Try GOLD - Free

வழிகாட்டும் கலாமின் கனவுத் திட்டம்!

Dinamani Erode & Ooty

|

July 26, 2025

"இந்தியா 2020" பொருளாதார வளர்ச்சியை மட்டும் பேசவில்லை; ஒட்டுமொத்த இந்திய சமூகத்தின் மேம்பாடு பற்றியும் விவாதிக்கிறது. இந்த அறிக்கை ஒரு கனவை புதினமாக சித்தரிக்கவில்லை. அனைத்தையும் செயல் திட்டங்களாக்கித் தந்துள்ளது.

- க. பழனித்துரை

ன்று எங்கும் புதிய தலைமைத்துவத்திற்கான தேடல் நிலவுகிறது. குறிப்பாக நாட்டை வழிநடத்த, சமூகத்தை வழிநடத்த, நிறுவனத்தை வழிநடத்த, இயக்கத்தை வழிநடத்த; போரை, வன்முறையை, வன்மத்தைக் கட்டவிழ்த்து விட்டு மக்களைப் பிரித்து அமைதியில்லாத சூழலுக்குத் தள்ளும் சுய நல மேதாவி தலைமைகளை நாம் நாடுகளில், சமூகங்களில் பார்த்து வருவதால் மாற்றுத் தலைமை தேவைப்படுகிறது.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் ஓர் அறிவியலாளராக தொழில்நுட்பவாதியாக அரசில் செயல்பட்டு நாட்டின் உயர்ந்த பதவியை அலங்கரித்த இந்திய மக்களின் மாபெரும் தலைவர். அவர் புகழப்படுவது, போற்றப்படுவது அவர் வகித்த பதவியால் அல்ல; அவர் விட்டுச் சென்ற ஒரு மாபெரும் கனவாலும் தான்; "இந்தியா 2020" என்பது அவர் தயாரித்த ஒரு கனவுத் திட்டம்.

இந்தியா என்ற நாடு இருக்கிறது; அங்கு மக்கள், அரசு நிர்வாகக் கட்டமைப்பு, அரசியல் கட்சிகள், தொழில்சாலைகள், கல்விச் சாலைகள், விவசாயிகள், ஊடகங்கள், குடிமைச் சமூகங்கள் என அனைத்தும் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

இருந்தபோதும், நம் நாட்டின் விடுதலைக்கு மக்களுக்கு வழிகாட்டிய தலைவர்கள் கண்ட கனவு சுதந்திரத்துக்குப் பிறகு நனவானதா என்ற கேள்வியில் இவர் தொடங்கி, இல்லை என்ற நிலையில், அதை இந்தியாவுக்கு தலைமை வகிக்கும் நாம் ஏன் செய்யக்கூடாது என்று முடிவு எடுத்து உருவாக்கியதுதான் இந்தக் கனவு 'இந்தியா 2020'.

அன்றைய சூழலில் அரசும், நிர்வாகமும், அரசியலும் உளுத்துப் போய்க் கொண்டிருப்பதை நல்லவர்கள் பார்த்து ஆதங்கப்படுவதைத் தவிர வேறு ஏதும் செய்ய இயலாமல் வாளா இருப்பதைக் கண்ட இவர், புதிய கனவில் இவர்களை இணைக்க முயன்றார். காரணம், இவரின் கனவு ஒரு துறைக்கானதோ அல்லது பகுதிக்கானதோ அல்ல; ஒட்டுமொத்த நாட்டுக்கானது; நாட்டு மக்களுக்கானது.

இந்தக் கனவை நிறைவேற்ற அரசுக் கட்டமைப்பு மட்டும் போதாது. அதற்கு மக்களின் ஒத்துழைப்பும் ஒட்டு மொத்த இந்தியாவும் கிளர்ந்தெழ வேண்டும்; சுதந்திரப் போராட்டத்துக்கு மக்கள் தியாகம் செய்யப் புறப்பட்டதுபோல், இந்தச் செயல்பாடுகளுக்கு தேவை தியாகம் அல்ல; நாட்டுப்பற்றுடன் தாங்கள் செய்யும் அனைத்துப் பணிகளையும் அறப்பணியாக செய்தாலே போதுமானது. அனைத்தும் நாட்டுக்கான பணியாக மாறிவிடும்.

MORE STORIES FROM Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

அன்புள்ள ஆசிரியருக்கு...

காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணி எல்லா ஆட்சி காலத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ('தேவை அவசர அறிவிப்பு!'-ஆசிரியர் உரை, 28.10.25). இம்முறை மேட்டூர் அணை உரிய நாளில் திறந்து விடப்பட்டு பருவ மழை சாதகமாக இருந்த காரணத்தால் குறுவை சாகுபடியும் அதிக பரப்பளவில் நடந்தது. நெல் கொள்முதலும் எதிர்பார்த்தபடி அதிக அளவில் இருக்கும் எனத் தெரியவந்தது. ஆனால், இயற்கை செய்த சதி டெல்டா மாவட்டங்களில் தீபாவளிக்கு முன் மூன்று நாள்கள் பெய்த பெருமழைதான். தொடர் தீபாவளி விடுமுறை, தீபாவளியின்போது பெய்த மழை, நெல் கொள்முதலில் ஏற்பட்ட சுணக்கம் விவசாயிகளைப் பழிவாங்கி விட்டது. இனியாவது அசிரத்தைக்கொள்ளாமல், நெல் கொள்முதலில் உரிய நடவடிக்கை மேற்கொண்டால் விவசாயம் செழிக்கும்.

time to read

1 min

November 03, 2025

Dinamani Erode & Ooty

அதிக வலிமையுடன் அணுசக்தி மையங்கள் மறுகட்டமைப்பு: ஈரான் அதிபர் உறுதி

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சேதம் டைந்த அணுசக்தி மையங்களை முன் பைவிட அதிக வலிமையுடன் மறு கட்டமைக்கவுள்ளதாக ஈரான் ஞாயிற் றுக்கிழமை தெரிவித்தது.

time to read

1 min

November 03, 2025

Dinamani Erode & Ooty

கோமாரிக்கல்

கால்நடைகளின் காவலன்!

time to read

1 mins

November 02, 2025

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

குருவின் கனவு நிறைவேற வேண்டும்: தருமபுரம் ஆதீனம்

'தருமபுரம் ஆதீனம் 26-ஆவது குருமகா சந்நிதானத்தின் கனவு நிறைவேற வேண்டும்' என தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் குறிப்பிட்டார்.

time to read

1 mins

November 02, 2025

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.

time to read

1 min

November 02, 2025

Dinamani Erode & Ooty

நடமாடும் உயிர்க்காவலர்

எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

கடல் கடந்தும் தமிழ்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.

time to read

1 mins

November 02, 2025

Dinamani Erode & Ooty

கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!

'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

முதல் பெண்ணாக ஆசை

காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Erode & Ooty

யுபிஐ சர்க்கிள்: அமேஸானின் புதிய வசதிகள்

தனது பணப்பட்டுவாடா செயலி மூலம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு உடனடியாக பணம் அனுப்புவதற்கான யுபிஐ சர்க்கிள் முறையில் புதிய வசதிகளை அமேஸான் அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

November 01, 2025

Translate

Share

-
+

Change font size