Try GOLD - Free
ஊடல் கொள்ள நேரமில்லை!
Dinamani Madurai
|November 02, 2025
சங்க இலக்கியங்கள் மனித வாழ்வின் அடையாளங்கள்; உயர் வாழ்வை உணர்த்தும் வழிகாட்டிகள். விருந்தோம்பல் உலகம் முழுவதற்குமான பொதுப் பண்புகளில் ஒன்று. ஆனால், தமிழ்நெறி 'இல்வாழ்வது என்பதே விருந்தோம்புவதற்கே' என்ற கொள்கையை உடையது. தமிழன் இல்வாழ்வு என்று கூறவில்லை. 'இல்லறம்' என்றான். இல்லத்திலிருந்து செய்யும் சீரிய அறம் தான் விருந்தோம்பல்.
உயர்ந்த பண்புகளுடன் விளங்கிய சங்ககால மகளிரின் தலையாய மாண்பு விருந்தினரை ஏற்று உபசரித்தல் என்பதனை,
விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவும் அன்ன கிழவோர் மாண்புகள் (தொல்-பொருள் கற்பியல்-11)
எனும் தொல்காப்பிய நூற்பாவால் அறியலாம்.
சங்க காலத்து மறக்குடி மகளிர் ஒருத்தி தன்குடியின் முன்னோர் புகழ் நிலவுமாறு போரிட்டுக் களத்தில் மாய்ந்து நடுகல் ஆகியதை அறிந்தாள். அவனுடைய நடுகல்லினை நாள்தோறும் வழிபட்டு வந்தாள். அவள் எதை வேண்டி வழிபட்டாள்? யான் நாள்தோறும் விருந்தினர் வரப்பெறுதல் வேண்டும். என் கொழுநன் சிறந்த பகையைப் பெறுதல் வேண்டும் (புறம்-306) என்பன அவள் வேண்டுகோள்.
உணவிற்குக் காத்திருப்போர் எவரேனும் வீட்டுக்கு வெளியில் இருக்கின்றனரா என்று தாம் உண்ணச்செல்லுமுன் பார்த்து, இருந்தால் அவர்களுக்கு உணவிட்டுப் பின்பு, தாம் உண்ணுதலை வழக்கமாகக் கொண்டிருந்தனர் சங்கத் தமிழ்ப் பெருமக்கள்.
அமிழ்தமே ஆயினும் விருந்தினரை நீக்கித் தனித்து உண்ணாதவர் தமிழகத்தில் இருந்தனர் என்பதனை,
இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும் இனிதுஎனத் தமியர் உண்டலும் இலரே (புறம்-182)
என்கிறது புறநானூறு. ஔவையாரும் 'மருந்தே ஆயினும் விருந்தோடு உண்' என்கிறார்.
விருந்தினர் வரவில்லை என்றால் அதற்கென வருந்தி, விருந்தினரைத் தேடித் தேரில் அழைத்து வந்து உண்பித்த அரசரும் அக்காலத்தில் இருந்தனர்.
This story is from the November 02, 2025 edition of Dinamani Madurai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Madurai
Dinamani Madurai
கோவையில் இன்று அதிமுக ஆர்ப்பாட்டம்
கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து, கோவையில் அதிமுக மகளிரணி சார்பில் செவ்வாய்க்கிழமை (நவ.4) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
1 min
November 04, 2025
Dinamani Madurai
ஜாதி ஆதிக்கத்தில் பிகார் தேர்தல் அரசியல்!
பிகார் தேர்தல் களத்தில் வேட்பாளர்கள் தேர்வு, வாக்கு வங்கியைத் தக்கவைப்பது ஆகியவற்றில் ஜாதிய ஆதிக்கம் மேலோங்கியுள்ளது.
2 mins
November 04, 2025
Dinamani Madurai
விதர்பா 501 ரன்கள் குவிப்பு
கோவை, நவ. 3: ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில், தமிழ்நாடுக்கு எதிரான ஆட்டத்தில் விதர்பா முதல் இன்னிங்ஸில் 501 ரன்கள் குவித்து திங்கள்கிழமை ஆட்டமிழந்தது.
1 min
November 04, 2025
Dinamani Madurai
மாற்றத்துக்கான தொடக்கம் இந்த வெற்றி
இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர்
2 mins
November 04, 2025
Dinamani Madurai
ஆர்.எஸ்.எஸ் அமைப்பைத் தடை செய்ய முடியுமா?
பொதுச் செயலர் பதில்
1 mins
November 03, 2025
Dinamani Madurai
அதிக வலிமையுடன் அணுசக்தி மையங்கள் மறுகட்டமைப்பு: ஈரான் அதிபர் உறுதி
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சேதம் டைந்த அணுசக்தி மையங்களை முன் பைவிட அதிக வலிமையுடன் மறு கட்டமைக்கவுள்ளதாக ஈரான் ஞாயிற் றுக்கிழமை தெரிவித்தது.
1 min
November 03, 2025
Dinamani Madurai
வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக வழக்கு
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்
1 mins
November 03, 2025
Dinamani Madurai
அன்புள்ள ஆசிரியருக்கு...
காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணி எல்லா ஆட்சி காலத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ('தேவை அவசர அறிவிப்பு!'-ஆசிரியர் உரை, 28.10.25). இம்முறை மேட்டூர் அணை உரிய நாளில் திறந்து விடப்பட்டு பருவ மழை சாதகமாக இருந்த காரணத்தால் குறுவை சாகுபடியும் அதிக பரப்பளவில் நடந்தது. நெல் கொள்முதலும் எதிர்பார்த்தபடி அதிக அளவில் இருக்கும் எனத் தெரியவந்தது. ஆனால், இயற்கை செய்த சதி டெல்டா மாவட்டங்களில் தீபாவளிக்கு முன் மூன்று நாள்கள் பெய்த பெருமழைதான். தொடர் தீபாவளி விடுமுறை, தீபாவளியின்போது பெய்த மழை, நெல் கொள்முதலில் ஏற்பட்ட சுணக்கம் விவசாயிகளைப் பழிவாங்கி விட்டது. இனியாவது அசிரத்தைக்கொள்ளாமல், நெல் கொள்முதலில் உரிய நடவடிக்கை மேற்கொண்டால் விவசாயம் செழிக்கும்.
1 min
November 03, 2025
Dinamani Madurai
நடமாடும் உயிர்க்காவலர்
எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.
2 mins
November 02, 2025
Dinamani Madurai
ஊடல் கொள்ள நேரமில்லை!
சங்க இலக்கியங்கள் மனித வாழ்வின் அடையாளங்கள்; உயர் வாழ்வை உணர்த்தும் வழிகாட்டிகள். விருந்தோம்பல் உலகம் முழுவதற்குமான பொதுப் பண்புகளில் ஒன்று. ஆனால், தமிழ்நெறி 'இல்வாழ்வது என்பதே விருந்தோம்புவதற்கே' என்ற கொள்கையை உடையது. தமிழன் இல்வாழ்வு என்று கூறவில்லை. 'இல்லறம்' என்றான். இல்லத்திலிருந்து செய்யும் சீரிய அறம் தான் விருந்தோம்பல்.
2 mins
November 02, 2025
Listen
Translate
Change font size
