Try GOLD - Free

ஸ்ரீ அரவிந்தர் என்னும் ஒளிவிளக்கு!

Dinamani Erode & Ooty

|

August 15, 2025

அரவிந்தர் சொற்பொழிவின் மதிப்பை உணர்ந்திருந்தார் மகாத்மா காந்தி. மக்களிடையே சுதந்திர வேட்கையை தோற்றுவிப்பதில் அரவிந்தரின் பேச்சாற்றலுக்குப் பெரும் பங்குண்டு என்பதை அவர் அறிந்துவைத்திருந்தார்.

- கட்டுரையாளர்: எழுத்தாளர்.

அரவிந்தரின் மேடைப் பேச்சு, அதைக் கேட்கும் அனைவரின் மனத்தையும் கொள்ளை கொள்ளக் கூடியது. திருந்திய உச்சரிப்பு, உணர்ச்சி பொங்கப் பேசும் ஆற்றல், தன் தரப்பை ஆணித்தரமாக நிறுவுவதில் தென்படும் விவாதக் கோணம், முக்கியமாக அந்த மதுரக் குரல்...என்றிப்படி அவரது மேடைப் பேச்சின் சிறப்பம்சங்கள் பல. அவரது சொற்பொழிவுக்கு ஏராளமான பொதுமக்கள் ரசிகர்களாக இருந்தார்கள். சுதந்திர மேடைகளில் அவர் பேசுகிறார் என்ற அறிவிப்பு வந்தால் ஆயிரக்கணக்கானோர், அவர் பேச்சைக் கேட்க குறித்த நேரத்துக்கு முன்னதாகவே வந்து காத்திருந்தார்கள். அரசியல் பிரமுகர்களும் அவர் சொற்பொழிவை விரும்பி கேட்டு வியந்தார்கள்.

அவரது சொற்பொழிவின் மதிப்பை உணர்ந்திருந்தார் மகாத்மா காந்தி. மக்களிடையே சுதந்திர வேட்கையைத் தோற்றுவிப்பதில் கொல்கத்தா பிரமுகரான அரவிந்தரின் பேச்சாற்றலுக்குப் பெரும் பங்குண்டு என்பதை அவர் நன்கு அறிந்து வைத்திருந்தார்.

மகாத்மா காந்தி மட்டுமா, பிரிட்டிஷ் அரசும்கூட அரவிந்தரின் பேச்சாற்றலைப் பற்றி அறிந்து வைத்திருந்தது. மக்களை மயக்கும் சொற்பொழிவாளரான அரவிந்தரை வெளியே விட்டுவைத்தால், நாளுக்கு நாள் மக்களிடையே சுதந்திர வேட்கை அதிகரிக்குமே?

எனவே, அரவிந்தரைக் கைதுசெய்யும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தது அது. அதற்கு ஏதுவாக ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது. 1908-ஆம் ஆண்டு மே இரண்டாம் தேதி, முசாபர்பூர் வெடிகுண்டு விபத்தில் இரு வெள்ளைக்காரப் பெண்மணிகள் இறந்துபோனார்கள். அந்த சம்பவத்துக்கும் அரவிந்தருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைக் காவல் துறையினர் அறிவார்கள்.

அதனால் என்ன? அந்தப் பழியைத் தூக்கி அரவிந்தர் மீது போடுவோம்; அந்த விபத்துக்கு அவர் செய்த சதிதான் காரணம் என்று கூறுவோம். அதனால் தான் அவரைக் கைது செய்கிறோம் என அரவிந்தருக்கு தண்டனை தரப்படுவதை நியாயப்படுத்தி விடுவோம். இப்படி நினைத்த காவல் துறை அரவிந்தரைக் கைது செய்தது. அவர் அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

தான் வழிபடும் கண்ணன் அவனைப் பற்றித் தவம் செய்ய வேண்டும் என்பதற்காகவே தன்னைச் சிறையில் அடைத்திருக்கிறான் என்பதாக அரவிந்தர் புரிந்துகொண்டார். கண்ணனைக் குறித்து சிறைக்குள்ளேயே தவம் நிகழ்த்தலானார்.

MORE STORIES FROM Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

மாநில கூடைப்பந்து, வாலிபால் போட்டி

சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூரில் நடைபெற்ற எஸ்ஆர்எம் ஐஎஸ்டி சேர்மன் கோப்பை பள்ளிகள் இடையிலான மாநில கூடைப்பந்து, வாலிபால் போட்டிகளில் தஞ்சாவூர், ஆத்தூர், திருநெல்வேலி அணிகள் பட்டம் வென்றன.

time to read

1 min

November 04, 2025

Dinamani Erode & Ooty

அன்புள்ள ஆசிரியருக்கு...

சட்டம் இல்லை

time to read

1 min

November 04, 2025

Dinamani Erode & Ooty

ஜாதி ஆதிக்கத்தில் பிகார் தேர்தல் அரசியல்!

பிகார் தேர்தல் களத்தில் வேட்பாளர்கள் தேர்வு, வாக்கு வங்கியைத் தக்கவைப்பது ஆகியவற்றில் ஜாதிய ஆதிக்கம் மேலோங்கியுள்ளது.

time to read

2 mins

November 04, 2025

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

மாற்றத்துக்கான தொடக்கம் இந்த வெற்றி

இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர்

time to read

2 mins

November 04, 2025

Dinamani Erode & Ooty

பயிற்சியாளர் நெகிழ்ச்சி..

சாம்பியன் கோப்பை வென்ற உணர்ச்சிப் பெருக்கில் இருந்த இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர், மரியாதை மற்றும் மகிழ்ச்சி நிமித்தமாக ஒருவரின் கால்களை பிடித்த தருணம் பெரிதும் கவனம் ஈர்த்தது. அவர் அமோல் மஜூம்தார். இந்திய மகளிர் அணியின் தலைமைப் பயிற்சியாளர்.

time to read

1 min

November 04, 2025

Dinamani Erode & Ooty

படித்தால் மட்டும் போதுமா?

அண்மைக்காலமாக உயர் கல்வியில் சேர்க்கை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது பள்ளிக் கல்வி, உயர் கல்வியில் மாணவிகள் சேர்க்கையானது பெருமை கொள்ளும் வகையில் உள்ளது. ஒட்டுமொத்த அளவில் இளநிலைப் பட்டப் படிப்புகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

time to read

2 mins

November 04, 2025

Dinamani Erode & Ooty

விதர்பா 501 ரன்கள் குவிப்பு

கோவை, நவ. 3: ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில், தமிழ்நாடுக்கு எதிரான ஆட்டத்தில் விதர்பா முதல் இன்னிங்ஸில் 501 ரன்கள் குவித்து திங்கள்கிழமை ஆட்டமிழந்தது.

time to read

1 min

November 04, 2025

Dinamani Erode & Ooty

அன்புள்ள ஆசிரியருக்கு...

காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணி எல்லா ஆட்சி காலத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ('தேவை அவசர அறிவிப்பு!'-ஆசிரியர் உரை, 28.10.25). இம்முறை மேட்டூர் அணை உரிய நாளில் திறந்து விடப்பட்டு பருவ மழை சாதகமாக இருந்த காரணத்தால் குறுவை சாகுபடியும் அதிக பரப்பளவில் நடந்தது. நெல் கொள்முதலும் எதிர்பார்த்தபடி அதிக அளவில் இருக்கும் எனத் தெரியவந்தது. ஆனால், இயற்கை செய்த சதி டெல்டா மாவட்டங்களில் தீபாவளிக்கு முன் மூன்று நாள்கள் பெய்த பெருமழைதான். தொடர் தீபாவளி விடுமுறை, தீபாவளியின்போது பெய்த மழை, நெல் கொள்முதலில் ஏற்பட்ட சுணக்கம் விவசாயிகளைப் பழிவாங்கி விட்டது. இனியாவது அசிரத்தைக்கொள்ளாமல், நெல் கொள்முதலில் உரிய நடவடிக்கை மேற்கொண்டால் விவசாயம் செழிக்கும்.

time to read

1 min

November 03, 2025

Dinamani Erode & Ooty

அதிக வலிமையுடன் அணுசக்தி மையங்கள் மறுகட்டமைப்பு: ஈரான் அதிபர் உறுதி

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சேதம் டைந்த அணுசக்தி மையங்களை முன் பைவிட அதிக வலிமையுடன் மறு கட்டமைக்கவுள்ளதாக ஈரான் ஞாயிற் றுக்கிழமை தெரிவித்தது.

time to read

1 min

November 03, 2025

Dinamani Erode & Ooty

கோமாரிக்கல்

கால்நடைகளின் காவலன்!

time to read

1 mins

November 02, 2025

Translate

Share

-
+

Change font size