Try GOLD - Free

மதிப்புக்கு உரிய மதிப்பு!

Dinamani Kanyakumari

|

October 13, 2025

ஒரு பொருளின் மெய்யான மதிப்பு எப்போது முழுமையாகத் தெரியும்? 'இப்படி ஒரு கேள்வியை இலக்கியப் பயிலரங்கு ஒன்றில் பங்கேற்பாளர்களிடம் கேட்டேன். விலையைப் பொருத்தது' என்றார் ஒரு மாணவர்.

- கிருங்கை சேதுபதி

விலை மதிப்பற்றது, விலை மதிக்க முடியாதது என்றெல்லாம் சொல்லுகிறோமே? அப்படியானால் என்ற பதில் கேள்வி கேட்டதும், பயன்படுத்துவதைப் பொருத்தது என்று ஒரு மாணவி கூறினார்.

அது எப்படி? தங்கத்தின் விலை மதிப்பு அதிகம். அதனோடு ஒப்பிட, தக்காளியின் விலை குறைவு. தக்காளி சாப்பாட்டுக்கு உதவும். தங்கத்தைச் சாப்பிட முடியுமா என்று பதில் கேள்வி கேட்டார் மாணவர்.

தங்கத்தை விற்றால், தக்காளிக் கடையையே வைக்கலாம் என்று பதிலளித்தார் மற்றொருவர். சின்னத் தக்காளியின் மிகச் சிறிய விதைகூட மண்ணில் விழுந்தால் மறுபடி பல நூறு தக்காளிகளைத் தரும்; முளைக்கும். அதுபோல், தங்கம் முளைக்குமா? இத்தனைக்கும் அதுவும் மண்ணில் இருந்துதான் கிடைக்கிறது என்று மறுத்தார் மாணவி.

தலைப்பு திசைமாறுகிறது, பட்டிமன்றத்தைப்போல். தங்கமா?, தக்காளியா என்று பட்டிமன்றமா இங்கே நடத்துகிறோம்? கேள்வி என்ன? எது விலை உயர்ந்தது என்பது இல்லை. ஒரு பொருளின் முழுமதிப்பு வெளிப்படுத்துவது எப்போது என்று மற்றொருவர் தெளிவுபடுத்தினார்.

'அது பயன்படுத்துபவரின் தகுதியை, தேவையைப் பொருத்தது' என்ற பதிலும் வந்தது. பயன்படுத்தவே இல்லை என்றால், ஒரு பொருள் தன் தகுதியில் மதிப்பில் குறைந்துவிடுமா என்ன என்ற வினாவும் எழுந்தது. பயிற்சி பெறுபவர்களைக் குழுக்களாகப் பிரித்து நடத்திய வகுப்பு என்பதால், பதில் தருபவர் எவரோ, அவர் தம் குழுவில் இருந்து பலத்த கரவொலி எழும்பிவிடும். சுவையான செய்தியாக அமைந்துவிட்டால், அது குழு எல்லை கடந்து பலரது கரவொலிகளையும் பெற்றுவிடும்.

இந்தப் பதிலுக்கு அப்படி ஒரு பொதுக் கரவொலி எழுந்தது. இது பொது நிகழ்வு இல்லை; குழு உரையாடல். பொதுநிகழ்வில்போல், இதுபோன்ற குழு உரையாடலிலும் கரவொலி எழுப்பி அங்கீகரிப்பதும், பாராட்டுவதும்கூட மதிப்பைத் தருவதுதான். எவ்வளவு பேர் எவ்வளவு சப்தமாகக் கரவொலி எழுப்பினார்கள் என்பதைப் பொருத்து ஒரு கருத்தின் மதிப்பை அளவிட்டுவிட முடியாது. பலத்த கரவொலி பெறுகிற உரையைவிட, கைதட்ட மறந்து சிந்திக்க வைக்கிற உரைதான் உயர்ந்தது; பயனுள்ளது.

MORE STORIES FROM Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

வரலாறு படைத்தார் வசெராட்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டியில், மொனாகோ வீரர் வாலெண்டின் வசெராட் சாம்பியன் கோப்பை வென்று வரலாறு படைத்தார்.

time to read

1 min

October 13, 2025

Dinamani Kanyakumari

மதிப்புக்கு உரிய மதிப்பு!

ஒரு பொருளின் மெய்யான மதிப்பு எப்போது முழுமையாகத் தெரியும்? 'இப்படி ஒரு கேள்வியை இலக்கியப் பயிலரங்கு ஒன்றில் பங்கேற்பாளர்களிடம் கேட்டேன். விலையைப் பொருத்தது' என்றார் ஒரு மாணவர்.

time to read

3 mins

October 13, 2025

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

மேற்கிந்தியத் தீவுகள் ‘:பாலோ ஆன்’

குல்தீப், ஜடேஜா அபாரம்

time to read

1 min

October 13, 2025

Dinamani Kanyakumari

முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

முதல்வர் மு.க. ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் கைது செய்தனர்.

time to read

1 min

October 13, 2025

Dinamani Kanyakumari

மேலும் இரண்டு ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் ராஜிநாமா

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் மேலும் இரு எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

time to read

1 min

October 13, 2025

Dinamani Kanyakumari

கோகோ கெளஃப் சாம்பியன்

சீனாவில் நடைபெற்ற வூஹான் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில், அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் கோப்பை வென்றார்.

time to read

1 min

October 13, 2025

Dinamani Kanyakumari

அலிசா ஹீலி அதிரடி: ஆஸ்திரேலியா வெற்றி

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 13-ஆவது ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

time to read

1 min

October 13, 2025

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

பிகாரில் ஆட்சியைத் தீர்மானிக்கும் பெண் வாக்காளர்கள்!

எதிர்வரும் நவம்பர் 6 மற்றும் 11-இல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பெண் வாக்காளர்களின் பங்கு, அங்கு நிலவி வரும் ஜாதிய ஆதிக்கத்தைவிட மிக முக்கியமானதாக இருக்கப் போகிறது.

time to read

2 mins

October 13, 2025

Dinamani Kanyakumari

அன்புள்ள ஆசிரியருக்கு...

வல்லான் வகுப்பதல்ல ..புவி வெப்பமயமாதலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிலிருந்து விலகுவது பொறுப்பற்ற செயல் அல்லது இயலாமை (‘யார் புரிய வைப்பது?'- ஆசிரியர் உரை, 06.10.25). வெப்பமயமாதல் பாதிப்பிலிருந்து அமெரிக்கா மட்டும் தனியாகத் தப்பிவிட முடியாது. வல்லான் வகுப்பதல்ல நீதி; நல்லான் வகுப்பதே நீதி. உலகெங்கும் ஒருபுறம் வெள்ளம்; மறுபுறம் வறட்சி என்ற நிலையை மாற்ற உலக நாடுகள் ஒன்றுகூடி திட்டங்களை தீட்டும் போது, ஐ.நா. அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகுவது குறித்து வேறு விதமாக யோசிக்கத் தோன்றுகிறது. அமெரிக்கா விலகியதால் விட்டுவிடாமல் அதன் பங்கை வசூலித்தாக வேண்டும். அதற்கு ஐ.நா. அமைப்பு மீண்டும்கூடி முடிவெடுக்க வேண்டும்.தி சேகர், பீர்க்கன்கரணை.

time to read

1 mins

October 13, 2025

Dinamani Kanyakumari

பாரம்பரியத்தைப் பறைசாற்ற பனை விதை நடவு!

காகிதம் கண்டுபிடிக்கும் முன்பாக பனை ஓலைகள்தான் தமிழர்களின் அறிவுக் களஞ்சியமாகத் திகழ்ந்தன. எழுத்தாணியைக் கொண்டு பனை ஓலை கிழியாமல் எழுதும் திறனைப் பெரும்புலவர்கள் பெற்றிருந்தனர். சங்க இலக்கியங்களைத் தேடிப் பதிப்பித்த தமிழ்த்தாத்தா உவே. சாமிநாதைய்யர், பனை ஓலைகளில் எழுதப்பட்ட நம்முடைய பாரம்பரியத்தை மீட்கவில்லை என்றால் தமிழின் பொக்கிஷங்கள் காணாமல்போய் இருக்கும். பனையின் ஒவ்வொரு பாகமும் மக்களின் பயன்பாட்டுக்கு உகந்தவை. செங்கல்சூளை, வீட்டின் கூரை, சாலை விரிவாக்கம், ரியல் எஸ்டேட் வளர்ச்சி போன்ற காரணங்களால் பனை மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. பனையின் பாரம்பரியத்தை உணர்ந்து பனை விதையை நடவு செய்து வருகிறார், புதுச்சேரி பூரணாங்குப்பத்தைச் சேர்ந்த பனை டி. ஆனந்தன். அவரிடம் பேசியதிலிருந்து:

time to read

2 mins

October 12, 2025

Translate

Share

-
+

Change font size