Try GOLD - Free
என்ன வளம் இல்லை நமது திருநாட்டில்?
Dinamani Dharmapuri
|July 08, 2025
அரசியல்வாதிகள் மனிதத் தலைகளைக் கணக்கிட்டு அவர்களின் அறிவார்ந்த, ஆரோக்கிய நிலைகளை உயர்த்தாது வெறும் வாக்கு எண்ணிக்கையை மட்டும் கருத்தில் கொண்டு ஏழ்மையைப் போக்காது ஏழைகளை வளர்க்கின்றனர்.
ண்மையில் தில்லி உயர்நீதிமன்ற உத்தரவின்படி, தெற்கு தில்லி செட்டில்மென்ட் எனப்படும் மதராஸி முகாமில் (கேம்ப்) உள்ள 400 வீடுகளில் 370 வீடுகள் இடிக்கப்பட்டன. காரணம், இந்த வீடுகள் ரயில்வே துறைக்குச் சொந்தமான நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்தன. மற்றொரு காரணம், பாரா புல்லா பகுதியின் மழைநீர் வடிகால் பாதை இந்த ஆக்கிரமிப்பு வீடுகளால் அடைபட்டு இருந்தது. இதனால், ஆண்டுதோறும் மழை, வெள்ள காலங்களில் அந்தப் பகுதியே மிக மோசமாக பாதிக்கப்பட்டது.
தில்லி அரசும் இவர்களுக்கு மாற்று இடத்தில் வீடுகளை (அடுக்குமாடி குடியிருப்பு) கட்டி, இவர்களைக் குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொண்டது. ஆனால், மதராஸி முகாமில் குடியிருந்தவர்கள் தற்போது தாங்கள் குடியிருக்கும் பகுதியில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவிலுள்ள இடத்தில் குடியேறுவது, மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்; தங்கள் குழந்தைகள் படிக்கவும், தாங்கள் வேலை செய்து பிழைக்கவும் இயலாது எனக் கூறி, குறிப்பிட்ட இடத்துக்குச் செல்ல மறுத்து விட்டார்கள்.
இறுதியில் தில்லி அரசு அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவின்படி, ஆக்கிரமிப்பு உள்ள வீடுகளை இடித்து விட்டார்கள். இதனால் 400 குடும்பங்கள் வீடுகளை இழந்து தெருக்களில் தஞ்சம்புக நேர்ந்தது. இதையறிந்த தமிழக அரசு வீடிழந்த மக்களை தமிழ்நாடு இல்லத்துக்கு வரச் செய்து அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடு குறித்தான ஆணை அல்லது அவர்களுக்கு வீடு ஒதுக்கவில்லை என்ற ஆணை, ஆதார் அட்டை பரிசோதித்து தலா ரூ.8000-ஐ அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்த ஏற்பாடு செய்தது.
வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு வங்கியில் கணக்கு தொடங்க சிறப்பு முகாம் அமைத்தனர். தலா 27 கிலோ அரிசி, கோதுமை மாவு, சர்க்கரை, எண்ணெய் மற்றும் இதர சமையல் பொருள்கள் அடங்கிய பையும் வழங்கப்பட்டது. மீளாத்துயரில் இருந்த மக்களுக்குத் தமிழக அரசு ஆறுதலளித்ததை வெகுவாகப் பாராட்டலாம்.
நாட்டின் தலைநகர் தில்லியில் எப்படி, இப்படி ஏழைத் தமிழர்கள் குடியேறினார்கள்? பிழைக்க, வேலை தேடி சுமார் 2,000 கி.மீ. தொலைவு வந்தவர்கள் சுமார் 20, 30 ஆண்டுகளாக மதராஸி முகாமில் குடியேறினர். பங்களாக்களில், வீடுகளில் வீட்டுத் தூய்மைப் பணி செய்வது, அவர்களது சொகுசு வாகனங்களைத் துடைத்துச் சுத்தம் செய்வது போன்ற பணிகளைச் செய்வது தான் இவர்களின் வாழ்க்கை முறை.
This story is from the July 08, 2025 edition of Dinamani Dharmapuri.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' புதிய திட்டம் ஜன. 9-இல் தொடக்கம்
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் ஜன.
1 min
January 07, 2026
Dinamani Dharmapuri
வரைவுப் பட்டியல் வெளியீடு: உ.பி.யில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்
உத்தர பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) பிறகான வரைவுப் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
1 mins
January 07, 2026
Dinamani Dharmapuri
நாளைமுதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.
1 min
January 07, 2026
Dinamani Dharmapuri
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானின் மேற்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
1 min
January 07, 2026
Dinamani Dharmapuri
தங்கம் பவுனுக்கு ரூ.560 உயர்வு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 640-க்கு விற்பனையானது.
1 min
January 07, 2026
Dinamani Dharmapuri
37% உயர்ந்த செயில் விற்பனை
அரசுக்கு சொந்தமான நாட்டின் மிகப் பெரிய உருக்கு உற்பத்தி நிறுவனமான செயிலின் விற்பனை கடந்த டிசம்பரில் 37 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
January 07, 2026
Dinamani Dharmapuri
தமிழ்நாடு டிராகன்ஸ் அணிக்கு 2-ஆவது வெற்றி
ஹாக்கி இந்தியா ஆடவர் லீக் போட்டியில் அக்கார்ட் தமிழ்நாடு டிராகன்ஸ் 3-2 என்ற கோல் கணக்கில் ஜேஎஸ்டபிள்யு சூர்மா கிளப்பை வீழ்த்தி 2-ஆவது வெற்றியை பெற்றது.
1 min
January 07, 2026
Dinamani Dharmapuri
கருர் சம்பவம்: விஜய் ஆஜ்ராக சிபிஐ அழைப்பாணை
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் தவெக தலைவர் விஜய் ஜன. 12-ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அழைப்பாணை அனுப்பியுள்ளது.
1 min
January 07, 2026
Dinamani Dharmapuri
பொங்கல் பண்டிகைக்கு 38,175 சிறப்புப் பேருந்துகள்
அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல்
2 mins
January 07, 2026
Dinamani Dharmapuri
அசோக் லேலண்ட் விற்பனை 27% உயர்வு
முன்னணி வர்த்தக வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 27 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
January 07, 2026
Translate
Change font size
