Try GOLD - Free
பொறுப்புகளை ஏற்கும் அரசு தேவை
Dinamani Dharmapuri
|June 17, 2025
மக்களுக்கு தரமான வேலைவாய்ப்பு தேவை; இதற்கு ஒரு பொருத்தமான திட்டமிடுதல், நன்கு வரையறுக்கப்பட்ட இலக்குகள், அதற்கான வழிமுறைகள் தேவை. அனைத்தையும் தனது பொறுப்புகளாக ஏற்றுக்கொள்ளும் அரசு தேவை.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2025-26-ஆம் ஆண்டில் 4,187.017 பில்லியன் டாலராக இருக்கும் என்று சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) கணித்துள்ளது. இது ஜப்பானின் 4,186.431 பில்லியன் டாலருடன் ஒப்பிடும்போது 586 மில்லியன் டாலர் (ரூ.5,011 கோடி) அதிகமாகும். இது இந்தியாவை உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாற்றும், ஜப்பானை ஐந்தாவது இடத்திற்கு தள்ளும்.
இப்போதைய நிலையில் அமெரிக்கா (30.5 டிரில்லியன்), சீனா (19.2 டிரில்லியன்), ஜெர்மனி (4.74 டிரில்லியன்) ஆகியவை இந்தியாவைவிட உயர்ந்த பொருளாதாரத்தைக் கொண்டுள்ளன.
நீதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர். சுப்பிரமணியம் இந்த சாதனை குறித்துப் பேசியபோது இந்தியர்களுக்கு பெருமையளிப்பதாக இருந்தது.
அடுத்தகட்ட எதிர்பார்ப்புகள் என்னவென்றால், இந்தியா 2028-ஆம் ஆண்டில் 5.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்துடன் மூன்றாவது இடத்துக்கு உயரும்; ஜெர்மனியை முந்திச் செல்லும் என்பதாகும். இந்த முன்கணிப்புகளுக்காக நாம் மகிழ்ச்சி கொள்கிறோம்.
அதே நேரத்தில் இந்தியா உலகின் முதன்மையான பொருளாதார நாடாக ஏற்கெனவே உயர்ந்திருக்க வேண்டும் என்பது தான் உண்மை. மூன்றாவது, நான்காவது இடத்துக்கு போட்டியிடும் நாடாக இருந்திருக்கக் கூடாது. இவ்வாறு கூறுவதற்கு காரணம் உலகின் மிகப்பெரிய மக்கள்தொகையை நாம் கொண்டிருக்கிறோம். மக்கள்தொகை அடிப்படையில் பார்த்தால் உலகின் செல்வத்திலும், வருவாயிலும் இந்தியா 18 சதவீதத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
இப்போது வெளியாகியுள்ள கணிப்புகள் உருவாக்கிய மகிழ்ச்சியிலேயே நிலை கொண்டுவிடாமல் சிந்தித்துப் பார்க்க வேண்டிய நேரமிது. ஏனெனில், உண்மை நிலவரத்தை நேர்மையாக ஒப்புக்கொள்வது நமது சரியான இடத்தை அடைவதற்கான பாதையை வடிவமைப்பதற்கு மிக அவசியம்.
இதற்காக நாம் மூன்று விஷயங்களைக் கவனிக்க வேண்டும். முதலில் வளர்ச்சி தொடர்பாக நமக்கு கூறப்பட்டுள்ள எண்கள் சரியானதுதானா?; இரண்டாவதாக அவை சரியாக இருந்தால் நாம் பெருமிதம் கொள்ளும் அளவுக்கு இந்த வளர்ச்சி நமது நாட்டுக்கு போதுமானதா?; மூன்றாவதாக சமூகநீதியை எட்டுவதற்கு இந்த வளர்ச்சி மட்டும் போதுமானதா? என்பதாகும். இது தவிர நாட்டின் பொருளாதாரம் புதிய உச்சங்களை எட்டும்போது மக்களின் வாழ்க்கைத்தரம் எந்த அளவுக்கு சிறப்பாக மேம்பட்டுள்ளது என்பதை நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.
This story is from the June 17, 2025 edition of Dinamani Dharmapuri.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
108 ஆம்புலன்ஸ் சேவை: ஓராண்டில் 18.07 லட்சம் பேர் பயன்
அவசரகால 108 ஆம்புலன்ஸ் சேவை மூலமாக கடந்த ஆண்டில் மட்டும் 18.07 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்.
1 min
January 19, 2026
Dinamani Dharmapuri
தொழிலாளர் நலன் காப்போம்!
உழைப்பு மனித நாகரிகத்தின் அடித்தளம்.
3 mins
January 19, 2026
Dinamani Dharmapuri
சிதம்பரத்தில் தச தீர்த்தங்களில் தீர்த்தவாரி உற்சவம்
தை அமாவாசையையொட்டி, சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் தச தீர்த்தங்களில் தீர்த்தவாரி உற்சவம் ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
1 min
January 19, 2026
Dinamani Dharmapuri
மிட்செல், கிளென் அதிரடி: தொடரைக் கைப்பற்றியது நியூஸி.
இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்தை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை 2-1 எனக் கைப்பற்றியது நியூஸிலாந்து.
2 mins
January 19, 2026
Dinamani Dharmapuri
மாநில கூடைப்பந்து போட்டி: சென்னை அணி வெற்றி
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்து இறுதிப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.
1 min
January 19, 2026
Dinamani Dharmapuri
சபலென்கா, அல்கராஸ் வெற்றித் தொடக்கம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பர் 1 வீராங்கனை அரினா சபலென்கா, எம்மா ரடுகானு, எலினா ஸ்விட்டோலினா, ஆடவர் பிரிவில் முன்னணி வீரர்கள் கார்லோஸ் அல்கராஸ், ஸ்வெரேவ் வெற்றியுடன் தொடங்கினர்.
1 min
January 19, 2026
Dinamani Dharmapuri
சிரியா: குர்து ஆயுதக் குழுவிடம் இருந்து முக்கிய நகரம் மீட்பு
சிரியாவின் கிழக்குப் பகுதியில் தீவிரமாக முன்னேறி வரும் அந்நாட்டு அரசுப் படைகள், குர்து இனத்தவர்களின் ஆயுதக் குழுவான சிரியா ஜனநாயகப் படையினர் (எஸ்டிஎஃப்) கட்டுப்பாட்டில் இருந்த முக்கிய நகரான தப்காவை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றின.
1 min
January 19, 2026
Dinamani Dharmapuri
தமிழக வாக்காளர் பட்டியல்: 13 லட்சம் பேர் விண்ணப்பம்
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 13 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 min
January 19, 2026
Dinamani Dharmapuri
வடகிழக்கு பாரம்பரியத்தைப் பறைசாற்றும் குடியரசு தின தேநீர் விருந்து அழைப்பிதழ்!
இந்தியாவின் 77ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, ஜனவரி 26ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது மாளிகையில் விருந்தினர்களுக்கு வழங்கும் 'தேநீர் விருந்து' நிகழ்வுக்கான அழைப்பிதழ் தொகுப்பு, வடகிழக்கு மாநிலங்களின் பாரம்பரிய கலை மற்றும் கைவினைத்திறனை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
1 mins
January 19, 2026
Dinamani Dharmapuri
உ.பி.: அனுமதியின்றி காலி வீட்டில் தொழுகை நடத்திய 12 பேர் கைது
உத்தர பிரதேச மாநிலத்தில் காலி குடியிருப்பில் அனுமதி பெறாமல் தொழுகையில் ஈடுபட்ட 12 பேரை போலீஸார் கைது செய்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.
1 min
January 19, 2026
Translate
Change font size

