Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

கலைகளும் ஆனந்தகுமாரசாமியும்!

Dinamani Dindigul & Theni

|

July 27, 2025

இந்தியக் கலைகளுக்கு, முக்கியமாக ஓவியங்களுக்கும், கலைஞர்களுக்கும் உலக அளவில் அங்கீகாரம் கிடைக்க முக்கிய காரணகர்த்தாவாக விளங்கியவர் ஆனந்த குமாரசாமி.

- -டி.ஏம். இரத்தினவேல்

இந்தியக் கலைகளுக்கு, முக்கியமாக ஓவியங்களுக்கும், கலைஞர்களுக்கும் உலக அளவில் அங்கீகாரம் கிடைக்க முக்கிய காரணகர்த்தாவாக விளங்கியவர் ஆனந்த குமாரசாமி. 19-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்தியக் கலைகள், இந்திய ஓவியங்கள் கலையம்சம் அற்றவை என்று மேலை நாட்டவரால் கருதப்பட்டன. இத்தகைய கருத்தை மாற்றிய அற்புத மனிதர் ஆனந்த குமாரசாமி.

“ஒவ்வொருவரும் தங்கள் நாட்டுக் கலைகள்தான் சிறந்தவை என்று மூடிய மனத்துடன் மற்ற நாட்டு அவலங்களையும் கலையம்சங்களையும் பார்க்கிறார்கள். ஒவ்வொரு நாட்டின் ஓவியத்தையும் கலை, கலாசாரப் பண்புகளையும் அந்தந்த நாட்டு மக்களின் மனதைப் புரிந்துகொண்டு பார்த்தால்தான் மற்றவர்கள் அவற்றை ரசிக்க முடியும். காரணம், பார்ப்பவர்களுடைய மனத்தைப் பொறுத்தது. அவர்கள் புரிந்துகொண்ட அந்த நாட்டின் கலாசாரத்தின் அளவைப் பொறுத்தது. நமது மனதுக்கு நாம் நமக்குப் பிடித்தது என்று எதை நினைத்துக் கொண்டிருக்கிறோமோ அதையே ஓவியத்திலும் விரும்புகிறோம். அப்படி இல்லாமல் கறைபடியாத திறந்த மனதுடன் பார்த்தால் பிற நாட்டு ஓவியங்களையும் ரசிக்க முடியும். பாராட்ட முடியும்” என்று சொல்லி குறை கூறியவர்களின் வாயை அடைத்தவர் ஆனந்த குமாரசாமி.

இலங்கையராகிய தந்தைக்கும், ஆங்கில தாய்க்கும் பிறந்த இவர், கீழை நாட்டுக்குரிய கற்பனைத் திறத்தையும் மேலை நாட்டுக்குரிய முழுமையையும் தம் பெற்றோரிடமிருந்து பரம்பரைச் சொத்தாகப் பெற்றவர்.

இவருடைய தந்தை ஸர். பொ. குமாரசாமி முதலியார். வழக்குரைஞரான இவர், கடந்த நூற்றாண்டின் இடைப் பகுதியில் இலங்கை மாகாண உறுப்பினராக இருந்தார். ஆசியாவின் முதன் முதலாக ஸர் பட்டம் பெற்றவர். தாயார் மிஸ் கெண்ட்டிஷ் புகழ் பெற்ற ஆங்கிலேயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்தத் தம்பதியருக்கு 1877-ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தவர் ஆனந்த குமாரசாமி.

இதனால் ஆனந்த குமாரசாமியிடம் கீழை நாட்டுக்குரிய லட்சிய நோக்கும் மேலை நாட்டுக்குரிய பூர்வமான நோக்கும் இணைந்திருந்தன. இவர் சம்ஸ்கிருதத்தையும், பாலியையும், கிரீக்கும், லத்தீனும் தம் இளம் வயதிலேயே நன்றாகப் பயின்றிருந்தார். ‘தாவரநூல்’, ‘நில நூல்’ ஆகிய விஞ்ஞானத்துறையில் தாம் செய்த ஆராய்ச்சிக்காக இவர் முனைவர் பட்டம் பெற்றிருந்தார்.

MORE STORIES FROM Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

காசி - தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்று தமிழ் கற்றுக் கொள்வீர்!

மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

time to read

1 min

December 01, 2025

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

காவல் துறை மீதான மக்களின் பார்வை மாற்றப்படுவது அவசியம்

பிரதமர் மோடி அறிவுறுத்தல்

time to read

1 min

December 01, 2025

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

எச்ஐவி தொற்று இல்லாத நிலையை உருவாக்குவோம்

நிலையை உருவாக்க உறுதியேற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

time to read

1 mins

December 01, 2025

Dinamani Dindigul & Theni

கலைஞர் பல்கலை. மசோதா: குடியரசுத் தலைவரை சந்திப்போம்

கும்பகோணத்தில் அமைக்கப்படவுள்ள கலைஞர் பல்கலைக்கழக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி குடியரசுத் தலைவரைச் சந்தித்து வலியுறுத்துவோம் என மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்தார்.

time to read

1 min

December 01, 2025

Dinamani Dindigul & Theni

ஸ்பெயின், ஜப்பான், நமீபியா வெற்றி

இங்கிலாந்து கோல் மழை

time to read

1 mins

December 01, 2025

Dinamani Dindigul & Theni

சபரிமலை தங்க மோசடி வழக்கு: கோயிலில் தந்திரியிடம் மீண்டும் விசாரணை

சபரிமலையில் தங்கம் மாயமான வழக்கில், கோயில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனருவிடம் மீண்டும் விசாரணை நடத்தி, அவரின் வாக்கு மூலத்தை சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.

time to read

1 min

December 01, 2025

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

நீதிபதிகள் மாறினாலும் தீர்ப்புகளை நிராகரிக்கக் கூடாது

உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா

time to read

1 mins

December 01, 2025

Dinamani Dindigul & Theni

வெற்றியின் முகவரி பணமா?

மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய உலகம், வசதி வாய்ப்புகள், அதிநவீன தொழில்நுட்பங்கள், ஆடம்பரங்கள் என அனைத்துக்கும் காரணமான பணத்தைத் தேடிப் பெரிய வேட்டையை நடத்திக்கொண்டிருக்கிறது. இந்த பரபரப்பான ஓட்டத்தில், ஒருவரின் வெற்றிக்கு தகுதியளிக்கும் முகவரி எது என்று கேட்டால், பலரும் தயக்கமின்றிச் சுட்டிக்காட்டுவது பொருட்செல்வமான பணத்தை மட்டுமே.

time to read

2 mins

December 01, 2025

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

அஸ்ஸாம் எம்எல்ஏ மீது தேசத் துரோக குற்றச்சாட்டு: ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎஃப்) எம்எல்ஏ அமீனுல் இஸ்லாம் மீது பதியப்பட்டிருந்த தேசத் துரோக வழக்கை குவாஹாட்டி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

time to read

1 min

December 01, 2025

Dinamani Dindigul & Theni

மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்

நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், அது எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவர் மு. தம்பிதுரை வலியுறுத்தினார்.

time to read

1 min

December 01, 2025

Translate

Share

-
+

Change font size