Try GOLD - Free
'தாய் எனப்படுவோள் செவிலி ஆகும்'
Dinamani Erode & Ooty
|October 26, 2025
தமிழ் அகப்பொருள் இலக்கியங்களில் தலைவன், தலைவியை அடுத்து சிறப்பிடம் பெறுபவர்கள் தோழியும், செவிலியுமேயாவர். தலைவியைத் தாய் பெற்றெடுத்தாலும் அவளை வளர்த்து ஆளாக்கும் பெரும் பொறுப்பு அக்காலத்தில் செவிலிக்கே உரியதாக இருந்தது. இவர்கள் செவிலி செவிலித் தாய் என்றே அழைக்கப்பட்டாள்.
அதற்குக் காரணம் தலைவிக்குத் தாயே செவிலிதான் எனும் அளவுக்கு சங்க காலத்தில் உரிமை உடையவளாய் இருந்திருக்கிறாள். 'தாய் எனப்படுவோள் செவிலி ஆகும்'. (தொல்; பொருள்களவி 34) என்ற தொல்காப்பியர் கூற்றும் அதனை உறுதிப்படுத்தும்.
தலைவி தலைவனோடு உடன்போக்கு நிகழ்த்தியவழி அவளை நினைந்து வருந்தி செவிலி புலம்புவது அகப்பொருளில் சிறப்பாகப் பேசப்படுகிறது. சங்கப் பாடல்களில் 27 பாடல்கள் (குறுந். 9 நற்றி.1, ஐங்குறு. 13, அக.3, கலித். 1) செவிலி கூற்றாக அமைகின்றன.
குறுந்தொகையில் அமையும் ஒன்பது பாடல்களில் மூன்று பாடல்கள் (356, 378, 396) கயமனார் என்னும் புலவரால் பாடப்பெற்றவையாகும். அவை 'மகட்போக்கிய செவிலித் தாய் உரைத்தது' எனும் துறையின் கீழ் அமைகின்றன. தலைவியிடம் செவிலி கொண்டிருந்த தாயன்பை அறிவுறுத்துவனவாய் அப்பாடல்கள் அமைவது சிறப்பாகும்.
தலைவிதலைவனோடு உடன்போக்குநிகழ்த்துகிறாள். அதனை அறிந்த செவிலி 'நீரற்ற, நிழலே இல்லாத கொடிய பாலைநிலத்தை தன் மகள் எங்ஙனம் கடந்து போவாள்? நீரற்ற சுனையின் பக்கம் தேங்கிக் கிடக்கும் வெவ்விய கலங்கல் நீரை தவ்வெனும் ஓசை எழும்படி குடிக்க எங்ஙனம்வல்லமைபெற்றாள்? வீரக்கழலணிந்த தன் தலைவன் காப்பான் என்ற நம்பிக்கை தானே அதற்குக் காரணமாகயிருக்கும் என புலம்புகிறாள். இதனை,
நிழலான்றவிந்த நீரி லாரிடைக் கழலோன் காப்பக் கடுகுபு போகி அறுசுனை மருங்கின் மறுகுபு வெந்த வெவ்வெங் கலுழி தவ்வெனக் குடிக்கிய யாங்குவல்லுநள்கொறானே யேந்திய செம்பொற் புனைகலத் தம்பொரிக் கலந்த பாலும் பலவென வுண்ணாள் கோலமை குறந்தொடித் தளிரன் னோளே. (குறுந்.356)
This story is from the October 26, 2025 edition of Dinamani Erode & Ooty.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Erode & Ooty
Dinamani Erode & Ooty
ஏ.ஐ. தரும் வேலைத் தளர்ச்சி
'செயற்கை நுண்ணறிவு' எனப்படும் 'ஏ.ஐ.' எவ்வளவு வேகத்தில் அனைத்துத் துறைகளிலும் இப்போது ஊடுருவிவிட்டதோ, அதே வேகத்தில் அது தந்திருக்கும் புதிய வார்த்தையும் உலகெங்கும் இப்போது பரவி வருகிறது. அதுதான் 'ஒர்க் ஸ்லாப்' அல்லது 'ஏ.ஐ. ஸ்லாப்'. இதன் பொருள் ஏ.ஐ-யினால் வரும் வேலைத் தளர்ச்சி!
1 min
October 26, 2025
Dinamani Erode & Ooty
நல்லாசானாய் - வழிகாட்டியாய்!
பன்னூல் ஆசிரியர் எம்.ஆர்.எம். அப்துற் றஹீமை தமிழ் கூறும் நல்லுலகம் அறியும். அவருடைய எழுத்துகள் இன்றைய தலைமுறைக்கும் புரியும்.
2 mins
October 26, 2025
Dinamani Erode & Ooty
பாட்டிகள் படிக்கும் பள்ளி
பள்ளி என்றால் சிறுவர், சிறுமிகள்தான் படிப்பார்கள் என்பதில்லை. இளம்வயதில் படிக்க வாய்ப்புக் கிடைக்காத 'கை நாட்டுப் பெண்களும், மூதாட்டிகளும் முறைசாரா பள்ளியில் சேர்ந்து படிக்கலாம்.
1 mins
October 26, 2025
Dinamani Erode & Ooty
தடைக்குப் பின்னால்...
ஹைதராபாத்தில் குழந்தை மருத்துவராகப் பணி புரியும் மருத்துவர் சிவரஞ்சனியின் எட்டு ஆண்டு காலப் போராட்டம் காரணமாக, இந்திய உணவுப் பாதுகாப்பு தரநிலைகள் ஆணையம் 'போலி ஓ.ஆர்.எஸ்.' பானங்களை சந்தையில் விற்கத் தடைசெய்துள்ளது. காஜீபுரத்தில் தயாரிக்கப்பட்ட தரமில்லாத இருமல் மருந்து பல குழந்தைகளை உயிர்ப்பலி வாங்கியிருப்பதுதான் ஆணையத்தை இந்த நடவடிக்கை எடுக்க வைத்துள்ளது.
1 mins
October 26, 2025
Dinamani Erode & Ooty
உயர் ரத்த அழுத்தம் குறைக்கும் ‘டேஷ் டயட்’
இதயம் சார்ந்த பல்வேறு வகை நோய்களில், உயர் ரத்த அழுத்தத்துக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் சிறப்பு உணவு பின்பற்றப்படுகிறது. அந்த உணவுக்கு 'டேஷ் டயட்' என்று பெயர். அதாவது, உயர் ரத்த அழுத்த நிலையிலிருந்து விடுபடுவதற்கான 'உணவு அணுகுமுறை' என்று பொருள் கொள்ளலாம்.
2 mins
October 26, 2025
Dinamani Erode & Ooty
'விஞ்ஞான ரத்னா' விருது: மறைந்த வானியற்பியலாளர் ஜெயந்த் நார்லிகர் தேர்வு
விஞ்ஞான் ஸ்ரீ, விஞ்ஞான் யுவ விருதுகளும் அறிவிப்பு
1 min
October 26, 2025
Dinamani Erode & Ooty
பாசப் பிணைப்புக்காக...
உடன்பிறந்தோரின் பாசப் பிணைப்பை உணர்த்தும் விதமாக, பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் கார்த்திகைப் பௌர்ணமியின்போது 'சாமா- சக்கேவா' (சாமா-சாம்பன்) விழா சிறப்பாக நடத்தப்படுகிறது. சமூக அக்கறையுடன் பாரம்பரியமிக்க கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் பண்டிகையாகும்.
1 min
October 26, 2025
Dinamani Erode & Ooty
47% வளர்ச்சி கண்ட தென்னக நகரங்கள்
இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் ஒட்டு மொத்த வீடுகள் விற்பனை சற்று சரிந்த போதிலும், ஹைதராபாத், பெங்களூரு, சென்னை ஆகிய மூன்று தென்னக நகரங்களில் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் வீடுகள் விற்பனை 47 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
October 26, 2025
Dinamani Erode & Ooty
அறம் கூறும் புறம்...!
அறம் எவ்வாறு உருவானது ...? மனிதர்கள் தோன்றிய போதே அவருடன் ஒட்டிப் பிறந்ததா அறம்? அன்று. வாழ்வியல் சூழல் களால், மனிதர்களின் மனத்தில் தோன்றிய உயர்வான சிந்தனையே அறம். இந்த சமூ கத்தை முன்னோக்கிச் செலுத்துகிற கால சக்கரம் அறம்.
1 mins
October 26, 2025
Dinamani Erode & Ooty
கூந்தல் பராமரிப்பு...
பாதாம், தேங்காய் எண்ணெயை சம அளவில் கலந்து நுனி முடிவில் தடவிக் கொள்வதால் பிளவுகள் ஏற்படாது.
1 min
October 26, 2025
Listen
Translate
Change font size

