Try GOLD - Free
வல்லரசுகளும் இந்தியாவும்...
Dinamani Pudukkottai
|August 19, 2025
புதினுடனான சந்திப்பு விரும்பியபடி அமையாத நிலையில், இந்தியா மீதான வரிகள் பற்றிய கேள்விக்கு இரண்டு அல்லது மூன்று வாரங்கள் கழித்துதான் அதுகுறித்து யோசிக்க வேண்டும். தற்போது யோசிக்க வேண்டியதில்லை என டிரம்ப் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இரு துருவங்களாக நிற்கும் வல்லரசுகளான அமெரிக்காவும் ரஷியாவும் ஒரிடத்தில் சங்கமித்தல் சாத்தியமா? என்ற வினாவுடனும் வியப்புடனும் உலகமே அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் புதின் இருவரின் சந்திப்பை உற்று நோக்கியது. கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி அலாஸ்காவில் நடைபெற்ற டிரம்ப்-புதின் சந்திப்பின் முடிவுகள் உலகத்தை அமைதி வழிக்குக் கொண்டுவர வேண்டும் என்று உலகம் எதிர்பார்த்தது.
ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ஆக்கப்பூர்வமான பாதைக்கு இந்தப் பேச்சுவார்த்தை இட்டுச் செல்லும் என சந்திப்புக்கு முன்பு நம்பப்பட்டது. ஆனால், போர்நிறுத்தம் பற்றி எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை; அமைதி ஒப்பந்தமும் அறிவிக்கப்படவில்லை.
அலாஸ்கா சந்திப்புக்குப் பிறகு டிரம்ப் பும் புதினும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். ஆனால், இந்தப் பேச்சுவார்த்தையால் ஏற்பட்ட ஆக்கப்பூர்வமான விளைவுகள் குறித்து எந்தத் தகவலும் இல்லை. இருவரும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்கவில்லை.
அலாஸ்காவில் புதினுக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. சிவப்புக் கம்பள வரவேற்பு, ராணுவ சாகசம், நான்கு அமெரிக்கப் போர் விமானங்களின் பாதுகாப்பு, தனது வாகனத்திலேயே டிரம்ப் வரவேற்றது என சிறப்பான நிகழ்ச்சியாக அமைந்த இந்த சந்திப்பில் டிரம்ப் அடைந்தது யாது? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தான் பதவியேற்றதும் முதல் நாளிலேயே போரை முடிவுக்கு கொண்டு வருவதாக உறுதியளித்திருந்த டிரம்ப், தற்காலிக போர் நிறுத்தத்தை எட்டுவதில்கூட தோல்வியைச் சந்தித்துள்ளார் என்பதே உண்மை.
கடந்த பத்தாண்டுகளில் முதல்முறையாக ரஷிய அதிபர் அமெரிக்க மண்ணில் கால் பதித்துள்ளார். ஆனால், இந்த சந்திப்பில் ஏற்பட்டுள்ள ஒரே முடிவு 'அடுத்த முறை மாஸ்கோவில்' என புதின் கூறியிருப்பது மட்டும்தான். அலாஸ்காவில் நடைபெற்ற சந்திப்பில் என்ன விவாதிக்கப்பட்டது என யாருக்கும் தெரியாது; எந்த ஒப்பந்தமும் பொதுவெளியில் வைக்கப்படவில்லை.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிரம்ப் - புதின் சந்திப்பு, உக்ரைன் போரில் அமைதியைக் கொண்டுவர மிக முக்கியமான நகர்வாகவும், பல குழப்பங்களுக்குப் பதிலளிக்கும் வகையிலும் அமையும் எனக் கருதப்பட்டது. ஆனால், இரு தலைவர்கள் இடையேயான மூன்று மணிநேர சந்திப்பு பதில்களைவிடவும் புதிய பல கேள்விகளையே எழுப்பியுள்ளது.
This story is from the August 19, 2025 edition of Dinamani Pudukkottai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Pudukkottai
Dinamani Pudukkottai
சமன்செய்து சீர்தூக்கும் கோல்!
தமிழர்களின் பண்பாட்டையும் தொன்மையையும் விளக்கும் எத்தனையோ விதமான பொருள்கள் இன்றும் பயன்பாட்டில் இருக்கின்றன. அவற்றுள் சில மறைந்து போயின; பல நமக்கு மறந்து போயின. அவ்வாறு மறந்து விட்டாலும் அல்லது இழந்து விட்டாலும் நம் நெஞ்சை விட்டு அவை இன்னும் அகலவில்லை.
3 mins
November 03, 2025
Dinamani Pudukkottai
அன்புள்ள ஆசிரியருக்கு...
காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணி எல்லா ஆட்சி காலத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ('தேவை அவசர அறிவிப்பு!'-ஆசிரியர் உரை, 28.10.25). இம்முறை மேட்டூர் அணை உரிய நாளில் திறந்து விடப்பட்டு பருவ மழை சாதகமாக இருந்த காரணத்தால் குறுவை சாகுபடியும் அதிக பரப்பளவில் நடந்தது. நெல் கொள்முதலும் எதிர்பார்த்தபடி அதிக அளவில் இருக்கும் எனத் தெரியவந்தது. ஆனால், இயற்கை செய்த சதி டெல்டா மாவட்டங்களில் தீபாவளிக்கு முன் மூன்று நாள்கள் பெய்த பெருமழைதான். தொடர் தீபாவளி விடுமுறை, தீபாவளியின்போது பெய்த மழை, நெல் கொள்முதலில் ஏற்பட்ட சுணக்கம் விவசாயிகளைப் பழிவாங்கி விட்டது. இனியாவது அசிரத்தைக்கொள்ளாமல், நெல் கொள்முதலில் உரிய நடவடிக்கை மேற்கொண்டால் விவசாயம் செழிக்கும்.
1 min
November 03, 2025
Dinamani Pudukkottai
புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை
இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Pudukkottai
கோமாரிக்கல்
கால்நடைகளின் காவலன்!
1 mins
November 02, 2025
Dinamani Pudukkottai
அம்மானை!
அம்மானை என்பது மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. மூன்று பெண்கள் ஆடும் இவ்விளையாட்டில் கற்களை எறிவதும் பிடிப்பதும் குறிப்பிட்ட தாளகதியில் அமையும் எனவும், அந்தத் தாளத்துக்கு ஏற்றாற்போல பெண்கள் பாடுவது அம்மானைப் பாடல் எனவும் திறனாய்வாளர் குறிப்பிடுவது எண்ணத்தக்கதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Pudukkottai
ஊடல் கொள்ள நேரமில்லை!
சங்க இலக்கியங்கள் மனித வாழ்வின் அடையாளங்கள்; உயர் வாழ்வை உணர்த்தும் வழிகாட்டிகள். விருந்தோம்பல் உலகம் முழுவதற்குமான பொதுப் பண்புகளில் ஒன்று. ஆனால், தமிழ்நெறி 'இல்வாழ்வது என்பதே விருந்தோம்புவதற்கே' என்ற கொள்கையை உடையது. தமிழன் இல்வாழ்வு என்று கூறவில்லை. 'இல்லறம்' என்றான். இல்லத்திலிருந்து செய்யும் சீரிய அறம் தான் விருந்தோம்பல்.
2 mins
November 02, 2025
Dinamani Pudukkottai
உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வை மறுக்கும் மாநிலங்கள்
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் கவலை
1 min
November 02, 2025
Dinamani Pudukkottai
நடமாடும் உயிர்க்காவலர்
எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.
2 mins
November 02, 2025
Dinamani Pudukkottai
முதல் பெண்ணாக ஆசை
காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Pudukkottai
கடல் கடந்தும் தமிழ்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.
1 mins
November 02, 2025
Translate
Change font size
