தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட கு.ப.ரா.!
Dinamani Nagapattinam
|April 27, 2025
காகவி சுப்பிரமணிய பாரதியுடன் தோன்றிய தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி, 'மணிக் கொடி' வாயிலாகவும், பிற பத்திரிகைகள் மூலமாகவும் செழித்து விரிவடைந்து மணம் வீசத் தொடங்கிய காலத்தில், இம்மறுமலர்ச்சியின் பிரதிநிதியாக தன்னை முன்னிறுத்திக்கொண்டு படைப்புகளைத் தந்தவர் கு.ப.ரா. என்று அழைக்கப்படும் கு.ப.ராஜகோபாலன்.
வசன கவிதை, கட்டுரை, சிறுகதை, இலக்கிய விமர்சனம், வரலாறு, மொழிபெயர்ப்பு என பலதரப்பட்ட இலக்கியப் பங்களிப்புகளைச் செய்துள்ளபோதிலும், தமிழ் இலக்கியச் சமூகத்தால் அவர் ஒரு சிறுகதையாளராகவே மதிப்பிடப்படுகிறார்.
சிறுகதை மன்னன், சிறுகதைக் கலைஞர், மறுமலர்ச்சி மன்னன், மறுமலர்ச்சி பரிதி என சக படைப்பாளிகளாலும், நண்பர்களாலும் அவர் வர்ணிக்கப்படுகிறார்.
கும்பகோணம் பட்டாபிராமையர் - ஜானகி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் கும்பகோணத்தில் ஜனவரி 1902-இல் பிறந்தார். 1921-இல் கும்பகோணம் அரசுக் கல்லூரியில் சம்ஸ்கிருதத்தைச் சிறப்புப் பாடமாக எடுத்துக் கொண்டு பி.ஏ. படிப்பில் சேர்ந்தார். அதே கல்லூரியில் ந.பிச்சமூர்த்தியும் படித்தார். நெருங்கிய நண்பர்களாகத் திகழ்ந்த இருவரும் கல்லூரி நாள்களில் ஆங்கிலத்தில் எழுதி வந்தனர். பின் தமிழில் எழுதத் தொடங்கினர். இருவருக்கும் நெருக்கமானவராக இருந்த வ.ரா. இவர்களை 'இரட்டையர்கள்' என்று அழைத்தார்.
அரசுப் பணியில் சேர்ந்த அவர் வருவாய் ஆய்வாளராகப் பதவி உயர்வு பெற்று, பத்து ஆண்டுகள் பணிபுரிந்தார். கண்புரை நோயால் பார்வையை இழந்ததினால் வேலையையும் இழக்க நேரிட்டது. சிகிச்சைக்குப் பிறகு ஓரளவு கண் பார்வை மீண்டது. ஆனால், மீண்டும் அரசு வேலையில் சேர இயலவில்லை. இதனால் எழுத்தை நம்பி சென்னைக்கு வந்தார்.
This story is from the April 27, 2025 edition of Dinamani Nagapattinam.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Nagapattinam
Dinamani Nagapattinam
4 நாள் சரிவுக்குப் பின் பங்குச் சந்தை உயர்வு
நவம்பரில் அமெரிக்க நுகர்வோர் விலைப் பணவீக்கம் எதிர்பார்த்ததைவிட குறைவாக இருந்ததால் அந்த நாட்டு மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற நம்பிக்கை மேலும் வலுப்பெற்று உலக சந்தைகளில் ஏற்பட்ட உயர்வுக்கு ஏற்பவும் புதிய அந்நிய முதலீட்டு வரவும் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் நான்கு நாள் சரிவுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை உயர்வுடன் நிறைவடைந்தன.
1 min
December 20, 2025
Dinamani Nagapattinam
ரூ.3,300 கோடி திரட்டிய வோடஃபோன் ஐடியா
கடன் சுமையில் சிக்கியுள்ள நாட்டின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் ஐடியாவின் துணை நிறுவனமான வோடஃபோன் ஐடியா டெலிகாம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் (விடிஐஎல்) கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.
1 min
December 20, 2025
Dinamani Nagapattinam
மாணவர்களை உடல், மன ரீதியாக துன்புறுத்தக் கூடாது
தனியார் பள்ளிகளுக்கு கல்வித் துறை உத்தரவு
1 min
December 20, 2025
Dinamani Nagapattinam
மனப்பிறழ்வும்...சமூகப் பிறழ்வும்!
உலகில் கவலையற்ற மனிதர்களாக இருப்போர் யார் என்றால் ஞானிகள், மனநலன் பாதித்தோர், குழந்தைகள் என்று கூறுவது உண்டு.
2 mins
December 20, 2025
Dinamani Nagapattinam
1 லட்சம் சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் மாருதி
மின்சார வாகனத் துறையில் முன்னிலை பெற திட்டமிட்டுள்ள நாட்டின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா, அதற்காக பல்வேறு வகை மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தவும், நாடு முழுவதும் சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் முடிவு செய்துள்ளது.
1 min
December 20, 2025
Dinamani Nagapattinam
வெனிசுலாவுடன் போருக்கு வாய்ப்பு: டிரம்ப் எச்சரிக்கை
வெனிசுலாவுடன் போர் ஏற்படுவதற்கான வாய்ப்பை மறுப்பதற்கில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
1 min
December 20, 2025
Dinamani Nagapattinam
நவம்பரில் 28% குறைந்த தாவர எண்ணெய் இறக்குமதி
சுத்திகரிக்கப்பட்ட ஆர்பிடிபி பால்மோலின் இறக்குமதி வீழ்ச்சியால், இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதி கடந்த நவம்பரில் 28 சதவீதம் குறைந்துள்ளது.
1 min
December 20, 2025
Dinamani Nagapattinam
பெண் நீதிபதியை தாக்கிய நீதிமன்ற ஊழியர் கைது
திருப்பூரில் பெண் நீதிபதியை தாக்கிய நீதிமன்ற ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
December 20, 2025
Dinamani Nagapattinam
அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணன்
நூற்றியெட்டு வைணவத் தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலானது 'பூலோக வைகுண்டம்', 'பெரிய கோயில்' என்றெல்லாம் போற்றப்படுகிறது.
2 mins
December 19, 2025
Dinamani Nagapattinam
விஜய் விவகாரம்: பிகார் முதல்வர் நிதீஷுக்கு ஆதரவான மத்திய அமைச்சரின் கருத்தால் சர்ச்சை
பிகாரில் புதிதாக பணிக்குச் சேர்ந்த முஸ்லிம் பெண் மருத்துவரின் ஹிஜாபை அகற்றிய விவகாரத்தில் பிகார் முதல்வர் நிதீஷ்குமாரை ஆதரித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
1 min
December 19, 2025
Translate
Change font size

