Try GOLD - Free
வாழ்க்கைத் துணையாகும் வாசிப்பு
Dinamani Kanyakumari
|August 27, 2025
டு ர்கள்தோறும் புத்தகத் திருவிழாக் கள் நடைபெறுகின்றன. எதைப் பார்ப்பது, எதை வாங்குவது? என்று சலிப்பான தொனியில் புலம்புவதுபோல் சொன் னார் ஒரு நண்பர்.
உண்மைதான். எல்லா ஊர்களிலும் சிற்றுண்டி ச்சாலைகளும் உணவு விடுதிக ளும் இருக்கத்தானே செய்கின்றன. அது மாதிரி... சொல்லி முடிக்கவிடவில்லை. அதெப்படி? உணவுவிடுதியும் புத்தகக் கடையும் ஒன்றாக முடியுமா?
ஏன் முடியாது? இரண்டும் பசியாற்று கிற இடம்தானே? முன்னது வயிற்றுப் பசி போக்குவது. பின்னது அறிவுப்பசி ஆற்று வது. இப்போதெல்லாம் உட்கார்ந்து சாப் பிடுகிற உணவு விடுதிகளைவிட, 'பார்சல்' கொடுக்கிற விடுதிகளுக்குத்தானே மவுசு. பார்த்த புத்தகங்களையே பார்ப்பதும், படித்த புத்தகங்களைத் திரும்பப் பார்ப்ப தும் ஆயாசமாயிருக்கிறது. ஏற்கெனவே வாங்கிய புத்தகங்களைப் படித்து முடிப்ப தற்குள் புதிய புத்தகம் வாங்க வேண்டுமா? என்று தோன்றுகிறது.
உண்பதும் வாசிப்பதும் ஒன்றாகிவிடுமா? ஆக வேண்டும். பிறந்தது முதற்கொண்டு வாழ்நாள் முழுவதும் எப்படி உணவுதவிர்க்க முடியாதோ, அப்படித்தான் கல்வியும்.
அன்றாட இயக்கத்துக்கு உணவு எவ்வ ளவு இன்றியமையாததோ, அவ்வளவு இன் றியமையாதது அன்றாட வாசிப்புக்குப் புத்தகமும்; வாழ்க்கையின் இயக்கத்தை இலகுவாக்குவதற்கு எத்தனை வசதியான பொருள்கள் பயன்படுகின்றனவோ, அது போல், மனத்தை இலகுவாக்குவதற்கு எத் தனையோ புத்தகங்கள் பயன்படுகின்றன.
வாசிப்பு, படிப்பாகி, படிப்பு, கற்றலாக வளர்ச்சி அடைய வேண்டும்.
கொஞ்சம் அழுத்தமாகவே சொல்லிய தும் அமைதியானார் நண்பர். யார் ஒருவ ராலும் தனக்காகவே வாழ முடியாது. அது போல், யாராலும் தனக்குத்தானே பேசிக் கொள்ள முடியாது; எழுதிக் கொள்ள முடியாது; பேச முடியாத நாள்களில் பேச நபர்கள் கிடைக்காத நேரங்களில் பேச்சுத் துணைக்குப் புத்தகங்கள் கூட வரும்; பேசும்; பேச வைக்கும்; பேசாமல் யோசிக்கவும் வைக்கும். போக முடியாத இடங்களுக்கு மனதளவில் பயணிக்கவும், நேருற அனுபவிக்க முடி யாத பல உணர்வுக ளைத் துய்த்துப் பெற்றுக்கொள்ளவும் புத் தகங்கள் துணை செய்யும்; நாம் வெளியுல கில் நடந்தும், வாகனங்களில் பயணித்தும் கடக்கிற தொலைவுகளுக்கு இணையாக மனதளவில் பயணிக்க உதவும் வாகனங் கள் புத்தகங்கள். அதில் ஊன்றுகோலா கும் புத்தகங்களும் உண்டு; விமானங்களா கும் புத்தகங்களும் உண்டு. மறதி நோய்க்கு மகத்தான மருந்து புத்தகம்தான்.
This story is from the August 27, 2025 edition of Dinamani Kanyakumari.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 9,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Kanyakumari
Dinamani Kanyakumari
புனித ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி ஆலயத் திருவிழா தொடக்கம்
நாசரேத் மாதாவனம் புனித ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.
1 min
September 01, 2025
Dinamani Kanyakumari
செப்டம்பரில் இயல்பைவிட அதிக மழை பெய்யும்
'செப்டம்பரில் இயல்பைவிட அதிக மழை பெய்யக் கூடும்; திடீர் வெள்ளம்-நிலச்சரிவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது' என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
1 min
September 01, 2025
Dinamani Kanyakumari
புன்னைக்காயலில் செப்.6 இல் கவன ஈர்ப்பு போராட்டம்
புன்னைக்காயலில் ஊர் நிர்வாகக் குமிட்டியின் சார்பில் தடையின்றி குடிநீர் வழங்க வலியுறுத்தி வரும் செப்.6 ஆம் தேதி கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
September 01, 2025
Dinamani Kanyakumari
பிரதமர் படுகொலை: உறுதி செய்தனர் ஹூதி கிளர்ச்சியாளர்கள்
யேமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் ஹூதி கிளர்ச்சிக் குழு தலைமையிலான அரசின் பிரதமர் அகமது அல்-ரஹாவி கொல்லப்பட்டதை அந்தக் குழு ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்தது.
1 min
September 01, 2025
Dinamani Kanyakumari
உலகப் பொருளாதாரத்தைச் சீண்டும் 'டிரம்ப் வரி!'
மெரிக்கா முதலில் என்ற கொள்கையை முன்னிறுத்தும் வகையில் உலகின் பல நாடுகள் மீதும் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு விதமான வரிகளை விதித்து வருகிறார்.
2 mins
September 01, 2025
Dinamani Kanyakumari
தமிழகத்தில் 38 சுங்கச்சாவடிகளில் இன்றுமுதல் கட்டணம் உயர்வு
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 38 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்வு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
1 min
September 01, 2025
Dinamani Kanyakumari
தூத்துக்குடியில் இரு வீடுகளில் 31 பவுன் நகைகள் திருட்டு
தூத்துக்குடியில் இரு வீடுகளில் 31 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min
September 01, 2025
Dinamani Kanyakumari
குண்டர் சட்டத்தில் இருவர் கைது
தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே விற்பனைக்காக கஞ்சா கொண்டு சென்ற இருவர், குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
1 min
September 01, 2025
Dinamani Kanyakumari
பிஎஸ்என்எல் முகவர்களாக பணிபுரிய வாய்ப்பு
பிஎஸ்என்எல் முகவர்களாகப் பணிபுரிய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1 min
September 01, 2025
Dinamani Kanyakumari
சாத்தான்குளம் அரசு மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு
சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நான்காவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
September 01, 2025
Translate
Change font size