Try GOLD - Free

நீச்சல் பயிற்சி உயிர் காக்கும்!

Dinamani Puducherry

|

June 14, 2025

திருவள்ளூர் வீரராகவர் கோயில் குளம், விழுப்புரம் மாவட்டம், மலட்டாறு ஆகியவற்றில் தலா 3 சிறார்களும், ஒகேனக்கல் காவிரி ஆறு, புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணம் குளம், கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் குளம் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிறார்கள் நீர்நிலைகளில் உயிரிழப்பது அதிகரித்துள்ளது.

- க.ஜெயராஜ்

இவர்களில் சிலர் நீச்சல் தெரியாமலும், தவறி விழுந்தும் மூழ்கியவர்கள். மேலும், சிலர் மூழ்கியவர்களைக் காப்பாற்ற முயன்றவர்கள். சென்னை ஆவடி அருகே கிருஷ்ணா நதிநீர் கால்வாயில் விழுந்த சிறுவனைக் காப்பாற்ற முயன்ற தாயும், தங்கையும் உயிரிழந்தனர். இதில் சிறுவன் மீட்கப்பட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவனும் அவரைக் காப்பாற்ற முயன்ற அவரது தாத்தாவும் உயிரிழந்தனர். இந்தச் சம்பவங்கள் அனைத்தும் கடந்த மே மாதத்தில் மட்டும் நிகழ்ந்தவை.

இதுபோன்று ஆறு, குளம், ஏரிகளில் மூழ்கிய சிறார்கள் முதல் பெரியவர்கள் வரையில் உயிரிழப்பது அன்றாடம் நிகழ்கிறது. குறிப்பாக, பள்ளி விடுமுறை சமயங்களில் சிறார்கள் அதிக அளவில் நீர் நிலைகளில் உயிரிழப்பது நடக்கிறது. நீரில் மூழ்கிய ஒரு நபரைக் காப்பாற்றும் முயற்சியின்போது இருவர், மூவர் என இறக்கின்றனர். கண்ணெதிரே தண்ணீரில் மூழ்கும் தங்களது சொந்தங்களை மீட்கும் ஆவலில் அவர்களும் மூழ்கும் நிலை ஏற்பட்டு விடுகிறது.

இதுபோன்ற நிகழ்வுகளின்போது, போலீஸார் வழக்குப் பதிவு செய்வதும், அரசு நிவாரண உதவி அளிப்பதும் வழக்கமாக நிகழ்கின்றன. அதே சமயம், இந்த நிகழ்வுகளைத் தடுக்கும் வழிமுறை குறித்தோ, விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தோ அதிகம் சிந்திப்பதில்லை.

MORE STORIES FROM Dinamani Puducherry

Dinamani Puducherry

Dinamani Puducherry

இந்திய கல்வித் துறையில் கேரளத்தின் பங்களிப்பு: குடியரசு துணைத் தலைவர் பாராட்டு

'இந்திய கல்வித் துறையில் கேரள மாநிலம் ஆற்றிய பங்களிப்பு பாராட்டுக்குரியது' என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை வலியுறுத்தினார்.

time to read

1 min

November 04, 2025

Dinamani Puducherry

மாநில கூடைப்பந்து, வாலிபால் போட்டி

சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூரில் நடைபெற்ற எஸ்ஆர்எம் ஐஎஸ்டி சேர்மன் கோப்பை பள்ளிகள் இடையிலான மாநில கூடைப்பந்து, வாலிபால் போட்டிகளில் தஞ்சாவூர், ஆத்தூர், திருநெல்வேலி அணிகள் பட்டம் வென்றன.

time to read

1 min

November 04, 2025

Dinamani Puducherry

Dinamani Puducherry

மாற்றத்துக்கான தொடக்கம் இந்த வெற்றி

இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர்

time to read

2 mins

November 04, 2025

Dinamani Puducherry

ஜாதி ஆதிக்கத்தில் பிகார் தேர்தல் அரசியல்!

பிகார் தேர்தல் களத்தில் வேட்பாளர்கள் தேர்வு, வாக்கு வங்கியைத் தக்கவைப்பது ஆகியவற்றில் ஜாதிய ஆதிக்கம் மேலோங்கியுள்ளது.

time to read

2 mins

November 04, 2025

Dinamani Puducherry

அன்புள்ள ஆசிரியருக்கு...

சட்டம் இல்லை

time to read

1 min

November 04, 2025

Dinamani Puducherry

படித்தால் மட்டும் போதுமா?

அண்மைக்காலமாக உயர் கல்வியில் சேர்க்கை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது பள்ளிக் கல்வி, உயர் கல்வியில் மாணவிகள் சேர்க்கையானது பெருமை கொள்ளும் வகையில் உள்ளது. ஒட்டுமொத்த அளவில் இளநிலைப் பட்டப் படிப்புகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

time to read

2 mins

November 04, 2025

Dinamani Puducherry

Dinamani Puducherry

இந்திய ஜனநாயகத்துக்கு பெரிய அச்சுறுத்தல் வாரிசு அரசியல்: சசி தரூர்

இந்திய ஜனநாயகத்துக்கு வாரிசு அரசியல் பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார்.

time to read

2 mins

November 04, 2025

Dinamani Puducherry

Dinamani Puducherry

எண்மக் கைதுக்கு எதிராக இரும்புக்கர நடவடிக்கை தேவை: உச்சநீதிமன்றம்

நாடு முழுவதும் ரூ.3,000 கோடி மோசடி

time to read

1 min

November 04, 2025

Dinamani Puducherry

வாரிசுகளின் கடமை

அரசு ஊழியர்கள் பெற்றோரைப் பொறுப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும்; அவ்வாறு சரிவரக் கவனிக்காமல் புறக்கணித்தால் அந்த அரசு ஊழியரின் ஊதியத்திலிருந்து 10 முதல் 15 சதவீத ஊதியம் பிடித்தம் செய்யப்படும்; அவ்வாறு பிடித்தம் செய்யப்படும் தொகை பெற்றோரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் வகையில் விரைவில் சட்டம் நிறைவேற்றப்படும் என தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

time to read

2 mins

November 03, 2025

Dinamani Puducherry

அன்புள்ள ஆசிரியருக்கு...

காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணி எல்லா ஆட்சி காலத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ('தேவை அவசர அறிவிப்பு!'-ஆசிரியர் உரை, 28.10.25). இம்முறை மேட்டூர் அணை உரிய நாளில் திறந்து விடப்பட்டு பருவ மழை சாதகமாக இருந்த காரணத்தால் குறுவை சாகுபடியும் அதிக பரப்பளவில் நடந்தது. நெல் கொள்முதலும் எதிர்பார்த்தபடி அதிக அளவில் இருக்கும் எனத் தெரியவந்தது. ஆனால், இயற்கை செய்த சதி டெல்டா மாவட்டங்களில் தீபாவளிக்கு முன் மூன்று நாள்கள் பெய்த பெருமழைதான். தொடர் தீபாவளி விடுமுறை, தீபாவளியின்போது பெய்த மழை, நெல் கொள்முதலில் ஏற்பட்ட சுணக்கம் விவசாயிகளைப் பழிவாங்கி விட்டது. இனியாவது அசிரத்தைக்கொள்ளாமல், நெல் கொள்முதலில் உரிய நடவடிக்கை மேற்கொண்டால் விவசாயம் செழிக்கும்.

time to read

1 min

November 03, 2025

Translate

Share

-
+

Change font size