Try GOLD - Free

‘தீபாவளி பரிசு’ கிடைக்க...

Dinamani Tiruchy

|

September 10, 2025

ஜிஎஸ்டி குறைப்பு குறித்து தமிழ்நாடு அரசு தனது பெரும் ஆதரவை வெளிப்படுத்தவில்லை. இந்தப் புதிய அறிவிப்பின்படி, அன்றாடம் பயன்படுத்தப்படும் மளிகைப் பொருள்கள் பலவற்றுக்கும் வரிகள் குறைக்கப்பட்டிருப்பது சாதாரண மக்களுக்கு தீபாவளிப் பரிசு என்று மத்திய அரசு கூறியிருப்பது முற்றிலும் உண்மையா?

- முனைவர் வைகைச்செல்வன்

சரக்கு, சேவை வரி தொடர்பாக பல முக்கிய அறிவிப்புகளை மத்திய நிதித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இவற்றில் இரண்டடுக்கு சரக்கு சேவை விகித முறை ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. 12%, 28% அடுக்குகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. 5%, 18% என இரண்டு புதிய விகிதங்கள் நீண்ட நாள் ஒரு முடிவை எட்டப்படாமல் இருந்த நிலையில், ஒருமித்த கருத்து ஏற்பட்டிருக்கிறது. இவற்றில் சில வரவேற்புகளும், இந்த மாற்றத்தினால் ஏதோ அரசியல் இருப்பதாக எதிர் முகாமும் மாறி மாறி தங்கள் விவாதங்களை வைத்திருக்கிறது.

ஜிஎஸ்டி சீர்திருத்தம் மற்றும் பொருள்கள் மீதான வரிக் குறைப்பு வரவேற்கத்தக்கது என்றும் ஒருசாராரும், சீர்திருத்தம் செய்வதற்கு 8 ஆண்டுகள் தேவைப்பட்டது என்றும் எதிர்க்கட்சிகளும் கேள்விகளை எழுப்பியிருக்கின்றன. ஜிஎஸ்டி வரியில் மாற்றத்தைக் கொண்டு வர மத்திய அரசைத் தூண்டியது எது? மந்தமான பொருளாதார வளர்ச்சியா?, வீட்டுக் கடன் அதிகரிப்பா?, வீட்டுச் சேமிப்பு குறைவதா?, பிகார் தேர்தலா?, டிரம்ப்பின் வரி விதிப்பா அல்லது இவை அனைத்துமா என்று காங்கிரஸ் கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

ஜிஎஸ்டி கவுன்சிலின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை முழுமனதுடன் வரவேற்கின்றனர் மத்திய அரசின் ஆதரவுத் தரப்பினர். இருந்த போதிலும் மாநில வருவாய், மாநில நிதி சுயாட்சி பாதுகாப்பு குறித்து மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என்று குறைபட்டுக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. இப்படி எதிரும், புதிருமான இந்தச் சீர்திருத்தத்தால் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களின் மீதான வரிகளைக் குறைத்திருப்பதன் மூலம் ஏழை எளியவர்களின் பணச்சுமை குறைந்திருக்கிறது என்பதை நாம் மறந்து விடமுடியாது.

MORE STORIES FROM Dinamani Tiruchy

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

435 மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார் ஆளுநர்

time to read

1 mins

November 04, 2025

Dinamani Tiruchy

விதர்பா 501 ரன்கள் குவிப்பு

கோவை, நவ. 3: ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில், தமிழ்நாடுக்கு எதிரான ஆட்டத்தில் விதர்பா முதல் இன்னிங்ஸில் 501 ரன்கள் குவித்து திங்கள்கிழமை ஆட்டமிழந்தது.

time to read

1 min

November 04, 2025

Dinamani Tiruchy

டெட் தேர்வு: அனுமதிச் சீட்டு வெளியீடு

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

time to read

1 min

November 04, 2025

Dinamani Tiruchy

ஜாதி ஆதிக்கத்தில் பிகார் தேர்தல் அரசியல்!

பிகார் தேர்தல் களத்தில் வேட்பாளர்கள் தேர்வு, வாக்கு வங்கியைத் தக்கவைப்பது ஆகியவற்றில் ஜாதிய ஆதிக்கம் மேலோங்கியுள்ளது.

time to read

2 mins

November 04, 2025

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

மாற்றத்துக்கான தொடக்கம் இந்த வெற்றி

இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர்

time to read

2 mins

November 04, 2025

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

மாநில கூடைப்பந்து, வாலிபால் போட்டி

சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூரில் நடைபெற்ற எஸ்ஆர்எம் ஐஎஸ்டி சேர்மன் கோப்பை பள்ளிகள் இடையிலான மாநில கூடைப்பந்து, வாலிபால் போட்டிகளில் தஞ்சாவூர், ஆத்தூர், திருநெல்வேலி அணிகள் பட்டம் வென்றன.

time to read

1 min

November 04, 2025

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

இலங்கை கடற்படையினரால் 35 தமிழக மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, நாகை மீனவர்கள் 31 பேரையும், ராமநாதபுரம் மீனவர்கள் 4 பேரையும் இலங்கை கடற்படையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.

time to read

1 mins

November 04, 2025

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக வழக்கு

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

time to read

1 mins

November 03, 2025

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

சமன்செய்து சீர்தூக்கும் கோல்!

தமிழர்களின் பண்பாட்டையும் தொன்மையையும் விளக்கும் எத்தனையோ விதமான பொருள்கள் இன்றும் பயன்பாட்டில் இருக்கின்றன. அவற்றுள் சில மறைந்து போயின; பல நமக்கு மறந்து போயின. அவ்வாறு மறந்து விட்டாலும் அல்லது இழந்து விட்டாலும் நம் நெஞ்சை விட்டு அவை இன்னும் அகலவில்லை.

time to read

3 mins

November 03, 2025

Dinamani Tiruchy

அன்புள்ள ஆசிரியருக்கு...

காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணி எல்லா ஆட்சி காலத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ('தேவை அவசர அறிவிப்பு!'-ஆசிரியர் உரை, 28.10.25). இம்முறை மேட்டூர் அணை உரிய நாளில் திறந்து விடப்பட்டு பருவ மழை சாதகமாக இருந்த காரணத்தால் குறுவை சாகுபடியும் அதிக பரப்பளவில் நடந்தது. நெல் கொள்முதலும் எதிர்பார்த்தபடி அதிக அளவில் இருக்கும் எனத் தெரியவந்தது. ஆனால், இயற்கை செய்த சதி டெல்டா மாவட்டங்களில் தீபாவளிக்கு முன் மூன்று நாள்கள் பெய்த பெருமழைதான். தொடர் தீபாவளி விடுமுறை, தீபாவளியின்போது பெய்த மழை, நெல் கொள்முதலில் ஏற்பட்ட சுணக்கம் விவசாயிகளைப் பழிவாங்கி விட்டது. இனியாவது அசிரத்தைக்கொள்ளாமல், நெல் கொள்முதலில் உரிய நடவடிக்கை மேற்கொண்டால் விவசாயம் செழிக்கும்.

time to read

1 min

November 03, 2025

Translate

Share

-
+

Change font size