Try GOLD - Free
மனமது செம்மையானால்...
Dinamani Madurai
|May 13, 2025
டும்ப உறவுகளில் சுமுகத்தன்மை நிலவ குடும்ப உறுப்பினர்களிடையே விட்டுக் கொடுத்தல், சகிப்புத் தன்மை, உள் ஒன்று வைத்துப் புறமொன்று பேசாத வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடித்தல் போன்ற குணங்கள் அவசியமாகும்.
குடும்பநல நீதிமன்றங்களில் தொடுக்கப்படும் வழக்குகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. உடன் பிறந்தாருக்கே சொத்துரிமையை சற்றே விட்டுக் கொடுக்க மறுக்கும் மனநிலை காரணமாக ஒருவரையொருவர் அழிக்கவும் துணிகின்றனர். இவற்றுக்கு அப்பாற்பட்டு குடும்ப உறவுகளிடையே நல்லுறவைப் பராமரிப்பது நன்கு பக்குவப்பட்ட மனநிலை கொண்ட வர்களுக்கே சாத்தியமாகும்.
நம்மால் பேசப்படாத வார்த்தைகளுக்கு நாம் எஜமானர். நம்மால் பேசப்பட்ட வார்த்தைகள் நமக்கு எஜமானர் என்பதை உணர்ந்தாலே எதையும் பேசுவதற்கு ஒரு முறைக்கு இரு முறை பல முறை யோசிக்கத் தோன்றும். துரதிருஷ்டவசமாக, நம்மில் பலர் தெரிந்தே சாத்தியமில்லாத வாக்குறுதிகளை அள்ளிவீசுவதும் பின்னர் அதற்காக பெயரளவில் வருத்தம் தெரிவிப்பதும் மிகச் சாதாரணமாகி விட்டது.
மன மகிழ்ச்சியான குடும்பத்துக்கு, குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரின் மனநலனும் இன்றியமையாதது. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான அச்சு, மின்னணு ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் குடும்பங்களில் நிலவும் சச்சரவுகள், அதன் காரணமாக நடைபெறும் கொலைச் சம்பவங்களையே பிரதானமாகப் பார்க்க முடிகிறது. 'மனத்துக்கண் மாசிலன் ஆதல்; அனைத்தறன் ஆகுல நீர்' என்கிற திருக்குறள், மனதில் தீய எண்ணங்கள் இல்லாதிருத்தலே எல்லா அறங்களையும் பெற்றதற்கு நிகர் என்கிறது. ஆனால், மனதை மாசடையச் செய்யும் புறக்காரணிகள் நிறைந்த சூழலில் நாம் வாழும் நிலையில் உள்ளோம். இப்புறக் காரணிகளுள் தொடர் நாடகங்களை ஒளிபரப்பும் சில தனியார் தொலைக்காட்சி சேனல்களும் இருப்பதுதான் வேதனை.
This story is from the May 13, 2025 edition of Dinamani Madurai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Madurai
Dinamani Madurai
எரிபொருள் விநியோகம் பாதிக்காமல் இருக்க இந்தியா உறுதியான நடவடிக்கை
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
1 min
May 12, 2026
Dinamani Madurai
பங்குச்சந்தை பரஸ்பர நிதி முதலீடு ரூ.38,440 கோடி
மத்திய கிழக்கு போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலையுயர்வு, உலகளாவிய பொருளாதார வளர்ச்சி குறித்த கவலைகளுக்கு மத்தியில், இந்தியப் பங்குச்சந்தை சார்ந்த பரஸ்பர நிதித் திட்டங்கள் ஏப்ரல் மாதத்தில் ரூ.
1 min
May 12, 2026
Dinamani Madurai
இந்தியாவுக்கு ரூ.476 கோடி கடனை திருப்பிச் செலுத்தியது மாலத்தீவு
இந்தியாவுக்கு வழங்க வேண்டிய கடனில் ரூ.
1 min
May 12, 2026
Dinamani Madurai
உலகின் எந்த சக்திக்கும் இந்தியா தலைவணங்காது
உலகின் எந்த சக்தியாலும் இந்தியாவை தலை வணங்க வைக்கவோ அல்லது நெருக்கடி தந்து பணிய வைக்கவோ முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித்தார்.
2 mins
May 12, 2026
Dinamani Madurai
கோவை அருகே கார் மீது லாரி மோதியதில் தம்பதி, மகள், இளம்பெண் உயிரிழப்பு
கோவை அருகே கார் மீது லாரி மோதியதில் தம்பதி, மகள், இளம்பெண் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர்.
1 min
May 12, 2026
Dinamani Madurai
ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள்: விவரம் சேகரிக்கும் கல்வித் துறை
தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிட விவரங்களை பள்ளிக் கல்வித் துறை சேகரித்து வருகிறது.
1 min
May 12, 2026
Dinamani Madurai
கேள்விக்குறியாகும் நிரந்தரம்!
எனக்கு தெரிந்த ஓர் இளைஞர், ஒரு நாள் காலை என் இல்லத்துக்கு வந்தார்.
3 mins
May 12, 2026
Dinamani Madurai
முதல்வர் விஜய்க்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு
முதல்வர் விஜய்க்கு மத்திய அரசு ‘இசட் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பை வழங்கியுள்ளது.
1 min
May 12, 2026
Dinamani Madurai
காலிறுதியில் மோதும் கெள.ப் - ஆன்ட்ரீவா
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், முன்னணி வீராங்கனைகளான அமெரிக்காவின் கோகோ கௌஃப், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா ஆகியோர் மோதுகின்றனர்.
1 min
May 12, 2026
Dinamani Madurai
மேற்கு வங்கத்தில் நீக்கப்பட்ட வாக்காளர்களைவிட வெற்றி பெற்றதற்கான வாக்கு வித்தியாசம் குறைவு
புதிதாக மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி
1 min
May 12, 2026
Translate
Change font size
