Try GOLD - Free
சங்கப் புலவரின் சான்றாண்மை
Dinamani Erode & Ooty
|July 20, 2025
பரிசில் பெற்று வாழும் சங்கப் புலவர்கள் புரவலர்களை வாழ்க்கையரேனும் எவர்க்கும் அஞ்சாது யாண்டும் மெய்யே கூறி அறம் நிலைக்கச் செய்யும் சான்றோராக விளங்கியதைப் புறநானூறு சிறப்பாகக் கூறும்.
அத்தகையோர் தங்களைப் பாடுவதைப் பெரும்பேறாக மன்னர்கள் கருதினர்; புலவரால் பாடப்பெற்றால் வீடுபேறு கிட்டும் என நம்பினர். 'புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வானவூர்தி எய்துப' (புறம் 24-28) என்ற பாடல் வரிகளே அதற்குச் சான்றாகும்.
புலவர் பிசிராந்தையார் யாண்டு பலவாக நரையின்றி வாழ்நற்கு கூறும் பல காரணங்களுள் 'ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் யான் வாழும் ஊரே' (புறம். 191 வரி 6-7) என்பதை தலையாயக் காரணமாகக் கூறுவார். சான்றோர் பெருமையை இது உணர்த்தும். இத்தகு சான்றோருள் ஒருவராகத் திகழ்ந்தவர் கோவூர்கிழார் எனும் புலவர் பெருமகனார்.
அவர் காலத்தில் சேரர், சோழர், பாண்டியர் ஆகிய மூவேந்தர்களும் தமிழகத்தைத் தங்களுக்கே உரிமையானது என்ற தன்னல உணர்வு கொண்டு வாழ்ந்தனர். சிலசமயம் ஒரே குலத்தவரே தங்களுக்குள் போரிட்டுக் கொண்டதும் உண்டு. அவ்வகையில் சோழன் நலங்கிள்ளியையும் சோழன் நெடுங்கிள்ளியையும் குறிக்கலாம். இருவரும் தங்களுக்குள் போரிட்டுக் கொண்டனர். அவர்களை அமைதிப்படுத்தி உயிர்களைச் சாவிலிருந்து மீட்க புலவர் கோவூர்கிழார் அம்மன்னர்களிடம் சென்று நாட்டில் அமைதி ஏற்படுத்த முனைந்ததைப் புறநானூறு 44 மற்றும் 45-ஆம் பாடல்களில் அறிய முடிகிறது.
சோழன் நலங்கிள்ளி ஆவூர் தனக்குரிய தாதலால் நெடுங்கிள்ளியிடமிருந்த ஆவூர் கோட்டையை முற்றுகையிட்டான். நலங்கிள்ளிக்கு அஞ்சிய நெடுங்கிள்ளி, போரிடாது கோட்டைக் கதவை அடைத்தான். நாட்கள் பலவாகியும் முற்றுகை நிற்கவில்லை.
This story is from the July 20, 2025 edition of Dinamani Erode & Ooty.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Erode & Ooty
Dinamani Erode & Ooty
அன்புள்ள ஆசிரியருக்கு...
காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணி எல்லா ஆட்சி காலத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ('தேவை அவசர அறிவிப்பு!'-ஆசிரியர் உரை, 28.10.25). இம்முறை மேட்டூர் அணை உரிய நாளில் திறந்து விடப்பட்டு பருவ மழை சாதகமாக இருந்த காரணத்தால் குறுவை சாகுபடியும் அதிக பரப்பளவில் நடந்தது. நெல் கொள்முதலும் எதிர்பார்த்தபடி அதிக அளவில் இருக்கும் எனத் தெரியவந்தது. ஆனால், இயற்கை செய்த சதி டெல்டா மாவட்டங்களில் தீபாவளிக்கு முன் மூன்று நாள்கள் பெய்த பெருமழைதான். தொடர் தீபாவளி விடுமுறை, தீபாவளியின்போது பெய்த மழை, நெல் கொள்முதலில் ஏற்பட்ட சுணக்கம் விவசாயிகளைப் பழிவாங்கி விட்டது. இனியாவது அசிரத்தைக்கொள்ளாமல், நெல் கொள்முதலில் உரிய நடவடிக்கை மேற்கொண்டால் விவசாயம் செழிக்கும்.
1 min
November 03, 2025
Dinamani Erode & Ooty
அதிக வலிமையுடன் அணுசக்தி மையங்கள் மறுகட்டமைப்பு: ஈரான் அதிபர் உறுதி
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சேதம் டைந்த அணுசக்தி மையங்களை முன் பைவிட அதிக வலிமையுடன் மறு கட்டமைக்கவுள்ளதாக ஈரான் ஞாயிற் றுக்கிழமை தெரிவித்தது.
1 min
November 03, 2025
Dinamani Erode & Ooty
கோமாரிக்கல்
கால்நடைகளின் காவலன்!
1 mins
November 02, 2025
Dinamani Erode & Ooty
குருவின் கனவு நிறைவேற வேண்டும்: தருமபுரம் ஆதீனம்
'தருமபுரம் ஆதீனம் 26-ஆவது குருமகா சந்நிதானத்தின் கனவு நிறைவேற வேண்டும்' என தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் குறிப்பிட்டார்.
1 mins
November 02, 2025
Dinamani Erode & Ooty
புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை
இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Erode & Ooty
நடமாடும் உயிர்க்காவலர்
எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.
2 mins
November 02, 2025
Dinamani Erode & Ooty
கடல் கடந்தும் தமிழ்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.
1 mins
November 02, 2025
Dinamani Erode & Ooty
கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!
'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Erode & Ooty
முதல் பெண்ணாக ஆசை
காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Erode & Ooty
யுபிஐ சர்க்கிள்: அமேஸானின் புதிய வசதிகள்
தனது பணப்பட்டுவாடா செயலி மூலம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு உடனடியாக பணம் அனுப்புவதற்கான யுபிஐ சர்க்கிள் முறையில் புதிய வசதிகளை அமேஸான் அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
November 01, 2025
Translate
Change font size
