Try GOLD - Free
காட்சிக்கு எளியன், கடுஞ்சொல்லன் அல்லன்
Dinamani Thanjavur
|October 05, 2025
அந்த மாணவரின் கையில் விலங்கிட்டு ஆங்கிலேய அரசின் போலீஸார் மதுரை ஆரப்பாளையம் சிறையிலிருந்து நடத்தி, வைகையின் வடகரையிலிருந்த மதுரை மாவட்ட ஆட்சியரின் முன் கொண்டு நிறுத்தினர். மகாத்மா காந்தியின் அழைப்பை ஏற்று, 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் கலந்துகொண்ட அந்த மாணவரை அலிபுரம் சிறையில் 60 நாள்கள் அடைக்கும்படி ஆட்சியர் உத்தரவிட்டார். இதனால் அமெரிக்கன் கல்லூரியில் படிக்கவும் சென்னை பல்கலைக்கழகம் தடை விதித்தது.

அவர் மீண்டும் மதுரைக் கல்லூரி மூலமாக பட்டப் படிப்பை முடித்து, திருச்சி புனித வளனார் கல்லூரியில் ஹானர்ஸ் படித்தார். 1948-இல் சென்னை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் முதுகலையில் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றார்.
1952-இல் தமிழ்நாடு அரசுப் பணியில் சேர்ந்து, 1961-இல் கரூர் துணை ஆட்சியராகப் பொறுப்பேற்றார். தன்னுடைய மென்மையான அணுகுமுறையால் அனைவரையும் கவர்ந்தார். அவருடைய பணியைப் பாராட்டி இந்திய ஆட்சிப் பணியை தமிழ்நாடு அரசு வழங்கி சிறப்பித்தது. மத்திய அரசு அவருக்கு சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான தாமிரப் பட்டயம் வழங்கியது.
1967 ஜூலை 1-இல் எந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுதந்திரத்துக்கு முன்பு கையில் விலங்கிட்டு நிறுத்தப்பட்டாரோ, அதே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுரை மாவட்ட ஆட்சியராக மாடிப் படிகளில் ஏறி, ஆட்சியர் அறையில் அமர்ந்து பணியாற்றத் தொடங்கினார். அவர்தான் ‘காட்சிக்கு எளியன், கடுஞ்சொல்லன் அல்லன்' என்ற வள்ளுவர் வாக்குக்கு வாழும் உதாரணமாயிருக்கும் லட்சுமிகாந்தன் பாரதி.
2025 அக்டோபர் 4-இல் தன்னுடைய 99 வயதை முடித்து, அக். 5-இல் தன்னுடைய நூறாவது அகவையை தொடங்குகிறார் இவர். இவருக்கு 2024-ஆம் ஆண்டில் தினமணி சார்பில் 'பாரதியார் விருது' வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் 'பாரதி' என்ற பட்டப் பெயருடன் விளங்கும் குடும்பங்கள் இரண்டு. இவ்விரு குடும்பத்தின் மூல புருஷர்களுக்கும் 'பாரதி' பட்டத்தை வழங்கி கௌரவித்தவர் அன்றைய எட்டயபுரம் மகாராஜா. ஒருவர் சுப்ரமணிய பாரதி, மற்றொருவர் லட்சுமிகாந்தன் பாரதியின் தாய்வழித் தாத்தா சோமசுந்தர பாரதி. இருவருமே எட்டயபுரத்தை பூர்விகமாகக் கொண்டவர்கள். நான் சட்டப் பேரவை உறுப்பினராக அன்றைய அமைச்சர் ராஜாராமுடன் குற்றாலத்திலிருந்து தென்காசிக்கு வந்து கொண்டிருந்தபோது, 'பாரதி நகர்’ என்ற பெயரைப் பார்த்தவுடன், "இது யார் பெயர் தெரியுமா?" என்கிறத் தகவலைச் சொன்னார் அமைச்சர்.
This story is from the October 05, 2025 edition of Dinamani Thanjavur.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Thanjavur
Dinamani Thanjavur
நேர் நிர்வாகம்-வாழ்வியல் மதிப்பு!
நம்மில் பலரும் அடிக்கடி கேட்கும் தத்துவம், நிகழ்காலத்தில் வாழுங்கள்; இது நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும், செயலுக்கும் அடித்தளமாக இருக்க வேண்டும். ஏனெனில், கடந்த காலத்தை மாற்றுதல் இயலாது; எதிர்காலம் என்பது உறுதியற்றது. எனவே, திறமையுடனும், விழிப்புணர்வுடனும் நாம் வாழக்கூடிய ஒரே பிரதேசம் 'இந்தக் கணம்' மட்டும்தான். அங்கு நிலவும் ஆழ்ந்த விழிப்புணர்வைத்தான், நாம் பொது வாழ்வில் நேரம் தவறாமை என்ற நாகரிகப் பண்பாகப் போற்றுகிறோம்.
2 mins
October 10, 2025

Dinamani Thanjavur
பள்ளிகொண்டா ரங்கநாதர்!
தென்தமிழகத்தில் திருவரங்கம் போல, வடதமிழகத்தில் புகழ்பெற்று விளங்குகிறது, வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் திருக்கோயில்.
1 mins
October 10, 2025
Dinamani Thanjavur
மதுரையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம்: எம்.எஸ். தோனி திறந்து வைத்தார்
மதுரையில் வேலம்மாள் கல்விக் குழுமம் சார்பில் அமைக்கப்பட்ட சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
1 min
October 10, 2025
Dinamani Thanjavur
விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: இளைஞர் கைது
சென்னையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.
1 min
October 10, 2025
Dinamani Thanjavur
பங்குச் சந்தையின் நான்கு நாள் உயர்வுக்கு முடிவு
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி போன்ற முக்கிய பங்குகளின் விற்பனை காரணமாக, பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவற்றின் நான்கு நாள் உயர்வு புதன்கிழமை முடிவுக்குவந்தது.
1 min
October 09, 2025
Dinamani Thanjavur
சபலென்கா, கெளஃபி வெற்றி
சீனாவில் நடைபெறும் வூஹான் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான பெலராஸின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
1 min
October 09, 2025

Dinamani Thanjavur
இந்தியா - பாகிஸ்தான் மோதல் வர்த்தக ரீதியிலான திட்டமிடல்
இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் அதர்டன்
1 mins
October 09, 2025

Dinamani Thanjavur
விமானப் படையின் திறனை உலகுக்கு வெளிப்படுத்திய 'ஆபரேஷன் சிந்துார்'
'மிகக் குறைந்த நாள்களில் வெற்றிகரமான ராணுவ நடவடிக்கைக்கு போர் விமானங்களின் சக்தியை திறம்பட பயன்படுத்த முடியும் என்பதை 'ஆபரேஷன் சிந்துார்' நடவடிக்கை மூலம் உலகுக்கு இந்தியா விமானப்படை நிரூபித்துள்ளது' என்று விமானப் படை தலைமைத் தளபதி ஏ.பி.சிங் தெரிவித்தார்.
1 min
October 09, 2025
Dinamani Thanjavur
அனுபவத் தலைமையும் அவசியம்!
இந்திய அரசியல் சூழலில், இன்றைய இளைய தலைமுறையினர், தாங்கள் விரும்பும் முடிவுகளை விரைவாக அடைய வேண்டும் என்ற ஆர்வத்தில், பாரம் பரியமான அரசியல் குருநாதர்களையும், அனுபவமிக்க மூத்த தலைவர்களையும் புறக்கணிக்கும் போக்கு அதிகரித்து வரு கிறது. இது விரைவான வளர்ச்சிபோல் தோன்றினாலும், நாட்டின் எதிர்காலத் தைக் கேள்விக்குறியாக்கும் ஆபத்தான போக்காகவே அமையும்.
2 mins
October 09, 2025
Dinamani Thanjavur
பிகாரில் தொகுதிப் பங்கீடு பேச்சு தீவிரம்
முதல்வர் வேட்பாளர் நிதீஷ் குமார்: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் அறிவிப்பு
2 mins
October 09, 2025
Translate
Change font size