Facebook Pixel மகளிர், மாணவர்களுக்கு புதிய திட்டங்கள் | Dinamani Madurai - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

மகளிர், மாணவர்களுக்கு புதிய திட்டங்கள்

Dinamani Madurai

|

March 15, 2025

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் மகளிர், மாணவர்களைக் கவரும் வகையில் பல்வேறு புதிய திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. பெண்களின் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துகளுக்கு பதிவுக்கட்டணம் குறைப்பு, மாணவர்களுக்கு மீண்டும் கணினி போன்ற திட்டங்களை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.

சென்னை, மார்ச் 14: தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் மகளிர், மாணவர்களைக் கவரும் வகையில் பல்வேறு புதிய திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. பெண்களின் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துகளுக்கு பதிவுக்கட்டணம் குறைப்பு, மாணவர்களுக்கு மீண்டும் கணினி போன்ற திட்டங்களை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.

வரும் நிதியாண்டுக்கான (2025-26) நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு வெள்ளிக்கிழமை தாக்கல் செய்து, முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம்:

மகளிர், மாணவருக்கான திட்டங்கள்: சமூகத்தில் மட்டுமன்றி, அவரவர் குடும்பங்களிலும் மகளிருக்கான சம பங்கை உறுதி செய்வது அவசியம். அந்த வகையில், ரூ.10 லட்சம் வரை மதிப்புள்ள வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து அசையா சொத்துகளும் பெண்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டால் அத்தகைய ஆவணங்களுக்கு பதிவுக்கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்படும். இந்தத் திட்டம் வரும் ஏப். 1 முதல் நடைமுறைக்கு வரும்.

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சம் மகளிரை தொழில்முனைவோராக உருவாக்கிடும் பெருந்திட்டம் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின் கீழ், 20 சதவீத மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை வங்கிக்கடன் பெற்று மகளிர் பல்வேறு தொழில்கள் தொடங்க வழி ஏற்படும். இதற்காக அவர்களுக்கு உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், விற்பனைக்கான ஆலோசனைகள் வழங்கப்படும். வரும் நிதியாண்டில் இந்தத் திட்டத்திற்கான மானிய நிதியுதவியாக ரூ.225 கோடி ஒதுக்கப்படும்.

மீண்டும் கணினி: தமிழ்நாட்டின் பல்வேறு கலை, அறிவியல், பொறியியல், வேளாண்மை மற்றும் மருத்துவம் உள்ளிட்ட அனைத்துக் கல்லூரிகளிலும் பயின்று வரும் மாணவர்களுக்கு உயர் தொழில்நுட்ப சாதனங்களை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு, அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் கைக்கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும். இந்தத் திட்டத்துக்காக வரும் நிதியாண்டில் ரூ.2,000 கோடி ஒதுக்கப்படும்.

MORE STORIES FROM Dinamani Madurai

Dinamani Madurai

Dinamani Madurai

ஜோகோவிச் சாதனையை முறியடித்தார் சின்னர்

இத்தாலியன் ஓபன் களிமண் கள டென்னிஸ்போட்டியில், உள்நாட்டு நட்சத்திரமான யானிக் சின்னர் அரையிறுதிக்கு வியாழக்கிழமை முன்னேறினார்.

time to read

1 min

May 15, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் வழிகளை 'பிரிக்ஸ்' கண்டறிய வேண்டும்

இந்தியா வலியுறுத்தல்

time to read

2 mins

May 15, 2026

Dinamani Madurai

தாலி பாக்கியம் தரும் தலம்!

தமிழ்நாட்டில் முதன்மையான தாய்த்தெய்வ வழிபாட்டுத் தலங்களுள் ஒன்று, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாயமங்கலம். இங்குள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது.

time to read

1 mins

May 15, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

கேரளத்தின் புதிய முதல்வர் வி.டி.சதீசன்

நீண்ட இழுபறிக்குப் பின் காங்கிரஸ் அறிவிப்பு

time to read

1 mins

May 15, 2026

Dinamani Madurai

காலிறுதியில் சிந்து, லக்ஷியா சென்

தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் பி.வி. சிந்து, லக்ஷியா சென் உள்ளிட்டோர் காலிறுதிச் சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

May 15, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

உ.பி. மழை, சூறாவளி: உயிரிழப்பு 111-ஆக உயர்வு

உத்தர பிரதேச மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் புதன்கிழமை பெய்த பலத்த மழை, சூறாவளி காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 111- ஆக அதிகரித்துள்ளது.

time to read

1 mins

May 15, 2026

Dinamani Madurai

எம்பிபிஎஸ் அங்கீகாரம்: உறுதியளிப்பு சான்று அளிக்க அறிவுறுத்தல்

எம்பிபிஎஸ் இடங்களுக்கான அங்கீகாரத்தைப் புதுப்பித்துக் கொள்வதற்கு வருடாந்திர உறுதியளிப்பு சான்றுகளை (டிக்ளரேசன் ஃபார்ம்) மருத்துவக் கல்லூரிகள் வரும் 30-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 15, 2026

Dinamani Madurai

கேஜரிவால் உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை

மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக சமூக ஊடகங்களில் தனக்கு எதிராக அவதூறு பதிவுகளை வெளியிட்டதற்காக ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் அரவிந்த் கேஜரிவால், மணீஷ் சிசோடியா, துர்கேஷ் பாடக், சஞ்சய் சிங், சௌரவ் பரத்வாஜ் உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா வியாழக்கிழமை தொடங்கினார்.

time to read

1 min

May 15, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

குற்றாலத்து இறைவரே நமக்கு உற்றவர்

இயற்கை எழில்மிக்க மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக விளங்குகிறது, பொதிகை மலை. இதன் அடிவாரத்தில் சங்கு வடிவில் அமைந்துள்ளது குற்றாலநாதர் கோயில்.

time to read

1 mins

May 15, 2026

Dinamani Madurai

விரைவில் மகளிர் உரிமைத் தொகை: தமிழக அரசு

மே மாதத்துக்கான மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 விரைவில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.

time to read

1 min

May 15, 2026

Translate

Share

-
+

Change font size