Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

வாசிப்பை நேசிப்போம்

Dinamani Erode & Ooty

|

June 19, 2025

இன்றைய அவசர யுகத்தில், நம் நடைமுறைப் பழக்கவழக்கங்களில் பல மாற்றங்கள் ஏற்படுவது இயற்கையே. வாசிப்புப் பழக்கம் என்பது நம் மனதுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் சிறந்த செயலாகும்.

இன்றைய செயற்கை நுண்ணறிவு காலத்தில் புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது.

1980, 1990 காலகட்டங்களில் நமக்குப் பிடித்த பத்திரிக்கைகளுக்காக, அவற்றுடன் இணைந்துவரும் இலவச இணைப்பு புத்தகங்களுக்காக காத்திருந்ததையும், அதில் வரும் தொடர் கதைகளை முதலில் யார் படிப்பது என்ற போட்டிகளையும் காண முடிந்தது. அத்தகைய இனிமையான நினைவுகள் இன்றைய தலைமுறையினருக்கு உள்ளனவா?

சிறு வயதிலேயே பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. தற்போதைய சூழ்நிலையில் நேரமின்மை காரணமாக, வாசிப்பின் முக்கியத்துவம் குறைந்து வருவது நல்லது அல்ல.

சிறந்த புத்தகங்கள் நல்ல நண்பர்கள் என்பதை உணர ஆரம்பித்தால், நம் வருங்கால இளைய தலைமுறை முகநூலில் நேரத்தை விரயமாக்காமல், நட்பைத் தேடாமல், நூலகங்களில் அந்த இனிய நட்பைக் கண்டறியலாம். வாசிப்பு என்பது மதிப்பெண்களுக்காக பள்ளிகளில் தரும் பாடப்புத்தகங்களைப் படிப்பது அல்ல; பொது அறிவு, தகவல் தொடர்புத்திறன், சூழ்நிலைக்கு ஏற்ப சரியான முடிவெடுக்கும் திறன் போன்றவற்றை ஒவ்வொருவரிடத்திலும் வளர்த்தெடுக்க உதவும்.

ஒரு புத்தகம் எக்காலத்திலும் தன்னுடைய சிந்தனையிலும், கருத்திலும் மாறுவதில்லை. நம்மை அறிவுள்ள, பண்புள்ள மனிதனாக சிறந்த புத்தகங்கள் மாற்றுகின்றன. நமக்குத் தேவையான பல தகவல்களைப் பெற நாம் புத்தகங்களை வாசிக்க வேண்டும். புத்தக வாசிப்பின் மூலம் கிடைத்த அறிவை நம் வாழ்நாளில் தேவையானபோது பயன்படுத்திக்கொள்ள முடியும்.

MORE STORIES FROM Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

பிகார் தோல்வி: கூடுதல் அழுத்தத்தில் காங்கிரஸ் மேலிடம்!

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்கொண்ட மோசமான தோல்வியிலிருந்து காங்கிரஸ் கட்சி இன்னும் மீளாத நிலையில், அடுத்த ஆண்டு மாநிலங்களவைத் தேர்தல்களை எதிர்கொள்ளும் சில மாநிலங்களில் கடுமையான போட்டியைச் சந்திக்கும் கட்டாயத்துக்கு அக்கட்சி தள்ளப்பட்டிருக்கிறது.

time to read

2 mins

November 22, 2025

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

2 நாள் உயர்வுக்குப் பின் பங்குச் சந்தை சரிவு

அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வரும் டிசம்பரில் வட்டியைக் குறைக்கும் என்ற நம்பிக்கை மங்கியது மற்றும் உலக சந்தைகளில் காணப்பட்ட பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் இரண்டு நாள் உயர்வுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை சரிவில் நிறைவடைந்தன.

time to read

1 min

November 22, 2025

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

ஜம்மு-காஷ்மீர் மருத்துவமனைகளில் மருத்துவர்களின் 'லாக்கர்கள்' சோதனை

பாதுகாப்பை உறுதிப்படுத்த காவல் துறை நடவடிக்கை

time to read

1 mins

November 22, 2025

Dinamani Erode & Ooty

ஆபரேஷன் 'சைஹாக்': தில்லியில் சைபர் மோசடியில் ஈடுபட்ட 877 பேர் கைது

ஆபரேஷன் 'சைஹாக்' நடவடிக்கையின் கீழ் இணையவழி சைபர் மோசடிகளுக்கு எதிரான 48 மணி நேர நடவடிக்கையின் போது 4,400-க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் சுற்றி வளைக்கப்பட்டு 877 பேர் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

November 22, 2025

Dinamani Erode & Ooty

சட்டங்கள் திருத்தப்பட வேண்டும்!

மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து உட்கொண்ட குழந்தைகள் உயிரிழந்த நிகழ்வுக்குப் பிறகு, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய நீர்ம மருந்துகள் (சிரப்) வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவில்லை என மத்திய சுகாதார, குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு உலக சுகாதார மையத்துக்கு அனுப்பிய அறிக்கையில் கூறியிருந்தது. அதன் பின்பும் உலக சுகாதார மையம் உலக நாடுகள் தங்களிடம் இந்த மருந்துகளின் இருப்பு குறித்து ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தியிருந்தது.

time to read

2 mins

November 22, 2025

Dinamani Erode & Ooty

துபையில் தேஜஸ் போர் விமானம் விழுந்து நொறுங்கி விமானி உயிரிழப்பு

துபை விமானக் கண்காட்சியில் வான் சாகசத்தில் ஈடுபட்ட இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் வெள்ளிக்கிழமை திடீரென விழுந்து நொறுங்கியது. இதில், விமானத்தை இயக்கிய ஹிமாசல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விங் கமாண்டர் நமான்ஷ் சயால் (37) உயிரிழந்தார்.

time to read

1 min

November 22, 2025

Dinamani Erode & Ooty

4 தொழிலாளர் சட்டங்கள் அமல்: மத்திய அரசு அறிவிப்பு

புது தில்லி, நவ. 21: நான்கு தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை (நவ. 21) அறிவித்தது.

time to read

1 min

November 22, 2025

Dinamani Erode & Ooty

ராயல் என்ஃபீல்ட் விற்பனை 13% உயர்வு

இந்தியாவின் முன்னணி மோட்டார்சைக்கிள் நிறுவனங்களில் ஒன்றான ராயல் என்ஃபீல்டின் மொத்த விற்பனை கடந்த அக்டோபர் மாதத்தில் 13 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

November 22, 2025

Dinamani Erode & Ooty

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் ஓய்வு

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் வெள்ளிக்கிழமை (நவ.21) ஓய்வு பெற்றார்.

time to read

1 min

November 22, 2025

Dinamani Erode & Ooty

3-ஆவது பதக்கம் வென்றார் மஹித் சந்து

ஜப்பானில் நடைபெறும் டெஃப்லிம்பிக்ஸ் போட்டியின் துப்பாக்கி சுடுதலில், இந்தியாவின் மஹித் சந்து தனது 3ஆவது பதக்கத்தை வியாழக்கிழமை வென்றார்.

time to read

1 min

November 21, 2025

Translate

Share

-
+

Change font size