Try GOLD - Free
சிபிஐ விசாரணை அறிக்கையை ஆக. 20-க்குள் தாக்கல் செய்ய உத்தரவு
Dinamani Tiruchy
|July 09, 2025
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளி யம்மன் கோயில் காவலாளி தனிப்படை போலீஸாரால் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையை சிபிஐ வருகிற ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
-
மதுரை, ஜூலை 8:
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு கடந்த மாதம் 27-ஆம் தேதி வந்த பெண் பக்தரின் நகைகள் காணாமல்போனது தொடர்பாக, அந்தக் கோயிலின் காவலாளி அஜித்குமாரை தனிப்படை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையின் போது, கடந்த மாதம் 28-ஆம் தேதி தனிப்படை போலீஸாரால் அஜித்குமார் அடித்துக் கொல்லப்பட்டார்.
இந்த நிலையில், அஜித்குமார் மரணம் குறித்த விவகாரத்தை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்க வேண்டும் என அதிமுக வழக்குரைஞர்கள் மாரீஸ் குமார், கார்த்திக்ராஜா, மகாராஜன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர்.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் முழு விசாரணையைத் தொடங்க வேண்டும். விசாரணை அறிக்கையை ஜூலை 8-இல் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த மனுக்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம், ஏ.டி. மரிய கிளாட் அமர்வு முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை மாவட்ட 4-ஆவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் முன்னிலையாகி தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார்.
This story is from the July 09, 2025 edition of Dinamani Tiruchy.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tiruchy
Dinamani Tiruchy
எலும்பு உறுதி பெற...
“சோடா பானங்களில் பாஸ்பாரிக் அமிலம் அதிகம் இருக்கின்றன. இதை நாம் அதிகம் குடித்தால் எலும்புகளிலுள்ள கால்சியம் உறிஞ்சப்பட்டு எலும்புகள் வலுவிழக்கும்.
2 mins
May 17, 2026
Dinamani Tiruchy
மணிப்பூர்: பிணைக் கைதிகளை விடுவிக்க பேச்சுவார்த்தை தீவிரம்
மணிப்பூரில் குகி, நாகா சமூகங்களைச் சேர்ந்த ஆயுதக் குழுக்களால் பரஸ்பரம் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளை முழுமையாக விடுவிப்பதற்காக, சமூக அமைப்புகளுடன் மாநில அரசு மற்றும் பாதுகாப்புப் படை பிரதிநிதிகள் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
1 min
May 17, 2026
Dinamani Tiruchy
அருங்காட்சியக அதிசயம்!
முன்னோர்களின் வாழ்க்கைமுறை, கலை, கலாசாரம், வரலாறு, அறிவியல், தொல்லியல் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த பொருள்களைச் சேகரித்து, பாதுகாத்து இன்றைய, எதிர்வரும் தலைமுறையினருக்குக் காட்சிப் படுத்தும் இடம்தான் அருங்காட்சியகங்கள்.
2 mins
May 17, 2026
Dinamani Tiruchy
லிட்டன் தாஸ் சதம்: முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 278
பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
1 min
May 17, 2026
Dinamani Tiruchy
இறுதிச்சுற்றில் சின்னர் - ரூட் பலப்பரீட்சை
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில், உள்நாட்டு நட்சத்திரமான யானிக் சின்னர் - நார்வேயின் கேஸ்பர் ரூட் மோதுகின்றனர்.
1 min
May 17, 2026
Dinamani Tiruchy
வியக்க வைக்கும் கடப்பாக்கம் ஏரி
சென்னை என்றாலே மெரீனா கடற்கரை, காண்போரை வியக்க வைக்கும் வானுயர்ந்த கட்டடங்கள், பறக்கும் ரயில், சுரங்கத்துக்குள் சுற்றிவரும் மெட்ரோ, சாலையில் இரைச்சலுடன் விரையும் கார்கள், இரு சக்கர வாகனங்கள் எனப் பரபரப்பான பெருநகராகவே நினைவுகள் சுழலும்.
1 mins
May 17, 2026
Dinamani Tiruchy
பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்
பிரேமலதா விஜயகாந்த்
1 min
May 17, 2026
Dinamani Tiruchy
அதிமுகவுக்கு அமைச்சர் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது
நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு அளித்த அதிமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவது அரசமைப்பு மற்றும் ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது என விசிக மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
1 min
May 17, 2026
Dinamani Tiruchy
அபிஷேக் பானர்ஜி மீது வழக்குப் பதிவு
தேர்தல் பிரசாரத்தின் போது நடைபெற்ற நிகழ்ச்சிகளில், பொது ஒழுங்கையும் சமூக நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் வகையில், ஆத்திரமூட்டும் கருத்துகளைத் தெரிவித்ததாக மம்தாவின் நெருங்கிய உறவினரும், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
1 min
May 17, 2026
Dinamani Tiruchy
வெள்ளைக் குள்ளன்
இயற்கையின் படைப்புகளானது அழகும், அற்புதமும், பேரதிசயமும், ஆச்சரியமும் புதிரும் நிறைந்தவை. இவை மனிதர்களின் கல்வி, கேள்வி ஞானத்துக்கு அப்பாற்பட்டு அதற்கென்று தகவமைத்துக் கொண்ட விதியில் எளிதில் விளங்கிக் கொள்ள முடியாத பெருங்கால கோட்பாட்டைக் கொண்டிருக்கிறது.
2 mins
May 17, 2026
Translate
Change font size
