Try GOLD - Free
பக்தியே நல்ல பகுத்தறிவு!
Dinamani Dindigul & Theni
|May 02, 2025
ஒவ்வொரு மொழிக்கும் ஒரு சிறப்பு உண்டு. அந்தச் சிறப்பைக் கொண்டு அந்த மொழியைப் பெயரிட்டு அழைப்பர். அந்த மரபில் தமிழ் மொழியின் சிறப்பாகப் பக்தியைச் சுட்டித் தமிழைப் பக்தி மொழி என்று போற்றுவார் தனிநாயகம் அடிகள்.
ஒவ்வொரு மொழிக்கும் ஒரு சிறப்பு உண்டு. அந்தச் சிறப்பைக் கொண்டு அந்த மொழியைப் பெயரிட்டு அழைப்பர். அந்த மரபில் தமிழ் மொழியின் சிறப்பாகப் பக்தியைச் சுட்டித் தமிழைப் பக்தி மொழி என்று போற்றுவார் தனிநாயகம் அடிகள். ஒன்றன்மீது கொள்ளுகிற ஆழ்ந்த பற்றே பக்தி ஆயிற்று. அதிலும் பற்றற்றான் ஆகிய பரமன் மீது கொள்ளும் பற்றுவிடும் பற்றுக் குத்தான் பக்தி என்று பெயர். இந்தப் பக்தி, நிறை அன்பின் வெளிப்பாடு.
புராணங்கள் வகுத்துள்ள யுகங்கள் நான்குள் கிருத யுகத்தில் ஞானத்தினாலும், திரேதா யுகத்தில் தானத்தினாலும், துவாபர யுகத்தில் யாகத்தினாலும் முத்தியடைந்தனர். ஆனால் நாம் இன்று வாழக்கூடிய கலி யுகத்தில் பக்தியினால் முத்தியடையலாம். ஞானமும் தானமும் யாகமும் எல்லாருக்கும் எளிதன்று. ஆனால், பக்தி என்பது எல்லாருக்கும் உரியது. அதிலும் பாமரர்களுக்கே அது இன்னும் உகந்தது. அதனால் தான் ஞானத்தினும் யாகத்தினும் தானத்தினும் மனங்கொளாத இறைவனைப் பக்தி வலையில் படுவோன் காண்க என்பார் மாணிக்கவாசகர்.
பதினெண் புராணங்களில் ஒன்றான பத்மபுராணம் இப்படிக் கூறுகிறது, மூன்று பெண்கள் துவாரகைக்குப் பயணம் சென்றனர். வழியில் நாரதர் அவர்களைச் சந்தித்தார். "நீங்கள் யார்?" என்று கேட்டார். அவர்களுள் ஒருத்தி, "நாங்கள் இருப்பது திராவிட தேசம்; என் பெயர் பக்தி; இவர்கள் ஞானமும், வைராக்கியமும். இவர்கள் என் பெண்கள். நான் தாய்" என்றாள். இதைக்கேட்ட நாரதர் "நீ தாயா? அவர்கள் உன் பெண்களா! உன்னைப் பார்த்தால் இளமையாக இருக்கிறதே! அவர்கள் உன்னில் மூத்த கிழவிகளாகத் தோன்றுகின்றனரே" என்றாராம்.
இதிலிருந்து அறியப்படும் உண்மை என்ன? 'பக்தி என்ற குணத்தின் பிறப்பிடம் திராவிடமாகிய தமிழகம் என்பதுதானே! ஆகவே, கனிந்த உள்ளமும், கசிவந்த சொல்லும் உடைய மொழியே பக்தி இலக்கியங்கள் தோன்ற இடந்தருவன என்பது துணியப்பெறும்' என்பார் மகாவித்வான் ச.தண்டபாணி தேசிகர். இத்தகு சீரிளமைத் திறம் வியந்துதானே நாம் தமிழன்னையைப் போற்றி வாழ்த்துகிறோம்.
தமிழில் என்ன இருக்கிறது? என்று ஒருவர் வேடிக்கையாகக் கேட்டபோது, பண்டிதமணியார் பின்வருமாறு பதிலளித்தார்: "இவ்வுலகில் மக்களுக்கு வேண்டியன இரண்டு. ஒன்று 'க'; மற்றொன்று 'கா'. அதாவது, 'க' என்றால் கடவுள், 'கா' என்றால் காதல். இந்த இரண்டுக்குள் உலகம் அடங்கும். இந்த இரண்டையும் தமிழ் போதிக்கிறது.
This story is from the May 02, 2025 edition of Dinamani Dindigul & Theni.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Dindigul & Theni
Dinamani Dindigul & Theni
சிறப்பு விசாரணைக் குழு ஏன்?
கரூர் சம்பவத்தில் உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
1 mins
October 11, 2025

Dinamani Dindigul & Theni
திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழிகள் பலியிடத் தடை
உயர்நீதிமன்றம் உத்தரவு
1 mins
October 11, 2025

Dinamani Dindigul & Theni
வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு
நிகழாண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவின் எதிர்க்கட்சியான வென்டே வெனிசுலாவின் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு (58) அறிவிக்கப்பட்டுள்ளது.
2 mins
October 11, 2025
Dinamani Dindigul & Theni
நேர் நிர்வாகம்-வாழ்வியல் மதிப்பு!
நம்மில் பலரும் அடிக்கடி கேட்கும் தத்துவம், நிகழ்காலத்தில் வாழுங்கள்; இது நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும், செயலுக்கும் அடித்தளமாக இருக்க வேண்டும். ஏனெனில், கடந்த காலத்தை மாற்றுதல் இயலாது; எதிர்காலம் என்பது உறுதியற்றது. எனவே, திறமையுடனும், விழிப்புணர்வுடனும் நாம் வாழக்கூடிய ஒரே பிரதேசம் 'இந்தக் கணம்' மட்டும்தான். அங்கு நிலவும் ஆழ்ந்த விழிப்புணர்வைத்தான், நாம் பொது வாழ்வில் நேரம் தவறாமை என்ற நாகரிகப் பண்பாகப் போற்றுகிறோம்.
2 mins
October 10, 2025

Dinamani Dindigul & Theni
பள்ளிகொண்டா ரங்கநாதர்!
தென்தமிழகத்தில் திருவரங்கம் போல, வடதமிழகத்தில் புகழ்பெற்று விளங்குகிறது, வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் திருக்கோயில்.
1 mins
October 10, 2025
Dinamani Dindigul & Theni
பாராகிளைடர் தாக்குதல்: மியான்மர் ராணுவம் ஒப்புதல்
மியான்மரில் பௌத்த திருவிழாவின்போது பாராகிளைடர் மூலம் தாக்குதல் நடத்தியதை மியான்மர் ராணுவம் ஒப்புக் கொண்டுள்ளது.
1 min
October 10, 2025
Dinamani Dindigul & Theni
மதுரையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம்: எம்.எஸ். தோனி திறந்து வைத்தார்
மதுரையில் வேலம்மாள் கல்விக் குழுமம் சார்பில் அமைக்கப்பட்ட சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
1 min
October 10, 2025
Dinamani Dindigul & Theni
சபலென்கா, கெளஃபி வெற்றி
சீனாவில் நடைபெறும் வூஹான் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான பெலராஸின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
1 min
October 09, 2025
Dinamani Dindigul & Theni
இந்தியா - தென்னாப்பிரிக்கா இன்று மோதல்
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுடன் வியாழக்கிழமை (அக். 9) மோதுகிறது.
1 min
October 09, 2025
Dinamani Dindigul & Theni
யுஜிசி நெட் தேர்வு: விண்ணப்பப் பதிவு தொடக்கம்
நிகழாண்டுக்கான இரண்டாம் கட்ட யுஜிசி நெட் தேர்வு டிசம்பரில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான விண்ணப்பப் பதிவு இணையதளத்தில் தொடங்கியுள்ளது.
1 min
October 09, 2025
Translate
Change font size