Facebook Pixel நிதி எழுப்பும் கேள்வி! | Dinamani Dharmapuri - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

நிதி எழுப்பும் கேள்வி!

Dinamani Dharmapuri

|

October 31, 2025

நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ. 5 கோடியிலிருந்து ரூ. 10 கோடியாக உயர்த்த வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளார். சென்னையில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் 5ஆவது கூட்டத்தில் பேசிய முதல்வர் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.

- ப. இசக்கி

தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியாக தலா ரூ. 3 கோடி வழங்கப்படும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.10 கோடி வழங்க வேண்டும் என முதல்வர் கூறியிருப்பதில் பொருள் இல்லாமல் இல்லை.

234 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாட்டில், சராசரியாக தலா ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய 39 மக்களவைத் தொகுதிகளுக்கு தலா ரூ.5 கோடி என்பது போதுமானதல்லதான். எனவே, அந்த விகிதாசாரத்தின் அடிப்படையில் கணக்கிட்டு ரூ.18 கோடி வழங்காவிட்டாலும் ரூ.10 கோடியாவது வழங்க வேண்டும் என்று கேட்கிறார்.

கடந்த 1991-மக்களவைத் தேர்தலில் 232 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் கட்சியானது நரசிம்ம ராவ் தலைமையில் மைனாரிட்டி ஆட்சியை அமைத்தது. இரண்டு ஆண்டுகளில் அதாவது 1993-இல் மூன்றாவது முறையாக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொண்டு வெற்றி பெற்றார் பிரதமராக இருந்த நரசிம்ம ராவ்.

எனவே, அதுபோன்ற தொரு நிலை மீண்டும் ஏற்படாமல் தடுக்கவும், ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளவும் எம்.பி.க்களை திருப்திப்படுத்தும் வகையில் தொகுதி மேம்பாட்டு நிதி என்ற பெயரில் அவர்கள் விருப்பப்படி வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள 1993-இல் இந்த நிதி ஒதுக்கீடு திட்டம் உருவாக்கப்பட்டு தொகுதிக்கு தலா ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

MORE STORIES FROM Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு

மத்திய கிழக்கில் போர் விரிவடைந்துவரும் நிலையில், எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் சமையல் எரிவாயு (திரவ பெட்ரோலிய எரிவாயு - எல்பிஜி) உற்பத்தியை அதிகரிக்குமாறு அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின் கீழ் அவசரகால உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.

time to read

1 min

March 07, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

வில் ஜாக்ஸ் விக்கெட் முக்கியமானது; ஹேரி புரூக் கேட்ச் விருப்பமானது

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் தாம் பிடித்த 3 கேட்ச்களில், வில் ஜாக்ஸ் கேட்ச் முக்கியமானதாக இருந்தாலும், ஹேரி புரூக் கேட்ச்சே தனக்கு விருப்பமானதாக இந்திய ஆல்-ரவுண்டர் அக்ஸர் படேல் கூறினார்.

time to read

1 min

March 07, 2026

Dinamani Dharmapuri

இன்னும் ஒரு கடமை எஞ்சியிருக்கிறது!

நடப்பு டி20 உலகக் கோப்பை போட்டியின் கடைசி கட்டத்தில் அருமையான இன்னிங்ஸ்களுடன் உயர்ந்திருக்கும் இந்திய பேட்டர் சஞ்சு சாம்சன், இறுதி ஆட்டத்தில் இந்தியாவுக்காக அதேபோல் சிறப்பான இன்னிங்ஸை விளையாடும் ஒரு கடமை எஞ்சியிருப்பதாகத் தெரிவித்தார்.

time to read

1 min

March 07, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

திருநள்ளாற்றில் சனிப்பெயர்ச்சி விழா

திருநள்ளாறு ஸ்ரீபிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் வெள்ளிக்கிழமை சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது.

time to read

1 min

March 07, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

கோவையில் ஆரிய வைத்திய பார்மஸி நிறுவனரின் மகளைக் கொன்று நகைகள் கொள்ளை

கோவையில் ஆரிய வைத்திய பார்மஸி (ஏவிபி) நிறுவனரின் மகளைக் கொன்று நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் உடன் தங்கியிருந்த நேபாள பெண்ணையும், நள்ளிரவில் வந்து சென்ற 3 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

time to read

1 min

March 07, 2026

Dinamani Dharmapuri

ரூ.20,000 கோடி மதிப்பிலான அரசுப் பத்திரங்கள் மாற்றம்

மத்திய அரசின் கடன் சுமையைச் சீரமைக்கும் நோக்கில், ரூ.

time to read

1 min

March 07, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

ஏ.ஐ. யுகத்திலும் தொடரும் வேதனைகள்!

சென்ற மாதத்தில் நெருங்கிய நட்பு வட்டத்தில் இரு உயிரிழப்புகள் ஏற்பட்டன.

time to read

3 mins

March 07, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.தர்மாதிகாரி பதவி ஏற்பு

சென்னை உயர்நீதிமன்றத்தின் 55-ஆவது தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

time to read

1 min

March 07, 2026

Dinamani Dharmapuri

சிறுமியை கொலை வழக்கை முறையாக விசாரிக்காத பெண் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

கிருஷ்ணகிரியில் சிறுமியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி கொலை செய்யப்பட்ட வழக்கை முறையாக விசாரிக்காத சேலம் அம்மாப்பேட்டை மகளிர் காவல் ஆய்வாளர் சுமித்ரா வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

time to read

1 min

March 07, 2026

Dinamani Dharmapuri

பங்குச் சந்தையில் மீண்டும் 'கரடி'யின் பிடி!

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர் பதற்றம் காரணமாக, ஒரு நாள் மீட்சிக்குப் பிறகு வாரத்தின் இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தையில் மீண்டும் 'கரடி'-யின் ஆதிக்கம் மேலோங்கியது.

time to read

1 min

March 07, 2026

Listen

Translate

Share

-
+

Change font size