Facebook Pixel தாய் மண்ணே வணக்கம்! | Dinamani Dharmapuri - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

தாய் மண்ணே வணக்கம்!

Dinamani Dharmapuri

|

December 09, 2025

சுதந்திரப் போராட்டக் காலத்தில் இந்தியர்களின் உள்ளத்தில் சுதந்திரத் தீயைப் பற்ற வைத்த மந்திரச் சொல் 'வந்தே மாதரம்'.

- வானதி சீனிவாசன்

வங்க மொழி கவிஞரான பங்கிம் சந்திர சட்டர்ஜி 1875-இல் எழுதிய 'ஆனந்த மடம்' என்ற நாவலில், 'வந்தே மாதரம்' பாடல் இடம்பெற்றது.நம் தாய்த்திரு நாடான இந்தியாவை ஒரு தாயாக நினைத்து, அதன் இயற்கை வளங்கள், பழைமையான கலாசாரம், ஒற்றுமை உணர்வு ஆகியவற்றை வீரியமிக்க கவிதை வரிகளில் பங்கிம் சந்திர சட்டர்ஜி வடித்திருந்தார். அதனால், இந்தப் பாடலும், 'வந்தே மாதரம்' என்ற சொல்லும் இந்தியர்களின் மனதை ஆட்கொண்டது.

இந்திய மண்ணில் ஆங்கிலேயர்கள் கால் வைத்ததுமுதல் அவர்களை விரட்டுவதற்கான போராட்டம் என்பது நடந்து கொண்டேதான் இருந்தது. சுதந்திரப் போராட்டம் என்பது எவ்வித ஒருங்கிணைப்பும் இல்லாமல், தனித்தனியாக நடந்து வந்தது. ஒவ்வொரு பகுதியிலும் தங்களுக்குத் தெரிந்த வகையில், மக்களைத் திரட்டி போராடிக் கொண்டிருந்தனர்.

ஆனால், 1875-இல் இயற்றப்பட்ட 'வந்தே மாதரம்' பாடல் மெல்ல மெல்ல மக்களைச் சென்றடைந்து, ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் ஒருங்கிணைத்தது. பல்வேறு இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது. தனது சுட்டெரிக்கும் கவிதைகளால், தமிழ் நாட்டில் சுதந்திர வேட்கையை ஏற்படுத்திய மகாகவி பாரதியார், 1905-ஆம் ஆண்டு 'வந்தே மாதரம்' பாடலை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார்.

வந்தே மாதரம் பாடலின் எழுச்சிதான் ஆங்கிலேயர்களை விரட்டியடித்து; சுதந்திர இந்தியாவை உருவாக்க ஓர் இயக்கத்தை உருவாக்க தூண்டுகோலாக அமைந்தது.

1885-இல் 'சுதந்திரம்' என்ற ஒற்றை நோக்கத்துக்காக 'இந்திய தேசிய காங்கிரஸ்' தொடங்கப்பட்டது. 1896-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் நோபல் பரிசு பெற்ற வங்க கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், 'வந்தே மாதரம்' பாடலை உணர்ச்சிப் பெருக்குடன் பாடினார்.

MORE STORIES FROM Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

உ.பி.யில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து 6 தொழிலாளர்கள் உயிரிழப்பு

உத்தர பிரதேச மாநிலம், ஹமீர்பூர் மாவட்டத்தில் ஆற்றின் குறுக்கே கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த பாலம் இடிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

time to read

1 min

May 30, 2026

Dinamani Dharmapuri

காலநிலை மாற்றத்துக்கு மாற்று!

உலக வெப்பமயமாதல், காற்று மாசுபாடு, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவை இன்று மனிதகுலத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக மாற்றியுள்ளன.

time to read

2 mins

May 30, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

அறம் உணர்த்துவதே கல்வி

ஒரு தேசத்தின் உயர்ந்த சொத்து சிறந்த மாணவர்கள். அவர்களே நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கப் போகிறவர்கள்.

time to read

3 mins

May 30, 2026

Dinamani Dharmapuri

நீட் வினாத்தாள் கசிவு: பொறுப்புடைமையை உறுதி செய்ய வேண்டும்

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரத்தில் பொறுப்புடைமையை உறுதி செய்யும் வரை உண்மையான பிரச்னை ஓயாது; நமது இளைஞர்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

time to read

1 mins

May 30, 2026

Dinamani Dharmapuri

இன்று ‘குவாலிபையர் 2’: குஜராத் - ராஜஸ்தான் மோதல்

ஐபிஎல் போட்டியின் ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் வெள்ளிக்கிழமை (மே 29) மோதுகின்றன.

time to read

1 min

May 29, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

சின்னர், ரைபகினா அதிர்ச்சித் தோல்வி; ஜோகோவிச், ஆண்ட்ரீவா முன்னேற்றம்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் 2-ஆம் நிலை வீரரான இத்தாலியின் யானிக் சின்னர் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினார்.

time to read

1 min

May 29, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா...

தென்பெண்ணையாற்றின் தெற்கே வரலாற்றுப் பின்னணியுடன் அமைந்துள்ளது திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில்.

time to read

1 mins

May 29, 2026

Dinamani Dharmapuri

பிஎஸ்என்எல் வருவாய் ரூ. 25,000 கோடியாக அதிகரிப்பு!

பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-இன் வருவாய், உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டதன் காரணமாக கடந்த 2 நிதியாண்டுகளில் சுமார் 19 சதவீதம் அதிகரித்து, ரூ.25,000 கோடியை எட்டியுள்ளது.

time to read

1 min

May 29, 2026

Dinamani Dharmapuri

மௌனம் காக்கும் சி.வி.சண்முகம்

ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் செயல்படுவதென அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகிய இரு தரப்பும் முடிவெடுத்துள்ள நிலையில், அதிருப்தியில் இருந்து வரும் அக்கட்சியின் மூத்த நிர்வாகி சி.வி. சண்முகம் எம்எல்ஏவின் மௌனம் அக்கட்சிக்குள் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

time to read

1 min

May 29, 2026

Dinamani Dharmapuri

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். சுரேஷ்குமார் ஓய்வு பெற்றார்

சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியான ஆர். சுரேஷ்குமார், வியாழக்கிழமையுடன் (மே 28) பணி ஓய்வு பெற்றார்.

time to read

1 min

May 29, 2026

Listen

Translate

Share

-
+

Change font size