Try GOLD - Free

கவனம் சிதறக் கூடாது!

Dinamani Thanjavur

|

March 17, 2025

மனிதனின் வாழ்க்கையில் மாணவப் பருவம் மிகவும் முக்கியமானது. மாணவப் பருவத்தில் ஒருவர் பெறுகின்ற கல்வியறிவும், வளர்த்துக்கொள்ளும் குணநலன்களும் அவருடைய எதிர்காலத்தையே வடிவமைக்க வல்லவையாகும்.

- எஸ். ஸ்ரீதுரை

மாணவப்பருவத்தினர் வன்முறையில் நாட்டம் கொள்வது, போதைப் பொருள்களுக்கு அடிமையாவது, சாதி, சமயங்களின் அடிப்படையில் விருப்பு வெறுப்பைக் காட்டுவது, உள்ளூர் உலக அரசியல் விவகாரங்களில் தேவையற்ற ஆர்வத்தை வெளிப்படுத்துவது ஆகியவற்றை அறவே தவிர்ப்பது நல்லது.

‘இளம் கன்று பயம் அறியாது’ என்பதற்கேற்ப, நெறியற்ற விஷயங்களில் ஈடுபடுவதற்கான வேட்கையும் வேகமும் மாணவப் பருவத்தில் உருவாவது இயற்கையே. ஆனால், எதிர்கால முன்னேற்றம் என்ற ஒற்றை நோக்கத்தை மட்டுமே நினைவில் வைத்து நெறியற்ற நடவடிக்கைகளை நாடாமல் இருக்கப் பழக வேண்டும்.

தனியொரு மாணவன் நல்லவனாகவே இருப்பான். ஆனால், பல மாணவர்கள் ஒன்று கூடினால் மோசமானவர்களாக நடந்து கொள்வார்கள் என்று பொருள்படும் ஆங்கிலப் பழமொழியை நிரூபிப்பது போன்று ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று கூடும் வேளைகளில் எத்தகைய அத்துமீறல்களிலும் ஈடுபடுகின்ற தைரியம் அவர்களுக்கு உருவாகிவிடுகின்றது. அதன் வெளிப்பாடாகவே நீண்ட காலமாகத் தொடரும் பல்வேறு பிரச்னைகள் தலைதூக்குகின்றன.

ஒரே கல்லூரி அல்லது பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த மாணவர்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்வது, தாங்கள் பயிலும் கல்லூரி தவிர்த்த இதர கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களை வம்புக்கு இழுப்பது, பேருந்து, ரயில் உள்ளிட்டவற்றில் கூட்டமாக ஏறி ரகளை செய்வது, கல்வீசுவது, பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பொதுவெளிகளில் திரிவது ஆகிய செயல்களில் ஈடுபடும் மாணவர்களால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்படுகின்றது.

MORE STORIES FROM Dinamani Thanjavur

Dinamani Thanjavur

நேர் நிர்வாகம்-வாழ்வியல் மதிப்பு!

நம்மில் பலரும் அடிக்கடி கேட்கும் தத்துவம், நிகழ்காலத்தில் வாழுங்கள்; இது நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும், செயலுக்கும் அடித்தளமாக இருக்க வேண்டும். ஏனெனில், கடந்த காலத்தை மாற்றுதல் இயலாது; எதிர்காலம் என்பது உறுதியற்றது. எனவே, திறமையுடனும், விழிப்புணர்வுடனும் நாம் வாழக்கூடிய ஒரே பிரதேசம் 'இந்தக் கணம்' மட்டும்தான். அங்கு நிலவும் ஆழ்ந்த விழிப்புணர்வைத்தான், நாம் பொது வாழ்வில் நேரம் தவறாமை என்ற நாகரிகப் பண்பாகப் போற்றுகிறோம்.

time to read

2 mins

October 10, 2025

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

பள்ளிகொண்டா ரங்கநாதர்!

தென்தமிழகத்தில் திருவரங்கம் போல, வடதமிழகத்தில் புகழ்பெற்று விளங்குகிறது, வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் திருக்கோயில்.

time to read

1 mins

October 10, 2025

Dinamani Thanjavur

மதுரையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம்: எம்.எஸ். தோனி திறந்து வைத்தார்

மதுரையில் வேலம்மாள் கல்விக் குழுமம் சார்பில் அமைக்கப்பட்ட சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி வியாழக்கிழமை திறந்து வைத்தார்.

time to read

1 min

October 10, 2025

Dinamani Thanjavur

விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: இளைஞர் கைது

சென்னையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.

time to read

1 min

October 10, 2025

Dinamani Thanjavur

பங்குச் சந்தையின் நான்கு நாள் உயர்வுக்கு முடிவு

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி போன்ற முக்கிய பங்குகளின் விற்பனை காரணமாக, பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவற்றின் நான்கு நாள் உயர்வு புதன்கிழமை முடிவுக்குவந்தது.

time to read

1 min

October 09, 2025

Dinamani Thanjavur

சபலென்கா, கெளஃபி வெற்றி

சீனாவில் நடைபெறும் வூஹான் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான பெலராஸின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.

time to read

1 min

October 09, 2025

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

இந்தியா - பாகிஸ்தான் மோதல் வர்த்தக ரீதியிலான திட்டமிடல்

இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் அதர்டன்

time to read

1 mins

October 09, 2025

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

விமானப் படையின் திறனை உலகுக்கு வெளிப்படுத்திய 'ஆபரேஷன் சிந்துார்'

'மிகக் குறைந்த நாள்களில் வெற்றிகரமான ராணுவ நடவடிக்கைக்கு போர் விமானங்களின் சக்தியை திறம்பட பயன்படுத்த முடியும் என்பதை 'ஆபரேஷன் சிந்துார்' நடவடிக்கை மூலம் உலகுக்கு இந்தியா விமானப்படை நிரூபித்துள்ளது' என்று விமானப் படை தலைமைத் தளபதி ஏ.பி.சிங் தெரிவித்தார்.

time to read

1 min

October 09, 2025

Dinamani Thanjavur

அனுபவத் தலைமையும் அவசியம்!

இந்திய அரசியல் சூழலில், இன்றைய இளைய தலைமுறையினர், தாங்கள் விரும்பும் முடிவுகளை விரைவாக அடைய வேண்டும் என்ற ஆர்வத்தில், பாரம் பரியமான அரசியல் குருநாதர்களையும், அனுபவமிக்க மூத்த தலைவர்களையும் புறக்கணிக்கும் போக்கு அதிகரித்து வரு கிறது. இது விரைவான வளர்ச்சிபோல் தோன்றினாலும், நாட்டின் எதிர்காலத் தைக் கேள்விக்குறியாக்கும் ஆபத்தான போக்காகவே அமையும்.

time to read

2 mins

October 09, 2025

Dinamani Thanjavur

பிகாரில் தொகுதிப் பங்கீடு பேச்சு தீவிரம்

முதல்வர் வேட்பாளர் நிதீஷ் குமார்: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் அறிவிப்பு

time to read

2 mins

October 09, 2025

Translate

Share

-
+

Change font size