Try GOLD - Free

விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?

Dinamani Erode & Ooty

|

September 01, 2025

திமுகவை தொடங்கிய முன்னாள் முதல்வர் அண்ணா, 1935-லிருந்து நீதிக்கட்சியில் செயல்பட்டவர். பின்னர் 1944-இல் திராவிடர் கழகமாக உருமாறிய பின்னரும் பெரியார் ஈ.வெ.ரா. உடன் சேர்ந்து தொடர்ந்து சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.

- சவுக்கு சங்கர், ஊடகவியலாளர்.

பெரியார் ஈ.வெ.ரா. உடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக, 1949-இல் திமுகவை தொடங்கினார். 1957-இல் முதல் தேர்தலைச் சந்தித்த திமுக, 15 இடங்களில் வெற்றி பெற்றது. 1962-இல் 50 இடங்களில் வெற்றி பெற்றது. 1967 தேர்தலில் ஆட்சியைப் பிடித்தபோது, பிரஜா சோஷலிஸ்ட் கட்சி, சுதந்திரா கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, சமுக்த சோஷலிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்தே 168 இடங்களில் திமுக வெற்றி பெற்றது.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய சில மாதங்களிலேயே திண்டுகல் மக்களவைக்கான இடைத்தேர்தலில் முதல் வெற்றியைப் பெற்றார் என்றால் அதன் பின்னணியில் பெரும் வரலாறு இருக்கிறது. அவர் அதிமுகவை தொடங்குவதற்கு முன்பே அரசியலில் இருந்தார். 1953-இல் திமுகவில் இணைந்தார். 1967 பேரவைத் தேர்தலில், திமுக வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார். எம்எல்சி, எம்எல்ஏ, திமுக பொருளாளர் என படிப்படியாக கட்சியில் உயர்ந்தார். அவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, 1972-இல் அதிமுகவை தொடங்கி முதல் தேர்தலிலேயே சாதனை படைத்தார்.

விஜய்க்கு இதுபோன்ற அரசியல் அனுபவம் இல்லை. திரைத்துறையில் இருந்து நேரடியாக அரசியலுக்கு வந்திருக்கிறார். அவரது அனுபவமின்மையை அரசியல் நடவடிக்கைகள் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. கட்சி தொடங்கிய இந்த ஒன்றரை ஆண்டுகளில் விக்கிரவாண்டி மாநாட்டையும், மதுரை மாநாட்டையும் தவிர அவர் வேறு எந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. பொதுத் தேர்தலைச் சந்திப்பதற்கான அரசியல் நடவடிக்கைகளைக்கூட திமுக முன்னெடுக்கவில்லை.

Dinamani Erode & Ooty

This story is from the September 01, 2025 edition of Dinamani Erode & Ooty.

Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 9,500+ magazines and newspapers.

Already a subscriber?

MORE STORIES FROM Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு கொள்கை: தவறாகப் பயன்படுத்தும் குற்றவாளிகள்

'நியாயமான சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு' குற்றம் நிரூபிக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை தவறாகப் பயன்படுத்தி, குற்றவாளிகள் தப்பிப்பதாக உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.

time to read

1 min

September 02, 2025

Dinamani Erode & Ooty

கொங்கு கல்லூரியில் ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

ஈரோடு கொங்கு கலை, அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

time to read

1 min

September 02, 2025

Dinamani Erode & Ooty

ஹிந்து வழிபாட்டுத் தலங்களை களங்கப்படுத்த காங்கிரஸ் முயற்சி

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி

time to read

1 min

September 02, 2025

Dinamani Erode & Ooty

ஜெர்மனி நிறுவனங்கள் ரூ.3,201 கோடி முதலீடு

தமிழ்நாட்டில் ஜெர்மனி நிறுவனங்கள் ரூ.3,201 கோடியில் தொழில் திட்டங்களில் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டன.

time to read

1 min

September 02, 2025

Dinamani Erode & Ooty

ஹிமாசல், உத்தரகண்ட் நிலச்சரிவில் 6 பேர் உயிரிழப்பு

ஹிமாசல பிரதேசம் மற்றும் உத்தரகண்டில் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 6 பேர் உயிரிழந்தனர்.

time to read

1 min

September 02, 2025

Dinamani Erode & Ooty

50 சதவீத வரி உயர்வால் பின்னலாடைத் தொழில் பாதிப்பு: தீர்வு காண பிரதமருக்கு தொழிற்சங்கங்கள் கடிதம்

அமெரிக்க வரி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள பின்னலாடைத் தொழிலுக்கு தீர்வு காணக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மனு அனுப்பப்பட்டுள்ளது.

time to read

1 min

September 02, 2025

Dinamani Erode & Ooty

தமிழகத்தில் 2026இல் ஆட்சி மாற்றம் உறுதி

தமிழ்நாட்டில் 2026-இல் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என்றார் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி.

time to read

1 min

September 02, 2025

Dinamani Erode & Ooty

பாகிஸ்தான்: ஹெலிகாப்டர் விபத்தில் 5 வீரர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்ஜித்-பால்டிஸ்தான் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் திங்கள்கிழமை விபத்துக்குள்ளானதில் 5 ராணுவத்தினர் உயிரிழந்தனர்.

time to read

1 min

September 02, 2025

Dinamani Erode & Ooty

புணே அபார வெற்றி

புரோ கபடி லீக் போட்டியின் 8-ஆவது ஆட்டத்தில் புணேரி பால்டன் 41-19 என்ற புள்ளிகள் கணக்கில் குஜராத் ஜயன்ட்ஸை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.

time to read

1 min

September 02, 2025

Dinamani Erode & Ooty

8 மாதங்களில் தங்கம் பவுனுக்கு ரூ.20,240 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.77,640-க்கு விற்பனை யாகி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

time to read

1 min

September 02, 2025

Translate

Share

-
+

Change font size