Try GOLD - Free

சுருங்கும் வாழ்விடம் கேள்விக்குறியாகும் யானைகளின் பாதுகாப்பு!

Dinamani Dharmapuri

|

August 11, 2025

காட்டு யானைகளைக்காக்க மேற்கு, கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் புல் வகைகள், மரங்களைப் பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

- எஸ்.பாண்டி

பெரியகுளம், ஆக. 10:

தமிழகத்தில் ஆனைமலை, முதுமலை, சத்தியமங்கலம், களக்காடு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இடங்களில் உள்ள புலிகள் காப்பகங்கள், கோவை, ஈரோடு, தருமபுரி, வேலூர் வனக் கோட்டங்கள், வன உயிரினச் சரணாலயங்கள் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2,800-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன.

தற்போது, நாட்டில் 12 மாநிலங்களில் சுமார் 35 ஆயிரம் யானைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. யானைகள் அழிவுக்கு அவற்றின் வாழ்விடம் சுருங்குதல், விவசாயத்துக்கு காடுகளைச் சீரமைத்தல், வேட்டையாடுதல் ஆகியவை முக்கியக் காரணங்களாக உள்ளன.

யானைக்கு தினசரி 150 கிலோ பசுந்தீவனங்களும், 100 லி. தண்ணீரும் தேவை. உணவுத் தேவையை நிறைவு செய்ய யானைகள் ஆண்டுதோறும் 300 முதல் 400 சதுர கி.மீ. தொலைவு பயணிக்கின்றன. பருவநிலைக்கு ஏற்ப தங்களது வாழ்விடங்களை யானைகள் மாற்றுகின்றன.

யானைகள் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வந்தாலும், இவற்றின் மீதான தாக்குதல்களும், இதனால் ஏற்படும் இறப்புகளும் அதிகரித்து வருகின்றன.

MORE STORIES FROM Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

வாரிசுகளின் கடமை

அரசு ஊழியர்கள் பெற்றோரைப் பொறுப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும்; அவ்வாறு சரிவரக் கவனிக்காமல் புறக்கணித்தால் அந்த அரசு ஊழியரின் ஊதியத்திலிருந்து 10 முதல் 15 சதவீத ஊதியம் பிடித்தம் செய்யப்படும்; அவ்வாறு பிடித்தம் செய்யப்படும் தொகை பெற்றோரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் வகையில் விரைவில் சட்டம் நிறைவேற்றப்படும் என தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

time to read

2 mins

November 03, 2025

Dinamani Dharmapuri

திவ்யா தேஷ்முக் வெளியேறினார் 2-ஆவது சுற்றில் பிரணவ், கார்த்திக்

ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் நடப்பு மகளிர் உலகக் கோப்பை சாம்பியனான இந்தியாவின் திவ்யா தேஷ்முக், முதல் சுற்று தோல்வியுடன் வெளியேறினார்.

time to read

1 min

November 03, 2025

Dinamani Dharmapuri

வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக வழக்கு

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

time to read

1 mins

November 03, 2025

Dinamani Dharmapuri

அன்புள்ள ஆசிரியருக்கு...

காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணி எல்லா ஆட்சி காலத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ('தேவை அவசர அறிவிப்பு!'-ஆசிரியர் உரை, 28.10.25). இம்முறை மேட்டூர் அணை உரிய நாளில் திறந்து விடப்பட்டு பருவ மழை சாதகமாக இருந்த காரணத்தால் குறுவை சாகுபடியும் அதிக பரப்பளவில் நடந்தது. நெல் கொள்முதலும் எதிர்பார்த்தபடி அதிக அளவில் இருக்கும் எனத் தெரியவந்தது. ஆனால், இயற்கை செய்த சதி டெல்டா மாவட்டங்களில் தீபாவளிக்கு முன் மூன்று நாள்கள் பெய்த பெருமழைதான். தொடர் தீபாவளி விடுமுறை, தீபாவளியின்போது பெய்த மழை, நெல் கொள்முதலில் ஏற்பட்ட சுணக்கம் விவசாயிகளைப் பழிவாங்கி விட்டது. இனியாவது அசிரத்தைக்கொள்ளாமல், நெல் கொள்முதலில் உரிய நடவடிக்கை மேற்கொண்டால் விவசாயம் செழிக்கும்.

time to read

1 min

November 03, 2025

Dinamani Dharmapuri

அதிக வலிமையுடன் அணுசக்தி மையங்கள் மறுகட்டமைப்பு: ஈரான் அதிபர் உறுதி

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சேதம் டைந்த அணுசக்தி மையங்களை முன் பைவிட அதிக வலிமையுடன் மறு கட்டமைக்கவுள்ளதாக ஈரான் ஞாயிற் றுக்கிழமை தெரிவித்தது.

time to read

1 min

November 03, 2025

Dinamani Dharmapuri

கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!

'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Dharmapuri

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.

time to read

1 min

November 02, 2025

Dinamani Dharmapuri

கோமாரிக்கல்

கால்நடைகளின் காவலன்!

time to read

1 mins

November 02, 2025

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

கடல் கடந்தும் தமிழ்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.

time to read

1 mins

November 02, 2025

Dinamani Dharmapuri

உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வை மறுக்கும் மாநிலங்கள்

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் கவலை

time to read

1 min

November 02, 2025

Translate

Share

-
+

Change font size