Try GOLD - Free
அமைதிக்குப் பரிசு!
Dinamani Tenkasi
|October 31, 2025
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடைசி நிமிஷத்தில் வெனிசுலாவின் எதிர்க் கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சா டோவுக்கு அறிவிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு பல்வேறு நாடுகளின் அதிபர்களும் பரிந்துரை செய்திருக்கிறார் கள். அதுமட்டுமன்றி, 8 போர்களை நிறுத் தியுள்ளதால் தனக்கு கிடைக்கும் என்று மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்தார். ஆனால், வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்கு அந்த வாய்ப்புக் கிடைத்தது.
வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமை களுக்காக அயராது உழைத்து வருபவர் மச்சாடோ. சர்வாதிகாரப்போக்கில் இருந்து, ஜனநாயகக் கட்டமைப்பை நோக்கி, அமை தியான மாற்றத்தை எதிர்நோக்கி மரியா போராடி வருவதாக புகழாரம் சூட்டப்பட் டிருக்கிறது. டிரம்ப் உள்ளிட்ட 388 பேர் களின் பெயர்கள் அமைதிக்கான நோபல் பரிசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வெனிசுலாவின் ஜனநாயகம் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறது. இங்கு தோட்டாக்கள் வேண்டாம்; வாக்குகள் தான் வேண்டும்; ஜனநாயக முறையில் தேர் தல் நடத்தலாம் என்று 20 ஆண்டுகளுக்கும் மேல் மரியா போராடி வருகிறார். நேர்மை யான சுதந்திரமான தேர்தல் நடத்த வேண் டும். சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டும் என்ற இவரது போராட்டத்துக்கு, நோபல் பரிசு ஓர் அங்கீகாரத்தைத் தந்திருக்கிறது.
லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் போராளி - 1967-ஆம் ஆண்டு அக்டோ பர் 7-ஆம் தேதி வெனிசுலா நாட்டின் கராகஸ்லில் பிறந்தவர். அரசியல் மட்டு மன்றி தொழில் துறை பொறியாளராகவும் செயல்பட்டுள்ளார். 2011 முதல் 2014 வரை வெனிசுலா நாட்டின் தேசிய சபையின் உறுப்பினராக இருந்தார். இந்த நாட்டின் ஜனநாயக அடக்குமுறைகளுக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்களை முன் னெடுத்து வருபவர். இதனால், பொது மக்கள் மத்தியில் நற்பெயரை எடுத்து வருகிறார்.
மச்சாடோ கடந்த 14 மாதங்களாக தலை மறைவாக வாழ்ந்து வருகிறார். அவரது உயிருக்கு ஆபத்து இருந்தாலும்கூட, அவர் வெனிசுலாவை விட்டு வெளியேறவில்லை. இது இந்த நாட்டு மக்களின் மத்தியில் அவருக்கு ஒரு பெரும் புகழைச் சம்பா தித்துத் தந்திருக்கிறது. வெனிசுலாவின் ராணுவ ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி அங்கே ஜனநாயகம் அமைதி வழியில் மலர ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். ஆகவேதான், இவரை 'இரும்புப் பெண்மணி' என்று அந்த நாட்டு மக்கள் பெருமையோடு அழைக்கிறார்கள்.
வெனிசுலாவின் சர்வாதிகார ஆட்சியாளர் நிக்கோலஸ் மடூரோ வின் அடக்குமுறை ஆட்சியை எதிர்த்துப் போராடி வருகிறார். அச்சுறுத்தல்கள், கைதுகள் மற் றும் அரசியல் துன்புறுத்தல்களை எதிர்கொண்டிருக்கிறார். ஆனா லும், ஆயுதம் இல் லாமலே தங்களது போராட்டம் தொட ரும் என்று துணிச்சலையும், உண்மையை யும் துணைக்கு அழைத்துக் கொண்டு இவரது ஜனநாயகப் போராட்டக் களம் பேசுபொருளாகி இருக்கிறது.
This story is from the October 31, 2025 edition of Dinamani Tenkasi.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tenkasi
Dinamani Tenkasi
வங்கதேசத்தை வென்றது இலங்கை
மகளிர் ஒருநாள் கிரிக்கெட்
1 min
April 23, 2026
Dinamani Tenkasi
வீட்டில் பதுக்கிய 900 சேலைகள் பறிமுதல்
மன்னார் குடி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.
1 min
April 23, 2026
Dinamani Tenkasi
பிரதமரை விமர்சித்த விவகாரம் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
பிரதமர் நரேந்திர மோடியை தீவிரவாதி என விமர்சித்த விவகாரத்தில், காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
1 min
April 23, 2026
Dinamani Tenkasi
சட்டப்பேரவைத் தேர்தல்: விமானக் கட்டணம் பல மடங்கு உயர்வு
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, ஏராளமானோர் விமானத்தில் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதால் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
1 min
April 23, 2026
Dinamani Tenkasi
சோதனைக் களத்துக்கு தயாராகும் மேற்கு வங்கம்!
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவுக்கான (ஏப்ரல் 23) பரப்புரை செவ்வாய்க்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது.
2 mins
April 23, 2026
Dinamani Tenkasi
அனல் பறந்த பிரசாரம் நிறைவு
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு வியாழக்கிழமை (ஏப்.
1 mins
April 22, 2026
Dinamani Tenkasi
அபிஷேக் சர்மா அதிரடி; ஈஷான் மலிங்கா அசத்தல் ஹைதராபாதுக்கு ‘ஹாட்ரிக்’ வெற்றி
ஐபிஎல் போட்டியின் 31-ஆவது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 47 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.
1 min
April 22, 2026
Dinamani Tenkasi
'பிறப்பின் காரணமாக தடுத்தால் அரசமைப்புச் சட்டம் தலையிட முடியுமா?'
சுவாமி சிலையை தொடுவதற்கு பிறப்பின் காரணமாக பக்தருக்கு அனுமதி மறுத்தால், அதில் அரசமைப்புச் சட்டம் தலையிட முடியுமா என்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியது.
1 min
April 22, 2026
Dinamani Tenkasi
நிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளர்ச்சி: ஐ.நா. கணிப்பு
நிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4 சதவீதம் வளர்ச்சியடையும் என்று ஐ. நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
April 22, 2026
Dinamani Tenkasi
ரூ.8,000 கூப்பன் திட்டத்தில் முதல் கையொப்பம்
முதல்வர் ஸ்டாலின்
1 mins
April 22, 2026
Listen
Translate
Change font size

