Try GOLD - Free
கடன் வலையில் சீக்காவி!
Dinamani Dindigul & Theni
|October 07, 2025
க்ரோனா பெருந்தொற்றுக் காலத்துக்குப் பிறகு உலகெங்கும் மக்களின் பொருளாதார வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தனிநபர்களும், தொழில் நிறுவனங்களும் கடன் வாங்காமல் அன்றாடப் பிழைப்பை கடத்த முடிவதில்லை. பெரும்பாலான நிதி நிறுவனங்களும் அதிக கெடுபிடி எதுவுமின்றி அனைவருக்கும் கடனை வாரி வழங்க முன்வருகின்றன. இதன் மூலம் கிடைக்கும் வட்டி அவற்றுக்கு அதிக லாபத்தைப் பெற்றுத் தருகின்றன.
சமீபத்திய ஆய்வு ஒன்றின்படி, இந்தியாவில் கடன் வாங்கும் பெண்களின் எண்ணிக்கை 2019 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளுக்கு இடையே 22% அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 2024ஆம் ஆண்டில் கடன் வாங்கிய பெண்களில் வணிக நோக்கங்களுக்கு 3 சதவீதமும், தனிநபர் கடன்கள், நுகர்வோர் கடன்கள், வீட்டுக் கடன்கள் ஆகியவற்றுக்காக 42 சதவீதமும், தங்கத்தை வாங்குவதற்காக 38 சதவீதமும் அடங்குவர். மேலும், 2019-ஆம் ஆண்டு முதல் வணிகக் கடன்களுக்காக பல்வேறு வங்கிகளில் திறக்கப்பட்டுள்ள புதிய கணக்குகளின் எண்ணிக்கையும் 4.6 மடங்கு அதிகரித்துள்ளது. 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி, கடன் வாங்கியுள்ள சுமார் 2.7 கோடி பேரில் 60% பேர் பெண்கள் எனவும் கூறப்படுகிறது.
பெண்களில் பலர் மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலமும் பல்வேறு நிதி நிறுவனங்களின் மூலமும் எளிதில் கடனைப் பெறுகின்றனர். இவை பெரும்பாலும் அதிக வட்டி விகிதங்களில்தான் கிடைக்கின்றன. போதிய வருமானம் இல்லாத நிலையில் இவற்றைத் திரும்பச் செலுத்துவதில் அவர்களுக்கு சவால்கள் பல தொடர்ந்து இருந்து வருகின்றன. கணவருக்குத் தெரியாமல் தெரிந்தவர்களிடம் அதிக அளவு கடன் வாங்கும் மனைவிகளும் எண்ணிக்கையில் பெருகி வருகின்றனர். கடன் கொடுத்தவர்கள் கடனைத் திரும்பப் பெற இவர்களுக்கு அழுத்தம் கொடுக்கும்போது, அவர்களால் சில சமயங்களில் தர முடிவதில்லை.
This story is from the October 07, 2025 edition of Dinamani Dindigul & Theni.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Dindigul & Theni
Dinamani Dindigul & Theni
சபலென்கா, கெளஃபி வெற்றி
சீனாவில் நடைபெறும் வூஹான் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான பெலராஸின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
1 min
October 09, 2025
Dinamani Dindigul & Theni
இந்தியா - தென்னாப்பிரிக்கா இன்று மோதல்
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுடன் வியாழக்கிழமை (அக். 9) மோதுகிறது.
1 min
October 09, 2025
Dinamani Dindigul & Theni
யுஜிசி நெட் தேர்வு: விண்ணப்பப் பதிவு தொடக்கம்
நிகழாண்டுக்கான இரண்டாம் கட்ட யுஜிசி நெட் தேர்வு டிசம்பரில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான விண்ணப்பப் பதிவு இணையதளத்தில் தொடங்கியுள்ளது.
1 min
October 09, 2025

Dinamani Dindigul & Theni
இந்தியா - பாகிஸ்தான் மோதல் வர்த்தக ரீதியிலான திட்டமிடல்
இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் அதர்டன்
1 mins
October 09, 2025
Dinamani Dindigul & Theni
பிகாரில் தொகுதிப் பங்கீடு பேச்சு தீவிரம்
முதல்வர் வேட்பாளர் நிதீஷ் குமார்: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் அறிவிப்பு
2 mins
October 09, 2025

Dinamani Dindigul & Theni
விமானப் படையின் திறனை உலகுக்கு வெளிப்படுத்திய 'ஆபரேஷன் சிந்துார்'
'மிகக் குறைந்த நாள்களில் வெற்றிகரமான ராணுவ நடவடிக்கைக்கு போர் விமானங்களின் சக்தியை திறம்பட பயன்படுத்த முடியும் என்பதை 'ஆபரேஷன் சிந்துார்' நடவடிக்கை மூலம் உலகுக்கு இந்தியா விமானப்படை நிரூபித்துள்ளது' என்று விமானப் படை தலைமைத் தளபதி ஏ.பி.சிங் தெரிவித்தார்.
1 min
October 09, 2025
Dinamani Dindigul & Theni
ரூ.91 ஆயிரத்தைக் கடந்தது தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை காலை, மாலை என ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,480 உயர்ந்து ரூ.91,080-க்கு விற்பனையானது.
1 min
October 09, 2025

Dinamani Dindigul & Theni
கண்ணீர்க் கடலில் காஸா!
காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவின் நிபந்தனைகளை ஹமாஸ் அமைப்பு ஏற்றுக் கொண்டிருக்கிறது. எனவே, விரைவில் காஸாவில் போர் நிறுத்தம் ஏற்படலாம் என்று நம்பிக்கை பிறந்திருக்கிறது. காஸாவில் அமைதி முயற்சியில் தீர்க்கமான முன்னேற்றத்தை அடைந்து வரும் நிலையில் பிணைக் கைதிகள் விடுதலைக்கான அறிகுறிகள் ஒரு குறிப்பிடத் தகுந்த முன்னேற்றத்தை எட்டியிருக்கின்றன. நீடித்த மற்றும் நியாயமான அமைதியை நோக்கிய அனைத்து முயற்சிகளையும் இந்தியா தொடர்ந்து வலுவாக ஆதரிக்கிறது. இஸ்ரேலியக் கைதிகளை படிப்படியாக விடுவிப்பது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.
2 mins
October 09, 2025
Dinamani Dindigul & Theni
ஜோகோவிச், ரூன் முன்னேற்றம்
சீனாவில் நடைபெறும் ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரர்களான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், டென்மார்க்கின் ஹோல்கர் ரூன் ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினர்.
1 min
October 08, 2025

Dinamani Dindigul & Theni
கேரள பேரவையில் எதிர்க்கட்சிகள் 2-ஆவது நாளாக அமளி
சபரிமலை துவார பாலகர் சிலை விவகாரம்
1 mins
October 08, 2025
Translate
Change font size