Try GOLD - Free
கூட்டுறவும் நாட்டுயர்வும்!
Dinamani Puducherry
|August 04, 2025
இந்தியாவின் கிராமப்புற வளர்ச்சிக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் பங்களிப்பு கணிசமானது மட்டுமல்ல, தவிர்க்க முடியாததும்கூட.
-
2002-இல் அறிவிக்கப்பட்ட கூட்டுறவுக் கொள்கைக்குப் பிறகு, அந்தத் துறையை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும், மாறிவிட்ட தேவைகளுக்கு ஏற்ப மாற்றி அமைக்கவும் எந்தவித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில்தான், 20 ஆண்டுகளுக்கான இலக்கை நிர்ணயித்து தேசிய கூட்டுறவுக் கொள்கை 2025-ஐ மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்திருக்கிறது.
1904-இல் அன்றைய காலனிய ஆட்சியில் முதல்முறையாக கூட்டுறவுச் சங்கங்கள் சட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தியா விடுதலை பெற்று குடியரசானதைத் தொடர்ந்து, தேசத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாகக் கூட்டுறவுச் சங்கங்கள் அமைக்கப்படும் என்று அப்போதைய ஜவாஹர்லால் நேரு அரசு அறிவித்தது மட்டுமல்லாமல், அதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்க முற்பட்டது.
சர்தார் வல்லபபாய் படேல், மொரார்ஜி தேசாய் ஆகியோரின் நண்பரும், காந்தியவாதியுமான திரிபுவன்தாஸ் படேல் என்பவர் தான், இந்தியாவின் கூட்டுறவுச் சங்க முயற்சிக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர். 1946-இல் அன்றைய பம்பாய் மாகாணத்தின் குஜராத்தி பேசும் பகுதிகளில், கிராமம் கிராமமாக நடந்து, விவசாயிகளை ஒருங்கிணைத்து கூட்டுறவுச் சங்கங்களை ஒவ்வொரு பகுதியிலும் அமைக்க முற்பட்டார் திரிபுவன்தாஸ் படேல். அதன் விளைவாக உருவானதுதான் 'கேரா' பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம். 1950 வரை நமது தேவைக்குப் பால் பவுடரை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்த இந்தியாவின் 'அமுல்' நிறுவனம், இன்று சர்வதேசச் சந்தையில் போட்டிபோடும் அளவுக்கு வளர்ந்ததற்கு, கூட்டுறவுச் சங்க வழிமுறைதான் காரணம்.
This story is from the August 04, 2025 edition of Dinamani Puducherry.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 9,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Puducherry
Dinamani Puducherry
பொறுப்பு டிஜிபி நியமனம் சட்டவிரோதம்
தமிழகத்தில் காவல் துறைத் தலைமை பொறுப்பு இயக்குநர் என்பது சட்டவிரோதமானது என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.
1 min
September 01, 2025
Dinamani Puducherry
உலகப் பொருளாதாரத்தைச் சீண்டும் 'டிரம்ப் வரி!'
மெரிக்கா முதலில் என்ற கொள்கையை முன்னிறுத்தும் வகையில் உலகின் பல நாடுகள் மீதும் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு விதமான வரிகளை விதித்து வருகிறார்.
2 mins
September 01, 2025
Dinamani Puducherry
பிரதமர் படுகொலை: உறுதி செய்தனர் ஹூதி கிளர்ச்சியாளர்கள்
யேமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் ஹூதி கிளர்ச்சிக் குழு தலைமையிலான அரசின் பிரதமர் அகமது அல்-ரஹாவி கொல்லப்பட்டதை அந்தக் குழு ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்தது.
1 min
September 01, 2025
Dinamani Puducherry
வைஷ்ணவ தேவி கோயிலுக்கு செல்ல தடை நீட்டிப்பு
ஆபத்தான இடங்களில் உணவகங்களை அகற்ற நடவடிக்கை
1 min
September 01, 2025
Dinamani Puducherry
'எஜுகேட் கேர்ள்ஸ்' இந்திய தொண்டு நிறுவனத்துக்கு ரமோன் மகசேசே விருது
2025-ஆம் ஆண்டுக் காண ரமோன் மகசேசே விருதுக்கு எஜுகேட் கேர்ள்ஸ் (பெண்களுக்கு கல்வி கொடுங்கள்) என்ற இந்திய தொண்டு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.
1 min
September 01, 2025
Dinamani Puducherry
40 பக்க ரகசிய அறிக்கை டிஜிபியிடம் ஒப்படைப்பு
தமிழக காவல் துறை குறித்த 40 பக்க ரகசிய அறிக்கையை தமிழக டிஜிபி (பொ) ஜி.வெங்கடராமனிடம், ஓய்வு பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
1 min
September 01, 2025
Dinamani Puducherry
மிசோரமில் ரூ.8,000 கோடியில் 52 கி.மீ. தொலைவு புதிய ரயில் பாதை
செப். 13-இல் பிரதமர் திறந்துவைக்கிறார்
1 min
September 01, 2025
Dinamani Puducherry
அமெரிக்க கூடுதல் வரி விதிப்பால் திரும்பும் கடல் உணவுகள்
அமெரிக்கா விதித்த 50 சதவீத இறக்குமதி வரி விதிப்பு காரணமாக, அங்கு அனுப்பப்பட்ட கடல் உணவுகள் திருப்பியனுப்பப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால், தொழிலாளர்களும் ஏற்றுமதியாளர்களும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
1 mins
September 01, 2025
Dinamani Puducherry
சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு: தலைவர்கள் கண்டனம்
சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
1 min
September 01, 2025
Dinamani Puducherry
சுதந்திரப் போராட்டத்துக்கு மக்களைத் திரட்ட உதவியது விநாயகர் சதுர்த்தி
பாஜக தேசியத் தலைவர் நட்டா
1 min
September 01, 2025
Translate
Change font size