Facebook Pixel கவலையளிக்கும் மக்கள்தொகை பெருக்கம்! | Dinamani Tenkasi - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

கவலையளிக்கும் மக்கள்தொகை பெருக்கம்!

Dinamani Tenkasi

|

July 11, 2025

இந்தியாவில் 1872-இல் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு முழுமையாக இல்லாவிட்டாலும், ஒரு முன்னோடியாக இருந்தது. 1881 முதல் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தவறாமல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு உலகின் மிகப் பெரிய நிர்வாகப் பணிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது

- உதயை மு. வீரையன்

உலக மக்கள்தொகை என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் புவியில் வாழும் மனிதர்களின் மொத்த எண்ணிக்கையைக் குறிப்பதாகும். 2023-ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகை 802 கோடி என்று ஐ.நா. அமைப்பு அறிக்கை வெளியிட்டது.

1400-ஆம் ஆண்டில் நிகழ்ந்த கருப்பு மரணத்தின் முடிவிலிருந்து உலக மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மிக விரைவான விகிதத்தில் உலக மக்கள்தொகை அதிகரிப்பு 1950-ஆம் ஆண்டுகளில் குறுகிய கால அளவிலும், அதன்பின்னர் 1960-1970-ஆம் ஆண்டுகளில் நீண்ட காலகட்டங்களிலுமாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

ஆண்டுக்கு 5.7 கோடி மட்டும் என்ற நிலையில் உள்ள இறப்புகள் 2050-ஆம் ஆண்டு வாக்கில், ஆண்டுக்கு 9 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறப்புகளின் எண்ணிக்கையை பிறப்புகளின் எண்ணிக்கை விஞ்சிவிட்டதால், உலக மக்கள்தொகையானது 2050-ஆம் ஆண்டில் 800 கோடி முதல் 1,050 கோடி வரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

20-ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த விரைவான மக்கள்தொகை அதிகரிப்பால் புவியில் மக்களின் வாழ்க்கை பாதிப்படைவது பற்றி மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இப்போதைய மக்கள்தொகை அதிகரிப்பும், அதனுடன் நிகழும் பயன்பாட்டு அதிகரிப்பும் பல வகைகளில் பாதிப்படைய வைக்கும் என்பதே அறிவியல் முடிவாகும்.

2025-ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகை 809 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு விநாடிக்கும் சராசரியாக 4.2 குழந்தைகள் பிறக்கும் என்றும், 2 பேர் இறப்பார்கள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் மக்கள்தொகை 146 கோடியாக இருக்கும். ஆகவே, அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகும். அடுத்த நிலையில் சீனா 142 கோடி மக்கள்தொகை கொண்ட நாடாக இருக்கும். அமெரிக்கா 34 கோடியாகவும், ரஷியா 14 கோடியாகவும் இருக்கும். இந்த புள்ளிவிவரங்கள் ஐ.நா. சபையின் மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டவை.

உலகில் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்திய நாடு இந்தியாவாகும். 1872-ஆம் ஆண்டு வைஸ்ராய் லார்ட் மேயோவின் கீழ் இது தொடங்கப்பட்டது. மேலும், 1881 முதல் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

MORE STORIES FROM Dinamani Tenkasi

Dinamani Tenkasi

திரைப்படக் கல்வியின் அவசியம்

மானுடத்தின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு திரைப்படம். ஆனால், இங்கு ஒரு கலையாக, ஒரு சமூகத்தின் மனசாட்சியாக மலர்ந்திருக்க வேண்டிய தமிழ் திரைப்படங்கள் எப்படி மாறின?

time to read

3 mins

May 18, 2026

Dinamani Tenkasi

அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு அமைச்சர் பதவியா?

நிதியமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பதில்

time to read

1 min

May 18, 2026

Dinamani Tenkasi

ஆயத்த நடவடிக்கையில் அரசு: அமைச்சர் அருண்ராஜ்

கிளான்டர்ஸ் தொற்று குறித்து அச்சம் தேவையில்லை என்றும், அனைத்து ஆயத்த நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருவதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

நீட் மறுதேர்வு: நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் என்டிஏ

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான (எம்பிபிஎஸ்) சேர்க்கைக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட் - யுஜி) வினாத்தாள் கசிவு மற்றும் அதைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ள மறுதேர்வு நடவடிக்கைகள், இந்திய மருத்துவக் கல்விச் சூழலை மீண்டும் ஒருமுறை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன.

time to read

2 mins

May 18, 2026

Dinamani Tenkasi

குருவாயூர் - சென்னை இடையே ரயில்கள் நிலையங்கள் மாற்றி இயக்கம்

குருவாயூர் - சென்னை இடையே இயக்கப்படும் விரைவு ரயில்கள் வரும் மே 27 முதல் 29- ஆம் தேதி வரை 3 நாள்கள் வழக்கமான பாதையில் செல்லாமல் மாற்றி இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

May 18, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

பிரக்ஞானந்தா - கீமர் மோதல் 'டிரா'

சூப்பர் செஸ் கிளாசிக் போட்டியின் 3-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா - ஜெர்மனியின் வின்சென்ட் கீமருடன் டிரா செய்தார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Tenkasi

புனிதம் காக்க வேண்டும் புதிய அரசு

ஒட்டுமொத்த இந்தியாவைப்போன்றே தமிழகத்திலும் தமிழர்களின் வாழ்வியலில் கோயில்கள் பின்னிப் பிணைந்தவையாகும். தமிழக அரசின் இலச்சினையில் கோயில் ராஜகோபுரம் இடம்பெற்றுள்ளதே இதற்கு சான்றாகும். தமிழ்நாட்டின் எல்லா குக்கிராமங்களிலும் கோயில்கள் உள்ளன.

time to read

2 mins

May 18, 2026

Dinamani Tenkasi

கிளான்டர்ஸ் தொற்று: அச்சம் தவிர்! விழிப்புணர்வு தவறேல்!!

சென்னையில் கிளான்டர்ஸ் தொற்றுக்குள்ளாகி குதிரை உயிரிழந்த நிலையில், அந்தப் பாதிப்பு மனிதர்களுக்கும் பரவக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

time to read

1 min

May 18, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

சைலெட் டெஸ்ட்: 232-க்கு கட்டுப்பட்ட பாகிஸ்தான்

வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 232 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

time to read

1 min

May 18, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

விஜய் முதல்வரானது வியப்பு கலந்த மகிழ்ச்சி

தவெக தலைவர் விஜய் முதல்வரானது வியப்பு கலந்த மகிழ்ச்சி என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

time to read

1 min

May 18, 2026

Translate

Share

-
+

Change font size