்க எந்தவிதத் தயக்கமும் இல்லை என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
1 min
October 31, 2025
Dinamani Tiruchy
டிவிஎஸ் மோட்டார் வருவாய் உயர்வு
கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாரின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 42 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
October 30, 2025
Dinamani Tiruchy
டிஎம்பி நிகர லாபம் ரூ. 318 கோடியாக உயர்வு
2025-26-ஆம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு 1921 முதல் செயல்பட்டு வரும் தனியார் வங்கியான தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் (டிஎம்பி) நிகர லாபம் ரூ.318 கோடியாக உயர்ந்துள்ளது.
1 min
October 30, 2025
Dinamani Tiruchy
அமெரிக்காவுக்கான ஏற்றுமதி விரைவில் இரு மடங்காகும்
குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்
2 mins
October 30, 2025
Listen
Translate
Change font size

