Try GOLD - Free
உயிர் காக்கும் சித்த மருத்துவம்!
Dinamani Pudukkottai
|November 28, 2025
அட்கொல்லி நோயான 'புற்றுநோய்' நீண்ட நெடிய வரலாறு கொண்டது. 'மருத்துவத்தின் தந்தை' ஹிப்போக்ரடீஸ் கி.மு. 400-இல் 'கார்சினோஸ்' என்று புற்றுநோயை குறிப்பிட்டுள்ளார். அதுவே பின்னர் 'கார்சினோமா' எனும் புற்றுநோய் கட்டியின் பெயருக்கு வித்திட்டது.
கி.மு. 520 -இல் 'அடோசா' எனும் பாரசீக பேரரசிக்கு முதன்முதலில் புற்று நோய் இருந்ததாக வரலாறு தெரிவிக்கிறது. மார்பகத்தில் தோன்றிய அத்தகைய புற்று நோயால் வலியும், வேதனையும் இருந்துள் ளது. அந்த நிலையில் 'டெமோஸீட்' எனும் புகழ்மிக்க அந்தக் காலத்து வைத்தியர் உதவி யால் அந்தக் கட்டிக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு நோய் தீர்க்கப்பட்டதாக வரலாறு தெரிவிக்கிறது. இருப்பினும், அந்தக் கட்டி யானது புற்றுநோய் கட்டியா அல்லது கிருமிகளால் ஏற்பட்டதா என்ற புரிதல் இல்லை. அறிவியல் வளராத காலம் அது.
புரிதல் இல்லாத புற்றுநோய், இருப தாம் நூற்றாண்டில் டி.என்.ஏ. எனும் மர பணுவைக் கண்டறிந்த பின்னர்தான் அறி வியல் உலகுக்கு தெளிவு பெறுகிறது. அந் தப் பெருமை வாட்சன் மற்றும் கிரிக் என்ற இரண்டு அறிவியலாளர்களைச் சாரும். அதன் பின்னரே புற்றுநோயானது, மரபணுவின் திடீர் மாற்றத்தில் உண்டாகி றது என்று கண்டறியப்பட்டது.
இன்றைய வாழ்வியல் சூழலில் ஏற்ப டும் மன அழுத்தம் மனதை மட்டுமின்றி உடலையும் பாதிக்கிறது. அத்தகைய நாள் பட்ட மன அழுத்தம் மற்றும் புற்றுநோய்க் காரணிகள் மரபணு சிதைவை உண்டாக் குவதாக உள்ளன. நம் உடலுக்கு மரபணு சிதைவை சரிசெய் யும் தன்மை இயல் பாகவே உண்டு. ஆனால், மரபணு சிதைவு அளவில் அதிகமாகும் போது, நமது உடல் அதை சரிசெய்யும் தன்மையை இழந்து விடுகிறது. இதுவே புற்றுநோய்க்கு முதன்மைக் காரணமாகிறது.
This story is from the November 28, 2025 edition of Dinamani Pudukkottai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Pudukkottai
Dinamani Pudukkottai
உயிர் காக்கும் சித்த மருத்துவம்!
அட்கொல்லி நோயான 'புற்றுநோய்' நீண்ட நெடிய வரலாறு கொண்டது. 'மருத்துவத்தின் தந்தை' ஹிப்போக்ரடீஸ் கி.மு. 400-இல் 'கார்சினோஸ்' என்று புற்றுநோயை குறிப்பிட்டுள்ளார். அதுவே பின்னர் 'கார்சினோமா' எனும் புற்றுநோய் கட்டியின் பெயருக்கு வித்திட்டது.
2 mins
November 28, 2025
Dinamani Pudukkottai
இம்ரான் கான் நலமாக உள்ளார்: சிறை அதிகாரிகள்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் (73) அடியாலா சிறையில் நலமுடன் உள்ளதாக சிறைத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். சமூக ஊடகங்களில் அவரது உடல்நிலை குறித்து வெளியாகும் தகவல்கள் வெறும் வதந்தி என்றும் அவர்கள் கூறினர்.
1 min
November 28, 2025
Dinamani Pudukkottai
டெஸ்ட்: சொந்த மண்ணில் சறுக்கும் இந்தியா
சொந்த மண்ணில் மீண்டும் ஒரு சறுக்கலைச் சந்தித்திருக்கிறது இந்திய அணி. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-2 என முழுமையாக இழந்து, கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.
2 mins
November 28, 2025
Dinamani Pudukkottai
சீனா: ரயிலில் அடிபட்டு 11 பராமரிப்புப் பணியாளர்கள் உயிரிழப்பு
சீனாவின் தென் மேற்கு நகரமான குன்மிங்கில் வியாழக்கிழமை அதிகாலை ரயில் பாதையில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது சோதனை ரயில் ஒன்று மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர்.
1 min
November 28, 2025
Dinamani Pudukkottai
காலிறுதிச்சுற்றில் தன்வி, மன்ராஜ்
சையது மோடி இன்டர்நேஷனல் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் தன்வி சர்மா, மன்ராஜ் சிங் ஆகியோர் அசத்தல் வெற்றியுடன் காலிறுதிக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 min
November 28, 2025
Dinamani Pudukkottai
அனைத்து அலுவலகங்களிலும் இன்று அரசமைப்புச் சட்ட முகப்புரையை வாசிக்க முதல்வர் உத்தரவு
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 76-ஆம் ஆண்டையொட்டி, அனைத்து அலுவலகங்களிலும் அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையை புதன்கிழமை வாசிக்கவும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பல்வேறு போட்டிகளை நடத்தவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
1 min
November 26, 2025
Dinamani Pudukkottai
தில்லி சென்றார் தமிழக பாஜக தலைவர்
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், கட்சித் தலைமை அழைப்பின்பேரில் செவ்வாய்க்கிழமை தில்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.
1 min
November 26, 2025
Dinamani Pudukkottai
அதிகாரமே குறிக்கோள்!
ஆரியர்கள், திராவிடர்கள் என்று திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். அவர்களோடு போட்டி போட்டுக் கொண்டு தமிழ் தேசியவாதிகளும் தமிழர், தெலுங்கர் என்று பிரிவினை பேசிக் கொண்டிருக்கிறார்கள். அனைவருக்கும் தங்கள் கருத்தை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை சமூகவலைதளங்கள் தருகின்றன. அதை தங்கள் கருத்தைப் பதிவு செய்வதாகச் சொல்லிக்கொண்டு அடுத்தவரை வசைபாடுவதையும் குற்றம் சுமத்துவதையும் அன்றாடம் செய்து வருகின்றனர்.
2 mins
November 24, 2025
Dinamani Pudukkottai
தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடர்: இந்திய கேப்டன் கே.எல்.ராகுல்
புது தில்லி, நவ. 23: தென்னாப் பிரிக்காவுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோத வுள்ள இந்திய அணி 15 பேரு டன் ஞாயிற்றுக்கிழமை அறிவிக் கப்பட்டது.
1 min
November 24, 2025
Dinamani Pudukkottai
முதிய தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை
சென்னையில் முதிய தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
November 24, 2025
Listen
Translate
Change font size

