Try GOLD - Free
நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சிறை, தோல் தொழிற்சாலை அமைக்க நிலம் அளவீடு?
Dinamani Namakkal
|July 05, 2025
நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி பெருந்திட்ட வளாகத்தில் 200 ஏக்கர் பரப்பளவில் தோல் தொழிற்சாலை, மாவட்ட சிறைச்சாலை அமைக்க நிலம் அளவீடு செய்யும் நடவடிக்கையை வருவாய்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கல், ஜூலை 4:
நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், நாமக்கல், பரமத்திவேலூர் ஆகிய இடங்களில் கிளைச் சிறைகள் செயல்பட்டு வந்தன. இங்கு சிறிய குற்ற வழக்குகளில் தொடர்புடையோரை காவலில் வைத்திருப்பர். பெரிய குற்ற வழக்குகளில் தொடர்புடையோர் சேலம், கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவர்.
அண்மையில் ராசிபுரம், பரமத்திவேலூர் கிளைச் சிறைகளை மூடுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போதைய நிலையில் 50 கைதிகளை அடைக்கும் வகையில் நாமக்கல் கிளைச் சிறை மட்டும் செயல்பாட்டில் உள்ளது. கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், நாமக்கல்லில் மாவட்ட சிறைச்சாலை ஏற்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது.
இதற்கான இடம் தேர்வு செய்யும் பணி கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்தது. நாமக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ராசாம்பாளையம், குட்லாம் பாறை உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்ததில் அவை சாலையை விட்டு சற்று தொலைவில் இருப்பதாகக் கூறப்பட்டது.
இதனால் 505 ஏக்கர் பரப்பளவு கொண்ட நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் காலி நிலத்தை அதிகாரிகள் பார்வையிட்டனர். அங்கு, நாமக்கல், கரூர் இரு மாவட்டத்தையும் சேர்ந்த சுமார் 250 கைதிகளை அடைக்கும் வகையில் சிறைச்சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டது. இதற்காக 25 ஏக்கர் நிலம் அண்மையில் வருவாய்துறையினரால் அளவீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு உரிய ஒப்புதல் கிடைத்தவுடன் சிறைச்சாலைக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
This story is from the July 05, 2025 edition of Dinamani Namakkal.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Namakkal
Dinamani Namakkal
உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் பி.சி.கந்தூரி காலமானார்
உத்தரகண்ட் முன்னாள் முதல்வரும், பாஜக முதுபெரும் தலைவருமான புவன் சந்திர கந்தூரி, வயது மூப்பு சார்ந்த உடல் நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 91.
1 min
May 20, 2026
Dinamani Namakkal
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மே 25 வரை மழைக்கு வாய்ப்பு
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
May 20, 2026
Dinamani Namakkal
பாகிஸ்தான் டெஸ்ட் தொடர்: வெல்லும் முனைப்பில் வங்கதேசம்
பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் வங்கதேசம் வெற்றி பெறும் முனைப்பில் இருக்கிறது. இதனால் 2 ஆட்டங்கள் தொடர் முழுவதுமாக அந்த அணியின் வசமாகலாம் எனத் தெரிகிறது.
1 min
May 20, 2026
Dinamani Namakkal
இந்தியாவும் இத்தாலியும்: இந்தோ-மத்தியதரைக் கடலுக்கான ஓர் உத்திசார் கூட்டாண்மை
இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் இடையிலான உறவு தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.
1 mins
May 20, 2026
Dinamani Namakkal
பாமக கொள்கையும், தவெக கொள்கையும் ஒன்றுதான்!
பாமகவின் கொள்கைகளும், தவெகவின் கொள்கைகளும் 90 சதவீதம் ஒன்றாகவே உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார்.
1 min
May 20, 2026
Dinamani Namakkal
மேற்கு வங்க ஃபால்டா பேரவைத் தொகுதி மறுதேர்தல்: 'போட்டியில் இருந்து விலகுவதாக' திரிணமூல் வேட்பாளர் அறிவிப்பு
மேற்கு வங்க மாநிலம் ஃபால்டா பேரவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள மறுதேர்தலில் போட்டியிடாமல் விலகுவதாக திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கான் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
1 min
May 20, 2026
Dinamani Namakkal
ஆபத்தான தெரு நாய்கள் கருணை கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி
வெறி நாய்கள், குணப்படுத்த முடியாத அளவுக்கு நோய் பாதிப்புக்கு உள்ளான நாய்கள், ஆபத்தான தெருநாய்களை கருணைக் கொலை செய்ய முதல்முறையாக அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
May 20, 2026
Dinamani Namakkal
வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக மக்களவை தலைவரிடம் விசாரணைக் குழு அறிக்கை
தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்ட விவகாரம் தொடர்பாக, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் விசாரணை குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
1 min
May 20, 2026
Dinamani Namakkal
அணுமின் உற்பத்தியில் தனியார் நிறுவனங்கள்: அச்சத்தைப் போக்க முயற்சிக்கப்படும்
அணுசக்தி விபத்தால் ஏதேனும் துரதிருஷ்டவசமான சம்பவம் ஏற்பட்டால், அதற்கு இழப்பீடு நிர்ணயிக்க நீதிமன்றங்களுக்கு உள்ள அதிகாரம் தொடர்பான அச்ச உணர்வைப் போக்க முயற்சிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2 mins
May 20, 2026
Dinamani Namakkal
வகுப்பறையில் மாணவர்கள் அதிகம் பேச வாய்ப்பளிக்க வேண்டும்
ஆசிரியர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் வலியுறுத்தல்
1 mins
May 20, 2026
Translate
Change font size

