Try GOLD - Free

சிறப்பு தீவிர திருத்தம் எனும் தேர்தல் பதற்றம்

Dinamani Tiruchy

|

August 14, 2025

சிறப்பு தீவிர திருத்தம் என்பது குழப்பத்தையும், மோசமான சூழ்நிலையையும் உருவாக்கியுள்ளது. நிரபராதிகள் என்று நிரூபிக்கப்படாதவரை குற்றவாளிகள் என்று பிகார் வாக்காளர்கள் கருதப்படுகிறார்கள். இது தவறான முன்னுதாரணமாக மட்டுமல்லாது சட்டத்தின் அடிப்படை விதிகளையும் மீறுகிறது.

- மணீஷ் திவாரி

காரில் இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் சிறப்பு தீவிர திருத்தம் என்பது ஜனநாயகம், சட்டத்தின் அடிப்படையிலான உலகளாவிய வாக்குரிமை முறையை மறுகட்டமைப்பதாகவே அமைகிறது. இந்த இயந்திரத்தனமான வாக்குரிமைப் பறிப்பு, நாட்டின் அதிகார மையம் நேர்மையாக செயல்படுவதாக வேடமிட்டுள்ளதையும், அரசமைப்புச் சட்டத்தை மீறி செயல்படுவதையும் அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது.

இந்திய தேர்தல் ஜனநாயகத்தின் அடித்தளம் அரசமைப்புச் சட்டப் பிரிவு 326 ஆகும். அது சற்று தெளிவற்றதாகவும், சில கட்டுப்பாடுகளை உள்ளடக்கியதாகவும் அமைகிறது. தேர்தல்களில் வாக்களிக்க இந்திய குடிமகனாகவும் 18 வயதுக்கு குறையாதவராகவும் இருக்க வேண்டும். மனநிலை சரியில்லாதவர், குற்ற நடவடிக்கைகள், ஊழல், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு உரிய சட்டங்களின்படி தண்டிக்கப்பட்டு தகுதிநீக்கம் செய்யப்பட்டவர்கள் தவிர மற்றவர்கள் வாக்காளர்களாகப் பதிவு செய்ய உரிமை உண்டு.

இதில் 'வாக்காளராக பதிவு செய்ய உரிமை உண்டு' என்ற சொல், ஒரு தவிர்க்க முடியாத அரசமைப்பு உரிமையை உருவாக்கியுள்ளதுடன், வாக்களிக்கும் தகுதியை மறுக்கும் பொறுப்பை அரசுக்கு அளித்துள்ளது. இந்தப் பொறுப்பு உருவாக்கம் நான்கு மாறாத கொள்கைகளை உறுதிப்படுத்துகிறது. முதலாவதாக, வாக்குரிமை என்பது குடியுரிமையின் இயல்பாகவே அரசமைப்புச் சட்டத்தின்படி வழங்கப்பட்ட தகுதி.

இரண்டாவது வாக்களிப்பதற்கான தகுதியிழப்புகள் குறித்தானது. இதன்படி, அரசமைப்புச் சட்டத்தில் ஒரு விஷயத்தை மட்டும் குறிப்பிட்டால், குறிப்பிடப்படாத மற்ற விஷயங்கள் விலக்கப்பட வேண்டியவை என்ற அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

மூன்றாவதாக ஒவ்வொரு தகுதியிழப்புக்கும் நீதித் துறை ஒப்புதல் தேவைப்படுகிறது. நீதிமன்ற அறிவிப்புகளின்படி மன நிலை சரியில்லாதவர், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி சட்டப்பேரவையால் தகுதி நீக்கப்பட்டவர் அல்லது அரசின் பிற நிர்வாக அமைப்புகளால் குறிப்பிட்ட பகுதியில் வசிக்கவில்லை என்று அறிவிக்கப்படுவது. இவை தவிர, பிற வேறு எந்த அமைப்புகளும், விதிகளும் யாருடைய வாக்குரிமையையும் தகுதிநீக்கம் செய்ய முடியாது.

MORE STORIES FROM Dinamani Tiruchy

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

‘நெடுந்தொடர்’ பரிதாபங்கள்!

உண்மையில் நெடுந்தொடரில் வில்லத்தனம் புரியும் சின்னத்திரை நடிகர், நடிகைகளும் அதன் பார்வையாளர்களுமாக எதிரெதிரே அமர்ந்து விவாதிக்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. நிகழ்ச்சியின் கருப்பொருள் சாதாரணமானதாக இருந்தாலும் எளிய மக்களின் வார்த்தைகள் அந்த நிகழ்ச்சிக்கு மிகவும் வலிமையாக இருந்தன. ஒரு கட்டத்தில் தாம் பார்க்கும் நெடுந்தொடர் வில்லிகளைப் பார்த்து எதிரே இருந்த பார்வையாளர்கள் ஆவேசமாகக் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.

time to read

3 mins

November 01, 2025

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் சட்டவிரோத படுகொலை: ஐ.நா.

தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களை ஏற்றிவருவதாகக் கூறி, கரீபியன் தென் அமெரிக்க பகுதிகளில் இருந்து கரீபியன் மற்றும் பசிபிக் கடல் வழியாக வரும் படகுகள் (படம்) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது சட்டவிரோத மனிதப் படுகொலைகள் என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Tiruchy

யுபிஐ சர்க்கிள்: அமேஸானின் புதிய வசதிகள்

தனது பணப்பட்டுவாடா செயலி மூலம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு உடனடியாக பணம் அனுப்புவதற்கான யுபிஐ சர்க்கிள் முறையில் புதிய வசதிகளை அமேஸான் அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Tiruchy

அன்புள்ள ஆசிரியருக்கு...

கட்டுப்பாடு வேண்டும்

time to read

1 min

November 01, 2025

Dinamani Tiruchy

எண்ம வியூகம்!

அடுக்கு மொழிகள், அலங்கார மேடைகள், வானுயர்ந்த கட்-அவுட்கள், வகை வகையான வண்ணச் சுவரொட்டிகள் இவை யாவும் பழைய அரசியல் களத்தின் சிதைந்த எச்சங்கள். இப்போதோ இணைய வழியில் சமூக ஊடகங்களே நவீன அரசியலின் புதிய சிம்மாசனமாக மாறியுள்ளன. அதிலும் குறிப்பாக, தனி மனிதனின் அறிதிறன்பேசியே இன்றைய அரசியல் போர்க்களத்தின் அதிமுக்கிய ஆயுதம்.

time to read

2 mins

November 01, 2025

Dinamani Tiruchy

இரண்டாவது நாளாக பங்குச் சந்தை சரிவு

சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.

time to read

1 min

November 01, 2025

Dinamani Tiruchy

தெலங்கானா அமைச்சராகிறார் அசாருதீன்

தெலங்கானா மாநில அமைச்சராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் வெள்ளிக்கிழமை பதவியேற்கவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

time to read

1 min

October 31, 2025

Dinamani Tiruchy

கடன் பிரச்னை தீர்க்கும் தலம்!

பொதுவாக சிவாலயங்களை தரிசிப்பவர்கள் சிவலோகம் போல இருக்கிறது என்று மகிழ்வுடன் கூறுவது இயல்பு. உண்மையிலேயே அப்படிப்பட்ட சிவலோகத்தை தரிசித்து புண்ணியம் பெற வேண்டுபவர்கள் அவசியம் செல்லவேண்டிய தலம், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருமால்குடி. திருக்கடையூர் ஆயுள்நலன் பிரார்த்தனைக்காகச் செல்பவர்கள் அருகிலேயே உள்ள இந்த சிவலோகநாதரை தரிசிக்கக் கூடுதல் பலன் கிடைத்திடும் என்பது பலரும் அறிந்திராத ஒன்று.

time to read

1 mins

October 31, 2025

Dinamani Tiruchy

அன்புள்ள ஆசிரியருக்கு...

நடுத்தர மக்களின் வளர்ச்சி

time to read

1 min

October 31, 2025

Dinamani Tiruchy

சீன பொருள்களுக்கு 10% வரி குறைப்பு

ஷி ஜின்பிங்கை சந்தித்த பிறகு டிரம்ப் அறிவிப்பு

time to read

1 mins

October 31, 2025

Translate

Share

-
+

Change font size