Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

மெய்ப்பொருள் காண்பது அறிவு!

Dinamani Nagapattinam

|

June 20, 2025

பொதுவாகவே தவறான தகவல்கள், போலிச் செய்திகள் வேகமாகப் பரவும் தன்மையுடையவை. சமூக ஊடகங்கள் இந்தச் சூழலை இன்னும் இரட்டிப்பாக்குகின்றன. அசலைக் காட்டிலும் போலிக்கு வலிமை அதிகம். இப்படிப்பட்ட தவறான தகவல்கள் மனதில் இனம்புரியாத ஓர் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

- முனைவர் பவித்ரா நந்தகுமார்

அண்மையில் குடும்பத்தினருடன் வெளிமாவட்டத்துக்கு சென்றபோது இணைய இடர்ப்பாடு ஏற்பட்டு 'கூகுள் மேப்' கைவிட்ட நிலையில், வாகனத்தை நிறுத்தி வழி கேட்டோம். ஒரு நபர் நம்பிக்கையுடன் நம்மிடம் பேசி, தீர்மானமாக ஒரு திசையை சுட்டி வழி காட்டினார். அவர் காட்டிய பாதையில் சென்று கொண்டிருந்தபோது மாற்றுப் பாதையில் வந்துவிட்டோமோ என்ற சந்தேகம் எழுந்தது.

அதன்பிறகு, மற்றொரு நபரிடம் வழிகேட்டோம். முதல் நபர் சொன்ன பாதைக்கு நேர்மாறான எதிர்பாதையில் செல்லுமாறு அவர் வழிகாட்டினார். முதல் நபர் அத்தனை தீர்மானமாகச் சொன்னாரே, தற்போது யார் காட்டிய திசையில் செல்வது என்று உள்ளுக்குள் பெரும் குழப்பம். மூன்றாவது நபர் ஒருவரிடம் கேட்டுப் பார்ப்போம் என்று அவரிடம் விசாரித்ததில் இரண்டாம் நபர் சொன்ன பாதையை அவர் வழிமொழிந்து அந்தப் பாதையை தேர்ந்தெடுத்து பயணத்தைத் தொடர்ந்தோம்.

முதல் நபர் தவறாக வழிகாட்டியதால் நேரம் வீணாகிவிட்டதே என்று கவலை கொண்டாலும் தனக்கு நூறு சதவீதம் உறுதியாக தெரியாத ஒரு தகவலை, அவர் ஏன் அத்தனை தீர்மானமாக இருந்து வழி சொன்னார் என்ற கேள்வி நீண்ட நேரம் மனதைக் குடைந்தது.

ஒரு தவறான தகவல் எத்தனை வகையான அசௌகர்யங்களை ஏற்படுத்திவிடுகின்றன! ஒரு மனிதர் மீது நம்பிக்கை ஏற்பட்டு அவர் பகிர்ந்தவை உண்மையாகத்தான் இருக்கும் என்று நம் மனம் நம்பியதே பொய்த்துப் போகும் சூழ்நிலையில், யார் சொன்னது, எவர் சொன்னது என்று சிறிதளவும் தெரியாத ஒரு தகவலை எந்த நம்பிக்கையின் அடிப்படையில் நாம் பலருக்கும் அனுப்பிக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் வலிமையாகத் தோன்றியது.

சமூக வலைதளங்கள் நம் வாழ்வில் பெரும் பங்கு வகித்துவிட்ட இந்த நவீன யுகத்தில், நம்மைத் தொடர்புகொள்ள, தகவல்களைப் பகிர, செய்திகளைத் தெரிந்து கொள்ள எனப் பல்வேறு தேவைகளை அவை பூர்த்திசெய்கின்றன; எனினும், ஏராளமான தவறான தகவல்களும் கட்டுக்கதை களான செய்திகளும் வலம்வருகின்றன. சுமார் 70 சதவீதம் அளவுக்கு தவறான தகவல்களை பலரும் பகிர்ந்து வருகின்றனர். தங்களுக்கு வந்துசேரும் ஒரு தகவல் உண்மையா, பொய்யா எனத் தெரியாமல் பலரும் தொடர்ந்து பகிர்கின்றனர். அதனால் சில நேரங்களில் நம் மீது இருக்கும் நம்பகத்தன்மைகூட கேள்விக்குறியாகும் நிலை ஏற்படுகிறது. நாம் இப்படி பொதுவெளியில் பகிரும் நம்பகமற்ற தகவல்களினால் மறைமுகமாக சில பிரச்னைகள் முளைகின்றன என்பதை எத்தனை பேர் உணர்ந்துள்ளனர்?

MORE STORIES FROM Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

வள்ளுவம் காட்டும் காந்தியம் வாழ்க

கடவுள் மனிதனுக்குச் சொன்னது பகவத் கீதை. அதில் மனிதன் முழுமை அடை வதற்கான தத்துவங்கள் அடங்கியுள் ளன. மனிதன் கடவுளுக்குச் சொன்னது திருவாசகம். அதில் மனிதன் இறைவனை எவ்வாறு போற்ற வேண்டும் என்பதற் கான வழிமுறைகள் அடங்கியுள்ளன. மனிதன் மனிதனுக்குச் சொன்னது என்று திருக்குறளைச் சுட்டுவர். இந்நூல் மனிதன் மாமனிதனாக உயர்ந்து இறைநிலையை அடைவதற்கான வழிமுறைகளை எளிமை யான தனது இரண்டு அடிகளில் படிப்படி யாக எடுத்துரைக்கிறது.

time to read

3 mins

November 20, 2025

Dinamani Nagapattinam

மெளனம் பலவீனம் அல்ல!

சில நேரங்களில், நாம் பேசாமல் இருந்திருக்க வேண்டிய ஒரு விஷயம் நாம் சொல்லக்கூடிய மிகவும் தேவையற்ற பேச்சாக இருக்கலாம்.

time to read

2 mins

November 20, 2025

Dinamani Nagapattinam

சென்னையில் 15 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் சென்னையில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனர்.

time to read

1 min

November 20, 2025

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

பிகார் முதல்வராக நிதீஷ் குமார் இன்று பதவியேற்பு

பிகார் முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவர் நிதீஷ் குமாரை தேசிய ஜனநாயக கூட்டணி புதன்கிழமை முறைப்படி தேர்வு செய்தது.

time to read

2 mins

November 20, 2025

Dinamani Nagapattinam

ரோஜர் ஃபெடரருக்கு 'ஹால் ஆஃப் ஃபேம்' கௌரவம்

சுவிட்ஸர்லாந்து டென்னிஸ் நட்சத்திரம் ரோஜர் ஃபெடரர், 'இன்டர்நேஷனல் டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேம்'-இல் புதன்கிழமை சேர்க்கப்பட்டு, கௌரவிக்கப்பட்டார்.

time to read

1 min

November 20, 2025

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

இயற்கை விவசாயத்தின் மகுடம் தமிழகம்

'இயற்கை விவசாயம் நமது பாரம்பரியத்தில் பிறந்தது; அதன் தலைமை இடம் என்றால் அது தமிழகம்' என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

time to read

2 mins

November 20, 2025

Dinamani Nagapattinam

ரேஷன் கடைகளில் நாப்கின் வழங்கக் கோரிய வழக்கு: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

ரேஷன் கடைகளில் சானிட்டரி நாப்கின்களை மானிய விலையில் அல்லது இலவசமாக வழங்கக் கோரிய வழக்கில், வருகிற டிச.16-ஆம் தேதிக்குள் பதில் அளிக்காவிட்டால், சுகாதாரத்துறைச் செயலர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.

time to read

1 min

November 19, 2025

Dinamani Nagapattinam

மின்சார கார்கள் விற்பனை 57% உயர்வு

கடந்த அக்டோப ரில் மின்சார கார்களின் மொத்த விற் பனை 57 சதவீதம் உயர்ந்து 18,055ஆக உள்ளது. 7,239 வாகனங்களை விற்பனை செய்து இந்த பிரிவில் டாடா மோட்டார்ஸ் முன்னிலை வகிக்கிறது.

time to read

1 min

November 19, 2025

Dinamani Nagapattinam

டிரம்ப்பின் காஸா திட்டம்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஏற்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் காஸா அமைதித் திட்டத்தை ஏற்பது மற்றும் அந்தப் பகுதியில் சர்வதேச அமைதிப் படையை நிறுத்த அனுமதி அளிப்பதற்காக அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஏற்றுக்கொண்டுள்ளது.

time to read

1 mins

November 19, 2025

Dinamani Nagapattinam

தெலங்கானாவின் வளரும் தொழில் பிரிவில் தடம் பதிக்கும் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்

தெலங்கானாவின் வளர்ந்து வரும் வணிகப் பிரிவில் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் தடம் பதித்துள்ளது.

time to read

1 min

November 19, 2025

Translate

Share

-
+

Change font size